சுப்பிரமணிய சிவா
அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று
தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி
சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை.
சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட பசும்பொன் தேவரின் முன்னோடி போன்றவர். தமிழ் பேச்சும் சரி வீரவிளையாட்டுகளிலும் சரி , சிறந்து விளங்கினார்.
திருவனந்தபுரத்தில் தான் வளர்ந்தார் இந்து மதம் அவருக்கு மிக பிடித்த மதமாயிற்று. கிறிஸ்தவ பள்ளிகளிலும் பின்பு படித்தாலும் இந்து மதத்தின் மீது அவருக்கான அபிமானம் அப்படியே இருந்தது.
1905ல் நடந்த ரஷ்ய ஜப்பான் போரில், மாபெரும் நாடான ரஷ்யாவினை தோற்கடித்தது ஜப்பான்
ஆசிய நாடென்று ஐரோப்பிய நாட்டை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கையினை அதுதான் கொடுத்தது, அது இந்தியாவிலும் எதிரொலித்தது
இந்தியாவில் அது உணர்ச்சியூட்டுவதை கண்ட ஆங்கிலேயன் பிரித்தாளும் சூழ்ச்சியில் கடுமையாக இறங்கினான், வங்கம் பிரிந்ததும் முஸ்லீம் லீக் உருவானதும் அதன் பிறகுதான்
இக்காலகட்டத்தில்தான் சிவா கடுமையாக போராடினார், பலமுறை சிறைக்க்கு சென்றார்
பாரதியுடனும், வஉசியுடனும் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது, மூவரும் பாரத தாயின் தவப்புதல்வர்காளகவே போராடினர்
சிவாவினை சிவாஜி என தேசம் கொண்டாடியது.
சில இதழ்களையும் நடத்தினார். அவ்வபோது ராஜதுரோக வழக்கிலும் சிக்கினார்
1923ல் இந்திய ஒற்றுமைக்காக பாரதமாதா கோவில் அமைக்கும் வேலையில் இறங்கினார். இந்தியாவிலே முதன்முறையாக பாரதமாதா கோவில் அமைக்க பாப்பாரபட்டி அருகே இடம் வாங்கினார்
கல்கத்தாவிலிருந்து தேசபந்து சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார்.
இனி பொறுப்பதில்லை என கொதித்த அரசு அவரை இம்முறை கடும் சிறையில் அடைத்தது, அங்கேதான் அவரை தொழுநோய் தாக்கியது,
அந்நோய் தாக்க வைக்கபட்டது, அதன் காரணமாக அவர் பொதுவிடத்தில் நடமாட முடியாதவாறு தடை விதித்தது பிரிட்டிஷ் அரசு
ஆனாலும் உடலை மூடியபடி சுற்றிவந்து பேசி கொண்டே இருந்தார் சிவா
தொழுநோயாளியாக சுற்றிவந்தார் சிவா, அவரின் நண்பர் வ உசி செக்கிழுத்துகொண்டிருந்தார், பாரதியார் வறுமையில் வாடிகொண்டிருந்தார்
இம்மூவருமே ஆங்கில புலமை மிக்கவர்கள், பெரும் அறிவாளிகள், கொஞ்சம் தலைவணங்கியிருந்தால் வெள்ளையன் அரசில் பெரும் பதவிகளை வகித்திருப்பார்கள்
ஆனால் அந்த வெள்ளை மனத்தோருக்கு பொதுநல பற்று இருந்தது, தகுதி இழந்து கொடுநோய்க்கும் கடும் வறுமைக்குள் ஆளானார்கள்
மிக பெரும் காரியத்தில் இறங்கிய சிவா, தன் 41ம் வயதிலே தொழுநோய்க்கு பலியானார்.
இன்று அவரின் பிறந்தநாள்
பாரத தாய்க்கு அவர் கட்ட நினைத்த கோவில் கட்டபடாமலே போய்விட்டது, சுதந்திர இந்தியாவிலும் அது கட்டபடாமல் இருப்பதுதான் வினோதம்
தேசம் முழுக்க தேச பக்தி பொங்கும் இக்காலத்தில், தமிழகத்தில் சில சில்லறை பிரிவினைவாதிகள் அதிகம் பேசும் காலத்தில் உடனடியாக செய்யவேண்டியது அந்த சிவாவின் கனவான பாரதமாதா கோவிலை கட்டவேண்டியது
தேசபக்தர்கள் அதனை செய்யலாம் அதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் என்ற எந்த பேதமும் இல்லை. தேசம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது
ராமர் கோவிலை விட பாரதமாதா கோவில் முக்கியமா இல்லையா என்றால், நிச்சயம் மகா முக்கியம்.
அந்த பாரதமாதா ஆலயம் அமைப்பதே சுப்பிரமணிய சிவா போன்ற உன்னத தியாகிகளுக்கு செய்யும் மரியாதை
தேசத்திற்காக தன் வாழ்வினையே தியாகம் செய்த அந்த மாபெரும் தேசபக்தனின் பிறந்த நாளில் இத்தேசம் அவரை நன்றியோடு வணங்குகின்றது
[ October 4, 2018 ]