செஸ் ஒலிம்பியாட்
பிரதமர் மோடி சர்வதே செஸ் ஒலிம்பியாட்டின் சுடரை நேற்று ஏற்றியுள்ளார்
உலக சதுரங்க போட்டி பேரவை செஸ் ஒலிம்பியாட் எனும் மாபெரும் செஸ் போட்டியினை இந்திய தமிழகம் மாமல்லபுரத்தில் நடத்துகின்றது, 44வது செஸ் ஒலிம்பியாட் இது, பெரும்பாலான விளையாட்டுக்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும்
இதற்கான ஜோதி ஒலிம்பிக் தீபம் போல் ஏற்றபட்டு 75 நகரங்கள் வழியாக மகாபலிபுரத்தை வந்தடையும், அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொள்வார்
சதுரங்கம் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, அக்கால பாரதத்தில் அரசர்கள் அதிகம் அவர்களுக்குள் போர்களும் அதிகம்
போர் என்பது வெறும் ஆயுதங்களின் மோதலோ ஆட்களின் மோதலோ அல்ல, அங்கு புத்தியும் வியூகமும் களநிலைக்கு ஏற்ப மாறும் தந்திரோபாயங்களும் முக்கியம்
இதனால் ஓய்வில் கூட அரசர்கள் போர் நினைவுடன் இருக்க யானை, குதிரை,சிப்பாய், அரசர், சேனாதிபதி என விளையாடவைக்கபட்டார்கள்
பாரத கண்டத்தில் அன்று போர் செய்யும்பொழுதும் தர்மம் இருந்தது, சிப்பாய் இப்படி முன்னேற வேண்டும், சேனாதிபதி இப்படித்தான் வரவேண்டும், குதிரைபடை இப்படித்தான் பாய வேண்டும், வலுவான யானை இப்படித்தான் நகரவேண்டும் என்றெல்லாம் விதிகள் இருந்தன
அந்த விதிகளுக்குள்தான் பலசாலி வியூகபடி போரிட வேண்டும், விளையாட்டின் ஒரே நோக்கம் மன்னனை காப்பது
அந்த விதிப்படிதான் சதுரங்கம் அமைக்கபட்டது, அரண்மனையில் அவை ராஜ விளையாட்டுக்களாக இருந்தன, வெகுகாலம் அது அரச ரகசியமாக இருந்தது
காலங்கள் மாற பிறநாட்டு அரசர்கள் வர வர அது அரண்மனை விட்டு இதர நாட்டு அரசவைக்கு பறந்தது
இந்தியாவின் ஆரம்பகால சதுரங்கத்தில் ராணி இல்லை, அதற்கு பதிலாக தேர்படையினர் இருந்தார்கள் என்கின்றது ஒரு குறிப்பு, பல நாடுகளில் விளையாடும் பொழுது பிற்காலத்தில் மாறுபாடுகள் வந்தன, சுவாரஸ்யத்துக்காக ராணிக்கு அதிக அதிகாரம் கொடுக்கபட்டது
இன்று உலகின் அறிவார்ந்த விளையாட்டுக்களில் நம்பர் 1 விளையாட்டாக செஸ் எனும் சதுரங்கம் விளங்குகின்றது
சதுரங்கம் எனும் செஸ் போட்டி இந்தியாவில் தொடங்கியதற்கான ஆதாரம் எளிதானது, ஆம் அன்று இந்தியா தவிர எந்த நாட்டிலும் யானை படை இல்லை, யானைபடை இந்தியாவில் மட்டும்தான் இருந்தது
அது ஒன்றே சதுரங்கம் இந்தியாவில் தோன்றியதற்கான பெரும் சாட்சி, பிற்காலத்தில் கோட்டை என அந்த காய் சொல்லபட்டாலும் நகரும் கோட்டை எந்த நாட்டு படையில் இருந்தது என்றால் யாரிடமும் பதில் இல்லை
வெள்ளையன் செய்த திரிபு அது
சதுரங்கம் இந்தியாவின் பெருமை, ஒரு காலத்தில் விதிகளுக்குட்பட்ட போரை இந்திய மன்னர்கள் தர்மபடி நடத்தினார்கள், அதுவும் ராஜாவினை உடனே கொல்லாமல் எச்சரிக்கை கொடுத்துத்தான் உரிய நேரமும் அவகாசமும் கொடுத்துத்தான் வீழ்த்தினார்கள் அந்த அளவு யுத்தத்திலும் தர்மம் காத்த பூமி இது என்பதை சொல்லும் விளையாட்டு
இந்தியாவின் தர்மத்தை சொல்லும் அந்த விளையாட்டை பாரத தர்மத்தின் தலைவன் மோடி தொடங்கி வைத்திருக்கின்றார், பாரதம் அதில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்
சத்திரங்க விளையாட்டு மூளையை உபயோகித்து விளையாடும் விளையாட்டு. அதை ஆரம்பித்த பிரதமருக்கு பாராட்டுக்கள்.