ஜெயமோகனுக்கு ஓளவையார் தாசியாகிவிட்டார்

Image may contain: 1 person, close-up“என்னை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை? 4 பேர் காரிதுப்பினால்தானே நான் முற்போக்கு எழுத்தாளன்..” என நினைத்துவிட்டு எழுதிவிட்டார் ஜெயமோகன்

பெண் கல்வி பற்றி தொடங்கி இப்படி எழுதிவிட்டார்

//ஔவையார் பாணர் குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் விறலியராக ஆடிப்பாடுபவர்கள். அதாவது தாசிகள். ஆண்டாள் ஆலயப்பணிசெய்த உயர்குடியினர். காரைக்காலம்மையார் வணிகக்குடியினர்//

வைரமுத்துவிற்கு நன்றி சொல்லிவிட்டு ஆண்டாளை உயர்குடி ஆக்கிவிட்டார், காரைக்காரலமையாரை விட்டுவிட்டார்

ஆனால் ஓளவ்வையார் சிக்கிவிட்டார்

Image may contain: 2 people, people standingஆம், ஒளவ்வையாரை தாசியாக்கிவிட்டார் ஜெயமோகன், இனி தமிழ் உணர்வாளர்கள் தூங்கமாட்டார்கள், அவர்களுக்கு வேலை கிடைத்தாயிற்று

பொதுவாக ஒளவையார் பற்றி பல குழப்பங்கள் உண்டு, முருகப்பெருமான் சுட்ட பழம் கொடுத்த ஒளையார் வேறு, மூதுரை பாடிய ஓளவையார் வேறு, அதியமானுக்கு ஆதரவாக போர் தவிர்த்தவர் வேறு என பல குழப்பம் உண்டு

ஒளையார் என்பது மூத்த மகளிரை சொல்லும் சொல்லாக இருக்கலாம் , அவ்வா என்றால் இன்றும் தெலுங்கில் பாட்டி என்றே பொருள் என்பதால் மிகுந்த வயதுடைய பாட்டி , சுருக்கமாக பாட்டி சொல் என முடிவு செய்தார்கள்

இந்த ஜெயமோகனுக்கு ஓளவையார் தாசியாகிவிட்டார்,

இனி “எரிதழல் கொண்டுவா, ஜெயமோகனை எரித்துவிடுவோம்” என செந்தமிழர் கிளம்புவார்கள்

முப்பாட்டன் முருகன் பழம் கொடுத்தது தாசிக்கா? என ஒரு கூட்டம் கிளம்பலாம்

விஷயம் பற்றி எரியலாம்

கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் அருகே ஒளையாருக்கு சிறிய கோவில் உண்டு, அங்கு சென்று இப்பொழுதே மன்னிப்பு கேட்டுவிடுவது ஜெயமோகனுக்கு நல்லது