டிக் டிக் டிக்
ஜேம்ஸ் கேமருனின் டைட்டானிக்கை பார்த்துவிட்டு குளத்தில் பரிசல் கவிழ்ந்து காதலனும் காதலியும் தவிப்பதை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் டிக்.டிக்.டிக் என்றொரு படம் வந்திருக்கின்றது, ஹாலிவுட் படங்களுக்கே உரிய விண்கல் படம். ஆர்கமகெடான் முதல் கிராவிட்டி வரை பல காட்சிகளை அப்படியே சுட்டு அதனுடன் கமலஹாசனின் விக்ரம் படத்தையும் கலந்து என்னவோ எடுத்திருக்கின்றார்கள்
ஹாலிவுட்டில் இப்படி ஏராள படங்கள் வந்துவிட்டதால், தமிழ்படம் தவிர எதுவும் பார்க்காதவர்களுக்கு இப்படம் வித்தியாசமாக தெரியலாம், உலக சினிமா புரிந்தால் படம் ரசிக்காது
காரணம் இத்தகைய கதைகளை ஹாலிவுட்டில் எடுக்கும் ஸ்டைலே வேறு, அவர்கள் கற்பனையும் காட்சி அமைப்பும் விஞ்ஞானிகளுக்கே ஆர்வத்தை தூண்ட கூடியவை
இங்கு அப்படி எல்லாம் சாத்தியம் அல்ல என்றாலும் இம்மாதிரி கதைகளுக்கு தமிழ்சினிமா திரும்புவது வாழ்த்துகுரியது
இப்படிபட்ட கதைகள் வந்தால் வரவேற்கலாம்
படத்தை பார்த்தால் சிந்தனையில் சுஜாதா வந்து போகின்றார், அவர் மட்டும் இப்படத்தில் இருந்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், சந்தேகமில்லை
அப்படிபட்ட தமிழக பல்துறை எழுத்தாளர்கள் இன்று இல்லை, இருப்பவர்களிடம் சுவாரஸ்யமும் விரல்நுனி தகவலும் இல்லை
சுஜாதா போன்று இன்னும் பலர் வரும்பொழுது இம்மாதிரி படங்கள் தமிழில் நிச்சயம் வெற்றிபெறும் சந்தேகமில்லை
ஆயினும் இப்படம் தமிழ் சினிமாவினை புதிய வழிக்கு திருப்பும் முயற்சி இது, அந்த முயற்சிக்கு வாழ்த்துக்களை சொல்லியே தீரவேண்டும்
படத்தில் அந்தரத்தில் பெரும் சாகசங்களை ஜெயம் ரவி செய்யும்பொழுது, பழனிச்சாமிதான் தமிழகத்தை அனாசயமாக ஆளுகின்றார் என்ற நினைப்பும் மின்னல் வேகத்தில் வந்து போகின்றது