தமிழகத்தில் நடக்கும்…

தமிழகத்தில் நடக்கும் இந்துதுவேஷ சர்ச்சைகளெல்லாம் 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியன் விதைத்த விதைகள், போர்ச்சுகீசியனும் அவனை தொடர்ந்து பிரிட்டிஷ்காரனும் வளர்த்த விஷ விதைகள்

இந்த நச்சு செடிகள் வயலில் களைபோல இருந்து வெள்ளையனுக்கு காவல் இருந்தன, அவன் அதனை நீதிகட்சியாகவும், திராவிட கழகமாகவும் மாற்றினான்

அதிகம் இஸ்லாம் இந்து மோதல் இல்லாமல் இந்து மக்கள் பெரும்பான்மையான தமிழகத்தை குழப்பவும் மதமாற்றம் செய்யவும், இந்த குழப்பத்தில் வெள்ளையன் வேண்டும் என்ற குரல் எழவும் அவனுக்கு இப்படியான ஒட்டுகுழுக்கள் தேவைபட்டன‌

மன்னர்கள் கட்டுபாட்டில் இருந்த மடங்களும் கோவில்களுமே இந்துமதத்தை தாங்கிநிற்க அவற்றை அழித்தால் எல்லாம் அழியும் மதமாற்றம் எளிதாகும் என கணக்கிட்டான்

நீதி கட்சி, திக என்றெல்லாம் இருந்த ஒட்டுகுழுக்களை 1947லே தடை செய்திருக்க வேண்டும், வாய்ப்பு பிரகாசமாக இருந்தது

ஆனால் நேரு எனும் குழப்பவாதி பிரதமரானதும், காமராஜரின் ஆதிக்க காங்கிரஸ் இங்கு ஆளவந்ததும் பிரச்சினையினை இன்னும் பெரிதாக்கின‌

நேரு ஒரு பிரிட்டிஷ் அடிமை, அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மை. அவர் மிஷனரிகள் இந்தியாவில் தங்கி மதமாற்றம் செய்யவும் இந்துமதம் ஒழியவும் பெரும் விருப்பம் கொண்டிருந்தார்

இந்துக்களுக்கு பாதுகாப்பான சட்டம் எதையும் அவர் இயற்றவில்லை

காமராஜருக்கும் ராஜாஜி போன்றோர் அரசியல் எதிரிகளாக இருந்ததால் அவருக்கும் திராவிட பாசம் இருந்தது, அவரும் தன்னை நாத்திகனாக கருதினார்

இதில்தான் திமுக வளர்ந்தது, அப்பொழுதும் நாத்திகம் பேசிவளரமுடியாது என்பதால் ராமசாமி நாயக்கனை தள்ளிவைத்து தமிழ் தமிழர் என வளர்ந்தது

அது ஆட்சிக்கு வந்ததும் அதன் திறமையின்மை பல்லிளித்தது

இந்த ஊழலையும் திறமையினையினை போக்க இந்துக்களையும் இந்தியாவினையும் சீண்டுவது அவர்கள் வழமையாயிற்று, திகவினை திமுக அணைத்து இந்த குழப்பத்தை தொடங்கி வைத்தது

1972ல் உட்கட்சி பூஸல், இந்தியாவின் வங்கபோர் வெற்றி , மக்களிடம் பெரும் அதிருப்தியில் இருந்த திமுக என எல்லாம் அவர்களுக்கு எதிராக இருக்கும்பொழுது ராமன் படத்தை செருப்பால் அடித்து திமுகவுக்கு உதவினார் ராம்சாமி நாயக்கன்

அதிலிருந்தே திமுகவுக்கு நெருக்கடி வரும்பொழுதெல்லாம் இந்துக்களை சீண்டி தங்கள் இயலாமையினை திசை திருப்புவது வழமையாயிற்று

பின் நெருக்கடி காலம் எம்ஜிஆர்காலம் என திமுக அடக்கி வாசித்தது, அப்பொழுதுதான் தான் நம்பாத கடவுளின் வேலுக்காக திருசெந்தூருக்கு நடந்தார் கருணாநிதி

பின் ஈழபிரச்சினை இதர பிரச்சினை வந்து நிலமையினை அவர்களுக்கு சாதகமாக்கியது

ராஜிவ் கொல்லபட்டபின் ஈழபிரச்சினையில் இருந்து தமிழகம் ஒதுங்க திமுகவும் மத்திய அரசில் ஒட்ட இந்து துவேஷம் குறைந்தது

இப்பொழுது திமுக ஆட்சியின் இயலாமை மறைக்க, மத்தியில் பாஜக இவர்களை ஒட்டவிடாமல் விரட்ட கவர்னரும் அண்ணாமலையும் கங்கணம் கட்டி நிற்க மிக இக்கட்டான நிலையில் தோல்வியுற்ற அரசாக இருக்கும் திமுக பிரச்சினையினை மடைமாற்ற திருமா, ஆ.ராசா என பலரை களத்தில் இறக்குகின்றது

இவர்கள் பின்னால் மிஷனரி விளையாட்டும் இருப்பதும் நிஜம்

ஒரு விஷயம் உண்மை

இந்துமதம் யாராலும் அழிக்கமுடியா ஞானமதம், புத்தனும் மகாவீரனும் இன்னும் அரேபியனும் ஐரோப்பிய மிஷனரியுமே போராடி அழிக்க முயன்றபொழுது வெற்றிபெற்று கம்பீரமாக நிற்கும் மதம்

அது உலகெல்லாம் முன்பு பரவி இருந்தது, பின் புத்தன், இயேசு, நபி என ஆளாளுக்கு சவால்விட்டாலும் மறுபடி எழுகின்றது

ஐரோப்பாவில் இந்து ஆலயங்கள் பெருகுகின்றன, கிழக்காசியாவில் பெருகுகின்றன ஏன் அரபுநாடான துபாயில் கூட இந்துமத ஆலயம் வந்தாயிற்று

அப்படிபட்ட இந்துமதத்தை தமிழக சில்லுண்டிகளெல்லாம் மோதிபார்த்தால் அவர்கள்தான் அழிவார்களே தவிர இந்துமதம் அல்ல‌

இந்தியாவில் இந்துமதம் உன்னத நிலைக்கு செல்கின்றது, காசியும் அயோத்தியும் புதுவடிவம் பெறுகின்றன், நாடெங்கிலும் இந்து வழிபாடும் கொண்டாட்டமும் அதிகரித்திருக்கின்றன‌

தமிழகத்து இந்துமக்கள் அப்படியே இருக்கின்றார்கள், கோவில்களில் கூட்டம் அலைமோதிகொண்டே இருக்கின்றது

இங்கு நடப்பது அப்பட்டமான திசைதிருப்பல் திமுக அரசின் அதிருப்தியில் இருந்து மக்களை திசைதிருப்பும் நாடகம்

ஆனால் முன்பு மிஷனரிகளுக்கு நல்ல திற்மையான ஆட்கள் கிடைத்தார்கள், ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், பட்டுகோட்டை அழகிரி என யாரெல்லாமோ திறமையாக கிடைத்தார்கள்

அந்த அளவு அவர்கள் வாதமும் வாசிப்பும் எழுத்தும் பேச்சும் மிக கவனமாக இருக்கும்

இப்போதுள்ள மிஷனரிகள் பரிதாபத்துகுரியவர்கள் அவர்களுக்கு திருமா, வெற்றிமாறன் போன்ற இம்சைகள்தான் கிடைத்திருக்கின்றன, இந்த பதக்ளை கொண்டு அவர்களுக்கு சல்லிக்கு பிரயோசனமில்லை மாறாக பின்னடைவுதான் அடைவார்கள்