தமிழ்நாட்டில் தாமரை சில குளம் குட்டையிலாவது மலர்ந்தே தீரும்
தெருநாவுக்கு அரசர், தெருநாய்க்கு அரசர் என சொன்னால் காங்கிரசாருக்கு கோபம் வருகின்றதாம்
ஆனால் அவர் லூசு என சொன்னதை கண்டுகொள்ளமாட்டார்களாம்
இருப்பதே 4 பேர் அதில் கோஷ்டி வேறு
அந்த தெருநாவுக்கு அரசரால் உங்கள் கட்சியின் அடக்க பெட்டியில் கடைசி ஆணி அடிக்கபடுகின்றது.
தலைவிபற்றி அவர் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாம் அஞ்சி கருத்தை திரும்ப பெற முடியாது
தெருநாவுக்கு அரசருக்கும் ஒரு கோஷ்டி உருவாகிவிட்டது, இனி காங்கிரஸ் சுத்தமாக உருப்படாது
நாவுக்கு கட்டுபாடு இல்லா அரசரோடு இந்த கும்பலையும் விரட்ட வேண்டும்
கட்சி ஏன் இப்படி ஆகிவிட்டது என இப்பொழுதுதான் புரிகின்றது, இப்படி வணக்கம், சலாம் போடும் கைகள் இருக்கும் வரை “கை” உயராது
அவரை நிறுத்தசொல்லுங்கள், நாங்கள் நிறுத்துகின்றோம்
தலைவியினை அவர் பழித்தது சரி, நாங்கள் சொன்னது தவறேன்றால் அந்த தவறை சங்கம் ஆயிரம் முறை செய்யும்
காந்தி காமராஜருக்கு பின்னால் காங்கிரஸ் காக்க வந்திருக்கும் சிலர் நம்மை திட்டிகொண்டே இருக்கின்றார்
கட்சி மண்ணுக்கு கீழே 100 அடியில் கிடக்கின்றது, இதில் கட்சி மானம் போய்விட்டதென அவருக்கு கோபம் வேறு
இப்பொழுதே இந்த குதி , தமிழகத்தில் 10 சீட் கிடைத்தால் இந்தியாவினை அழித்துவிடுவார்கள் போலிருக்கின்றது
அழிந்த மண்கோட்டையில் இருந்துகொண்டு இவ்வளவு அழிச்சாட்டியம்
உண்மையில் தமிழிசை எவ்வளவு பெருந்தன்மையானவர் என இப்பொழுதுதான் புரிகின்றது, காங்கிரஸ்காரர்களை விட தமிழக பாஜகவினர் எவ்வளவோ பெருந்தன்மையானவர்கள்
மோடி முதல் தமிழிசை வரை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் பேசுகின்றார்கள், கலாய்க்கின்றார்கள் ஆனால் இயேசு போல பொறுமையாக அவற்றை எதிர்கொள்கின்றனர் தமிழக பாஜகவினர்
தமிழ்நாட்டில் தாமரை சில குளம் குட்டையிலாவது மலர்ந்தே தீரும்