தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி திருப்பம் கொடுத்தவர் சுருளி ராஜன்

Image may contain: 1 person, smiling, selfie and close-up

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி திருப்பம் கொடுத்தவர் சுருளி ராஜன்

மிக சிறந்த நடிகன் , எத்தனையோ போராட்டங்களுக்கு பின் தனக்கென ஒரு இடம் பிடித்தார்

நகைச்சுவை மட்டுமன்றி எந்த வேடத்திலும் மிக சிறப்பாக நடிக்கும் அற்புத நடிப்பு அவரிடம் இருந்தது.

சுருளி அருவி போல காமெடி அவரிடம் அப்படி கொட்டிகொண்டு வந்தது

டயலாக் டெலிவரி, முகபாவனை என சொல்லும் விஷயத்தில் வடிவேலுவுக்கு நிச்சயம் சுருளிதான் முன்னோடி, அவ்வளவு அட்டாசமான வகையில் அசால்ட்டாக பேசிசெல்வார்.

அண்ணே.. என தொடங்கும் காட்சிகளில் செந்திலுக்கும் அவர்தான் முன்னோடி

கலாய்க்கும் காட்சிகளில் கவுண்டமணிக்கும் அவர்தான் முன்னோடி

தனிபெரும் நகைச்சுவை நடிகனாக உருவாகி நின்ற சுருளிராஜன், புகழின் உச்சத்தில் இருக்கும்போது மரணமடைந்தார்

இறக்கும்பொழுது அவருக்கு வயது 41.

சுருளிராஜன் இட்டுசென்ற வெற்றிடத்தில்தான் பின்னர் கவுண்டமணி எல்லாம் முத்திரை பதிக்க முடிந்தது.

இதனால்தான் எந்த நடிகனையுமே சிலாகிக்காத கவுண்டமணி, யாரையும் அசால்ட்டாக கலாக்கும் கவுண்டமணி சுருளிராஜன் என்றால் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து மனம் கலங்கி பேசுவதை உணர முடியும்

கண்ணதாசன் , சந்திரபாபு, சாவித்திரி, நா.முத்துகுமார், கலாபவன் மணி போல மது அரக்கன் பறித்துகொண்ட கலைஞன் சுருளிராஜன்

மதுபழக்கமே அவரின் மிக இளவயது சாவுக்கு முதல் காரணம்

அந்த மகா கலைஞனின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி. மறக்க முடியாத நடிகன் அந்த சுருளிராஜன்