தமிழீழம் அமைவதை தடுத்து ஒழித்த நளினியின் காதல்
நாதா..
மேனகையே வராதே, இது கார்த்திகை மாதம் என்பதால் நான் விரதமிருக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன்
எங்கே என் கண்களை பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்
கண்ணே, அதை கண்டுவிட்டால் ஏதடி விரதம், எல்லாம் நொடியில் முறிந்துவிடாதா?
இல்லாவிட்டாலும் உங்களால் என்னை மறந்து விரதம் இருக்கமுடியுமா சுவாமி?
அதை உன் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றேன் என் மானே
என்ன செய்கின்றீர்கள் சுவாமி?
உலக செய்திகள் கந்தர் அனுபூதி என மூழ்கி கிடக்கின்றேன், போகிற போக்கில் இந்த நளினியினை இலங்கை ஜனாதிபதி ஆக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது, அப்படி நடந்தால் காதலால் ஜனாதிபதியான முதல் நபர் நளினி எனவும், காதல் ஒருவரை ஜனாதிபதியாக்கும் என்பதும் உண்மையாகிவிடும்
நாதா சிங்களவர் ஏன் அவளை ஜனாதிபதியாக்க வேண்டும்?
ஈழபோராட்டத்தை முடித்து வைத்தவளே அவள்தானே மேனகையே
நாதா, என்ன சொல்கின்றீர்கள்? ஈழபோராட்டத்தை நளினி கெடுத்து முடித்து வைத்தாளா? தமிழீழ பெருங்கனவுக்கு அவள் முற்றுபுள்ளி வைத்தாளா?
ஆமாம், அவளால்தான் ஈழபோராட்டம் நாசமானது
அவளுக்கா இங்கு கொண்டாட்டம்?
தமிழக பரிதாப கும்பலின் அரசியல் அறிவு அவ்வளவுதான், அவள் காதல்தான் ஈழபோராட்டத்தை முடித்தது கண்ணே
புரியும்படி சொல்லுங்கள் சுவாமி
மேனகையே என் அருகே வா, என் நெஞ்சின் ஓரம் சாய்து கொள் அப்பொழுதுதான் மனதை ஒருமுகபடுத்தி பழம் நினைவுகளை மீட்க முடியும், வா மேனகையே
சுவாமி…
மேனகையே, 1991 மே 21ம் தேதி இரவு 10.21க்கு வெடித்த அந்த ஒரு குண்டுதான் ஈழதமிழர் கனவை தகர்த்து புலிகளின் எதிர்காலத்தையே கேள்விகுறியாக்கிய குண்டு
அப்படியா சுவாமி?
ஆம் கண்ணே, புலிகளின் தமிழக அராகஜம் 1987க்கு பின்புதான் தொடங்கியது, எம்ஜிஆர் இருந்தவரை புலிகளை சரியாக கையாண்டார், எம்ஜிஆர் வீழ்ந்ததும் கருணாநிதியும் புலிகளும் கைகோர்த்தனர், இருவருமே யாரை யார் பயன்படுத்துவது என்ற சந்தேக அரசியலையும் செய்தனர், ஆனால் இவர்களுக்கு பொது எதிரி ராஜிவ் காந்தி
பின் என்னாயிற்று சுவாமி?
அப்பொழுது 1990ல் பிரபாகரனின் எதிரி பத்மநாபாவினை சென்னையில் நாயினை போல சுட்டு கொன்றான் புலி சிவராசன், அப்பொழுது திமுக ஆட்சி நடந்தது, 14 பேருடன் சென்னை சூளைமேட்டி பத்மநாபா கொல்லபட்ட அதிர்ச்சியில் கருணாநிதி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யபட்டார், ஆனால் புலிகள் அதை தொடர்ந்தும் வெறியாட்டம் ஆட முடிவெடுத்தனர்
ஏன் சுவாமி?
அவர்கள் பலமும் சர்வதேச ஆதரவும் அப்படி, கருணாநிதி தான் புலிகளால் பதவி இழந்த நிலையிலும் அவர்களை முழுக்க கைவிடவில்லை அவர்களை கொண்டு ஏதும் செய்யமுடியுமா என்றுதான் சிந்தித்தார், தமிழகத்தில் பத்மநாபா கொலை ஈழ போராளி இயக்கத்தின் மோதல் என அமைதி காக்கபட்டது, இன்னும் 1500 இந்திய ராணுவத்தினரை அமைதிபடையாக கொன்றும் தமிழகத்தில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லாததால் புலிகள் தமிழகமும் காஷ்மீர், பஞ்சாப் போல தேசிய விரோத பகுதி என முடிவெடுத்து ராஜிவினை கொல்ல துணிந்தனர்
இதனை என்ன தைரியத்தில் செய்தார்கள் நாதா?
புலிகளின் முதல் பயம் ராஜிவ் மறுபடியும் அமைதிபடை அனுப்பலாம் என்பது, இரண்டாம் பயம் வலுவான காங்கிரஸ் தலமை ஈழத்துக்கு நல்லதலல் என்பது. அவர்களின் முதல் தைரியம் தமிழகத்தில் எது செய்தாலும் ஆதரவு வரும் என்பது இரண்டாம் தைரியம் உலகில் மனித வெடிகுண்டால் கொல்லபடபோகும் முதல் தலைவர் ராஜிவ் என்பதால் குற்றவாளி என யாரை சொல்வதும் சிரமம், அப்படியே சொனனலும் ஆதாரமில்லா குற்றசாட்டு என தமிழகமும் திராவிடமும் தன்னை கைவிடாது என ஒரு நம்பிக்கை
ம்ம் சொல்லுங்கள் சுவாமி
இதனாலே பத்மநாபாவினை கொன்ற சிவராசனிடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது, அவனுக்கு இது மிக சவாலான விஷயம், காரணம் பத்மநாபா கொலை வேறு, ராஜிவினை நெருங்கி தற்கொலை தாக்குதல் நடத்துவது என்பது வேறு, இதனால் அவன் மிக யோசித்தான் மேற்கொண்டு தான் அப்பொழுதுதான் பத்மநாபா கொலையினை செய்திருந்ததால் சிலமுகமூடிகள் அவனுக்கு தேவைபடன
பத்மப்நாபா கொலைக்கு பின்னும் அவன் தைரியமாக வந்தானா நாதா?
ஆம், அந்த தைரியத்தை திமுக அரசும் காவல்துறையும் வழங்கியிருந்தது, பத்மநாபா கொலைக்கு பின்னும் தமிழக காவல்துறை உறக்கத்தில் இருந்ததுதான் சோகம்
வந்தவன் என்ன செய்தான் நாதா?
1991 மார்ச் மாதம் ஒரு குழுவுடன் வந்தான் அந்த கொடியவன், அவனோடு தனு, சுபா, ஆதிரை ,முருகன் என பலர் கள்ள தோணியில் வேதாரண்யம் வந்து சென்னைக்கு வந்தார்கள், அது தமிழகமெங்கும் புலிகள் பல இடங்களில் பகிரங்கமாக இருந்த நேரம்
நாதா, நம் நாட்டு ராணுவம் இலங்கையில் புலிகளால் கொல்லபட்ட நேரம் , புலிகள் இங்கு பகிரங்கமாக இருந்தார்களா?
அதுதான் மாகாண சுயாட்சி, அதுதான் டெல்லியில் சில ஜனநாயகவாதிகளின் ஆட்சி, அந்த ஜனநாயாகவாதிகளில் ராஜிவும் ஒருவர்
பின் என்னாயிற்று நாதா?
அப்படி வந்தவன் தனு மற்றும் சுபா எனும் இரு மனித வெடிகுண்டுகளுக்கு சென்னையினை பழக்கவும் தமிழக இயல்புக்கு மாற்றவும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஒரு தமிழ் முகமூடியும் தேடினான், அப்பொழுதுதான் நடிகை அற்புதம்மாள் மகன் பேரரிவாளன் மற்றும் பாக்கியநாதன் எனும் நளியினின் சகோதரன் என இருவரும் புலிகளின் அபிமானியாகவும் அடிக்கடி இலங்கைக்கு செல்பவர்களாகவும் இருப்பது தெரியவந்தது
அதற்கு முன் தெரியாதா சுவாமி?
சிவராசன் புலிகளின் தாக்குதல் பிரிவு இது பொட்டு அம்மான் கீழே வரும், அரசியல் பிரிவு வேறு அதுதான் பேரரிவாளன், பாக்கியநாதனை வைத்து சாத்தானின் படைகள் எனும் புத்தகம் மூலம் இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்த தொடங்கிற்று, புலிகளின் ரகசியபடி ஒரு பிரிவினை சேர்ந்த ஆட்களுக்கு இன்னொரு பிரிவு தெரியாது, அவ்வளவு ரகசியமான இயக்கம் அது
ஓஓ
ஆம், அப்படி சிவராசனுக்கு பேரரிவாளனும் பாக்கியநாதனும் அறிமுகமானார்கள் அப்படித்தான் நளினி, சுபா தனு என இருவருக்கும் தோழியானாள், புலி கோஷ்டியுடன் ஐக்கியமானாள்
பின் என்னாயிற்று நாதா?
சிவராசனுக்கு சகல உதவிகளையும் செய்தான் பேரரிவாளன், அவனை முகமூடியாக வைத்துதான் கார், பைக், வயர்லெஸ் பேட்டரி என எல்லாமும் வாங்கினான் சிவராசன்
அப்படியானால் பேரரிவாளன் புலிதொடர்பு அவர் அன்னைக்கு தெரியுமா?
எல்லாம் தெரியும், பேரரிவாளன் அப்பொழுது பாலிடெக்னிக் மாணவன், அவன் தந்தை குயில்தாசன் திக பிரமுகர், திக புலிதொடர்பில்தான் பேரரிவாளன் இன உணர்வாளனாக தமிழீழத்துக்கு தன்னை அர்பணித்தான் சிவராசனுக்கு எல்லா உதவியும் செய்தவன் அவனே
தெரிந்துதான் செய்தானா சுவாமி?
அதுதான் சிபிஐ விசாரணையில் ஆதாரத்துடன் நிரூபிக்கபட்டதே கண்ணே
சொல்லுங்கள்
அந்த நளினி இந்த சுபா தனுவுக்கு சென்னையினை சுட்டிகாட்டினாள், உணவு உடை என எல்லாமும் மாற்றினாள், அவர்களுக்கு தகவல் கொண்டுவரும் சிவராசனின் ஆள்தான் முருகன்
ஓ.. காதலா நாதா?
அந்த தகவல் சந்திப்பு மெல்ல மெல்ல தனிமைக்கும் தொடர்ந்தது, நளினி மிடில் கிளாசுக்கும் சாதாரணம் அவள் குடும்பத்திலும் சர்ச்சைகள் இருந்தன, அவள் ஒரு அலுவலகத்தில் 50 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்தாள், அவளிடம் தகவல் சொல்ல வந்தவன் முருகன், மெல்ல மெல்ல இருவருக்கும் காதலாயிற்று
என்ன செய்தார்கள் சுவாமி?
அந்த காதலை மறைத்தார்கள், ஆனால் கில்லாடியான சிவராசன் கண்டறிந்து பதறினான், காரணம் புலிகள் பயிற்சி வேறு தமிழ்நாட்டு பெண்கள் மனம் வேறு என்பதால் முருகனை உடனே யாழ்பாணம் செல்ல கட்டளையிட்டான்
சென்றானா சுவாமி?
சென்றிருந்தால் காட்சி மாறியிருக்கே கண்ணே, காதல் விடுமா? அது கர்ம வினை அல்லவா? சிவராசன் நளினியினை “ஆபீசர் பெண்மணி” எனும் பெயரில்தான் அழைத்தான், சிவராசன் அனுதினமும் பொட்டு அம்மானுக்கு தகவல் அனுப்புவது வழக்கம், அப்படி முருகனை திரும்ப பெறுமாறும், ஆபீசர் பெண்மணியுடன் அவன் காதல்வயபடுவது திட்டத்தை கெடுத்துவிடும் என எச்சரித்தான்
அப்படி முதலில் சிலநாட்கள் படகுக்காக காத்திருந்த முருகன் நளினியினை சந்திக்கவில்லை, துடித்த நளினி சுபாவிடம் சீறினாள், காதலன் இல்லா இடத்துக்கு நான் வரமாட்டேன் என அடம்பிடித்தாள்
அவ்வளவு காதலா சுவாமி
நம் காதலை விட அது ஒன்றும் வலுவானது அல்ல கண்ணே
ம்ம்ம்க்கும் சொல்லுங்கள்
அப்பொழுது ஏப்ரல் மாதம் நெருங்கியது, நளினி இல்லாமல் திட்டம் நிறைவேறாது என்பதால் சில நிபந்தனைகளுடன் முருகனை திரும்ப பெற்று இணைத்து கொண்டான், திட்டபடி கொலை முடிந்ததும் நளினியும் முருகனுடன் யாழ்பாணம் திரும்ப வேண்டும், சிக்கி கொண்டால் சாக வேண்டும், நளினி இதை ஏற்றாள்
பின் என்னாயிற்று நாதா?
பின் அந்த காதலால் நளினி பரிபூரணமாக ஒத்துழைத்தாள் நளினி ஒத்துழைப்பில்தான் சுபா ஆடை ஆபரணம் என தணுவினை தமிழ்பெண்ணாக தயார் செய்தாள், சென்னையில் விபிசிங் கூட்டத்தில் தலைவரை அணுகுவது எப்படி என தனு வெடிகுண்டு இல்லாமல் ஒத்திகை பார்த்தபொழுது நளினிதான் இவர்களை அழைத்து சென்றாள்
சம்பவத்தன்று என்னாயிற்று நாதா?
சம்பவத்தன்று நளினி விடுமுறை எடுத்து இவர்களோடு திரும்பெரும்புதூர் சென்றாள் , முருகன் உள்பட எல்லோரும் வந்தார்கள், ராஜிவ் வந்ததும் தன் புலிகடமையினை காதலுக்காக நிறைவேற்றிய நளினி அடுத்து யாழ்பாணம் தப்பி வாழும் சந்தோஷத்தில் சுபாவோடுதான் சென்னை திரும்பினாள், வரும் வழியில் ராஜிவ் கொல்லபட்ட களபேர நிலையிலும் இவர்கள் பிரியாணி சாப்பிட்ட கொடுமை எல்லாம் நடந்தது
அதன் பின் என்னாயிற்று நாதா?
ராஜிவ் கொலை கென்னடி கொலைபோல முடிந்துவிடும் அபாயம் இருந்தது, காரணம் சீக்கிய, அசாம் அமைப்புக்கள் நக்சலைட்டுகள் என ராஜிவுக்கு எதிரிகள் அதிகம், புலிகள் இந்தியாவினை பகைக்க துணியமாட்டார்கள் என்பதால் அவர்கள்மேல் தொடக்கத்தில் சந்தேகமில்லை, பிரபாகரனும் தான் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லி கொண்டான், சுப்பிரமணிய சாமி மட்டும் புலிகள் மேல் சந்தேகம் கிளப்பினார் அவரையும் யாரும் கண்டுகொள்லவில்லை
அப்படியானால் எங்கும் குழப்பமா சுவாமி?
ஆம், எல்லோரும் குழம்பினார்கள், யார் கொலையினை செய்தது என்பதில் காஷ்மீர் முதல் உலகம் வரை எல்லா எதிரிகளும் அலசபட்டனர், 1991 ஏப்ரலில் யாசர் அராபத் முன்பே ராஜிவினை எச்சரித்தார், சில லண்டன் தொடர்பு மூலம் அவருக்கு தகவல் முன்பே கிடைத்திருந்தது ஆனால் யார் செய்ய போகின்றார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை
அதே குழப்பம் நீடித்திருந்தால் என்னாயிருக்கும் சுவாமி
அக்குழப்பம் அப்படியே நீடித்திருந்தால் ராஜிவினை கொன்றதுயார் என தெரியாமலே போயிருக்கும், புலிகளுக்கு தமிழக மக்கள் மேல் வெறுப்பு வந்திருக்காது, புலிகள் மேல் தடை விதிக்க இந்தியாவுக்கு காரணம் இருக்காது, தமிழக திராவிட கும்பல்கள் பிரபாகரனை இன்னொரு பிடல் காஸ்ட்றோ போல உருவாக்கியிருக்கும், சொல்லமுடியாது தமீழீழம் அமைந்தும் கூட இருக்கலாம்
அப்படியா நாதா
ஆம், அந்நிலையில்தான் விசாரணைகள் வெளிவந்து கொன்றது ஒரு கருப்புதமிழ் பெண், அவள் உடலை வாங்க ஆளில்லை, அவள் யார் என விசாரணை நகர்ந்தது, அப்பொழுது அந்த அரிபாபுவின் கேமரா எல்லா படங்களையும் புட்டு புட்டு வைத்தது , அங்கு நளினி எல்லா படத்திலும் பல்லை காட்டி கொண்டிருந்தாள்
அப்படியே அமுக்கிவிட்டார்களா சுவாமி?
இந்த பெண்ணும் ஈழ பெண் என்றுதான் கருதினார்கள், பின் காமரா கொடுத்த ஸ்டூடியோ அதிபர் இன்னும் பல தொடர்பில் நளினியினை நெருங்கினார்கள்
அப்படித்தான் வந்தார்களா, பிடித்தார்களா?
இங்குதான் கவனிக்க வேண்டும் மேனகையே, வெறும் போட்டோ வைத்துகொண்டு நளினியினை தேடவில்லை , ஹரிபாபு வீட்டில் கண்டெடுத்த ஆதார அடிப்படையில் பேரரிவாளனை பெரியார் திடலில் தூக்கினார்கள், அவன் ஏன் அங்கு பதுங்கினான் என்பது ஒன்றும் ரகசியமல்ல, சென்னைக்கும் யாழ்பாணத்துக்கும் சென்ற வயர்லெஸ் தொடர்புகளை மறித்து கேட்டார்கள், அப்பொழுதுதான் முருகன் ஆபீசர் பெண்மணி என்றெல்லாம் பெயர் வெளிவந்தது
நாதா விறுவிறுப்பாக இருக்கின்றதே..
ஆம் கண்ணே, சிபிஐ சூத்திரதாரி சிவராசனைத்தான் வயலெஸ் தொடர்புகளை கொண்டு தேடியது, அவன் அனுப்பிய தகவல்களில் பலரை கண்டறிந்தது, ஆனால் எல்லோரும் புலிகளாக இருந்ததால் எளிதாக சயனைடு கடித்தார்கள், யாரையும் உயிரோடு பிடிக்க முடியவில்லை
முருகன்?
அங்குதான் ஈழபோராட்டம் முடிந்தது மென்மையான மேனகையே, புலிகள் பயிற்சிபடி முருகன் சயனைடு கடிக்க வேண்டும், ஆனால் நளினி கடிக்க விடவில்லை, அவள் அவனை திருப்பதிக்கு அழைத்து சென்று தாலிகட்டி கொண்டாள், காரணம் கர்ப்பவதியாக இருந்தாள், நாடு அடையும் முன்பெ தமிழீழ குடியினை தயார் செய்திருந்தார்கள்
முருகன் செத்திருக்க வேண்டும சுவாமி?
இதை நான் சொல்லவில்லை, சொன்னவன் சிவராசன், அவன் தன் வயர்லெஸ் தொடர்பில் அலறினான் தமிழகம் முழுக்க சுமார் 50 புலிகள் சயனைடால் சாக, தானும் சுபாவும் சாக தயாராக இருக்க இந்த முருகன் ஏன் சாகவில்லை என கதறினான், அவனை சாகவிடாமல் செய்த நளினி எளிதாக காவல்துறையிடம் சிக்கவும் வைத்தாள், நிச்சயம் நளினி இல்லாவிட்டால் அவன் சயனைடு கடித்து செத்திருப்பான்
அய்யோ நாதா?
நளினியும் முருகனும் லட்டுபோல கிடைத்ததில் சிபிஐ நிமம்தி அடைந்தது, அதுவும் புலிகள் போல கடும் பயிற்சியும் நாடு அடைய சாக வேண்டிய கொள்கையும் உறுதியும் நளினிக்கு இல்லை, அவள் தெரிந்த உண்மையெல்லாம் சொல்லிவிட்டாள், ஒரு வகையில் உண்மையினை சொன்னால் வாழவிடுவோம் எனும் நம்பிக்கை அப்பொழுதே அவளுக்கு கொடுக்கபட்டதும் நிஜம்
சொல்லுங்கள் நாதா?
அப்படி சிவராசன் சுபா என எல்லோர் பெயரும் வந்தது, நளினி கொடுத்த தகவலிலேதான் புலிகள் கொலை செய்தார்கள் என்பதும் தெரிந்தது, தொடர்ந்து கிடைத்த ஆதாரம், வயலெஸ் பரிவர்த்தனை இன்னும் பலத்த ஆதாரங்களில் புலிகள் வசமாக சிக்கினார்கள்
பின் என்ன நடந்தது நாதா?
“நம் போராட்டம் இனி வெற்றி அடையாது,எல்லாம் அந்த முருகனாலும் ஆபீசர் பெண்ணாலும் தோற்றது” என தகவல் அனுப்பிவிட்டு செத்தான் சிவராசன் அவனோடு செத்தாள் சுபா
நளினியும் முருகனும் எல்லா புலிபோல செத்திருந்தால் உண்மை வந்திருக்காதா நாதா?
வாய்ப்பே இல்லை, பொட்டு அம்மான் ராஜிவ் கொலைபற்றி தன் கும்பலிடம் என்ன சொன்னான் தெரியுமா?
சொல்லுங்கள் நாதா
இந்த கொலை முழுக்க முழுக்க எங்கள் ஆட்களால் செய்யபட்டிருக்க வேண்டும், நம் சூழலும் வலிமையும் இல்லாத நம் அளவு இதயம் இல்லாத இந்தியர்களை சேர்த்தது தவறு அதனால் எல்லாமும் நாசமாயிற்று
பிரபாகரன் ஒன்றும் செய்யவில்லையா நாதா?
அவன் கடும் ஆத்திரத்தில் இருந்தான், அவன் நினைத்திருந்தால் சிவராசனை எளிதாக தப்ப வைத்திருக்க முடியும், ஆனால் முருகன் மூலம் நளினி எல்லாம் கசியவிட்ட ஆத்திரத்தில் எல்லாரும் செத்து தொலையட்டும் என அவன்போக்கில் இருந்தான், இப்பொழுது இருந்திருந்தால் முருகனையும் நளினிய்னையும் அவனே கொன்றிருப்பான்
ஆக நளினி முருகனோடு செத்திருந்தால் வரலாறு மாறியிருக்குமா?
நிச்சயமாய் கண்ணே, முருகன் நளினியினை கொன்று தற்கொலை செய்திருந்தால் எல்லாமே மாறியிருக்கும், அங்கிள் சைமனின் ஆமைகறி காமெடியும் நடந்திருக்காது
சுவாமி அப்படியானால் பேரரிவாளன் வழக்கு, நளினி குழந்தை வளர்ப்பு என புலிகள் ஏன் செய்தார்கள் நாதா?
அதை புலி ஆதரவாளர்கள் செய்தார்கள், புலிகளை உருவாக்கிய சூத்திரதாரிகள் செய்தார்கள், நளினியும் பேரரிவாளனும் இன்னும் பல உண்மைகளை சொன்னால் யார் யாரெல்லாம் சிக்குவோம் என்பதை ரகசியமாக வைக்க செய்யபட்ட உதவி அது, ஒரு வகையில் நளினி இருபக்கமும் ஆடி தப்பித்து கொண்டும் பணத்தை பெற்றும் கொண்டாள் என்பதுதான் நிஜம், இன்னொன்று இந்த வழக்கில் மர்மமும் உண்டு காங்கிரஸ் அதிக அக்கறை காட்டாதது, இந்திய உளவுதுறை செய்த சில மர்மம் என ஏராளம் உண்டு. ஆனாலும் முருகன் நளினியோடு சயனைடு கடித்திருந்தால் ஈழம் அமைய வாய்ப்பு உண்டு
ஆக நளினி முருகனை சயனைடு கடிக்காமல் செய்ததில்தான் ஈழம் நாசமானது இல்லையா?
ஆமாம் கண்ணே
நளினி முருகனை கொன்றிருந்தால் தானும் செத்திருந்தால் ஈழம் அமைந்திருக்கும் அல்லவா?
ஆம் பெண்ணே
நளினி தன் காதலுக்காக அதை செய்யவில்லை அப்படித்தானே நாதா?
அதேதான் கண்ணே
ஆக நளியின் அந்த காதல் காதலனை காத்த வகையில் ஒரு இனத்தின் பெருங்கனவையே சிதைத்துவிட்டது அல்லவா?
ஆம் நளினி தன் காதனுக்காக தன் வாழ்வுக்காக தமிழீழம் எனும் பெரும் கனவையே தகர்த்தாள் என்பதுதான் வரலாறு, இதனால்தான் இந்திய அரசு அவள்மேல் மெல்லிய கருணை காட்டுகின்றது, அதே கருனை சிங்களவரிடமும் இருக்கலாம்
இப்படிபட்ட துரோகியினையா தமிழுணர்வு அமைப்புகள் கொண்டாடுகின்றன?
அவர்களுக்கு ஏது தமிழுணர்வும் அறிவும்? கூலிக்கு ஆடும் கூத்தாடி தமிழ் உணர்வாளர்கள் அவர்கள்
ஆக நாதா காதலில் வீழ்ந்த பெண்ணுக்கும் சமூக பொறுப்பு வேண்டும், காதலனையும் காதலையும் தாண்டி சமூக அக்கறை வேண்டும் அல்லவா?
ஆம் கண்ணே, அதனால்தானே தமிழீழம் என்பதே நளினியால் இல்லாமல் போயிற்று
சரி நாதா, நீங்கள் விரதம் இருங்கள் நான் வருகின்றேன்?
எங்கே செல்கின்றாய் மேனகையே
வை.கோ என்பவர் பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி தன்னிடம் இருப்பதாக அடிக்கடி சொல்வார், அவர் மகனுக்கு அது தேவைபடாது என்பதால் நான் வாங்க செல்கின்றேன்
உனக்கு ஏன் சயனைடு குப்பி மேனகையே?
ஒருவேளை நாளை நீங்கள் திசைமாறினால் தேசத்தை காப்பது என் கடமை அல்லவா நாதா, நளினிபோல் நானும் பலரின் கனவினை கெடுத்துவிட கூடாது அல்லவா?, உங்கள் காதலியான நான் நீங்கள் திசைமாறினாலும் உங்களை கொன்றாவது நாட்டை காக்க வேண்டும் அல்லவா?
மேனகையே….
விரதத்தை தொடருங்கள் சுவாமி, நான் வைகோ வீடுவரை சென்று வருகின்றேன்”
Simply super
Great 👍