திமுக எனும் நாடக கம்பெனியின் சில நாடக காட்சிகள் இப்பொழுது சுவாரஸ்யமானவை

திமுக எனும் நாடக கம்பெனியின் சில நாடக காட்சிகள் இப்பொழுது சுவாரஸ்யமானவை

திராவிட நாடு வாங்கி, தனி தமிழ்நாடு வாங்கி, காங்கிரசோடு எக்காலமும் கூட்டணி இல்லை எனும் கொள்கையில் உறுதியாக இருந்து, ஈழநாடு வாங்கி இப்படி எவ்வளவோ சாதனைகளை முன்பு செய்தார்கள்

தமிழீழம் அவர்களால்தான் உருவானது

கடந்த தேர்தலில் வாக்களித்தபடி நீட் தேர்வை மானத்துடன் ஒழித்து, தங்க நகை கடனை எல்லாம் ரத்து செய்து, அரசு ஊழியர்க்கெல்லாம் அள்ளிகொடுத்து, தற்காலிக நர்ஸ்களையெல்லாம் நிரந்தமாக்கி இப்படி தாங்கள் சொன்ன பத்தாயிரம் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய உதயநிதியார் இப்பொழுது இந்தி போருக்கு கிளம்பிவிட்டார்

அவர்கள் சொந்த பள்ளியிலே நல்ல காசுக்கு இந்தி உண்டு,அவர்கள் குடும்ப டிவிகளெ நல்ல காசுக்கு வடமொழி சாணல்கள் நடத்தும் என்பதைவிட சுவாரஸ்யமானது ஒன்று உண்டு

அது இந்த உதயநிதியாரே இந்தி நடிகைகளுடன் உற்சாகமாக டூயட் பாடுவார் அவருக்கு அதில் அவ்வளவு ஆனந்தம்

அவர் ஏதோ திமுகவின் அறிவிப்பெல்லாம் நடந்துவிட்டதை போல இதுவும் நடக்கும் என கர்ஜிப்பதெல்லாம் காமெடி

திமுக அரசில் பாடநூல் பிரிவில் அரசு நியமணமாக அமர்ந்திருப்பவர் லியோனி, ஆனால் அவரின் அந்த பட்டிமன்ற எதிர்பார்ப்பு அதாவது கைதட்டல் வேண்டும் என எதையாவது பேசும் வழக்கம் இன்னும் போகவில்லை போகாது

தன் பட்டிமன்றங்களில் பேசுவதை போலவே விநாயகரையும் அன்னை சரஸ்வதியினையும் பழித்திருக்கின்றார்

சரஸ்வதி உங்களுக்கு கல்வி தரவில்லை எங்கள் ஆட்சி தந்தது என்பதெல்லாம் அபத்தம், அப்படியே இது பகுத்தறிவு என்றாலும் அதனை மாதா கோவில் வாசலுக்கு சென்று, அன்னை மரியாள் கல்வி தரவில்லை திராவிடம் தந்தது என சொல்லியிருக்கவேண்டும் அல்லவா?

விநாயகர் சதுர்த்தியினை ஒரு மாநில அரசபணியாளர் அதுவும் பாடநூல் கழக உறுப்பினர் மத துவேஷத்துடன் வன்மமாக விமர்சிப்பது நிச்சயம் கண்டனத்துகுரியது மட்டுமல்ல, தண்டனைக்குரியது

முதல்வர் ஸ்டாலினார் ஒவ்வொருநாளும் கண்விழிக்கும்போது அவர் கட்சிக்காரர்கள் வம்பிழுக்க கூடாது என நினைத்து கண்விழிப்பதாகவும் ஆனால் அப்படி நடக்காமல் அந்த கவலையில் தான் மெலிந்துவிட்டதாகவும் புலம்பினார்

இதோ லியோனி வம்பிழுத்திருக்கின்றார், ஸ்டாலினார் வழமை போல கொஞ்சம் மெலிவார் அதை தாண்டி ஏதும் செய்யமாட்டார்

உச்சமாக பொன்முடியார் தான் கடலூர் பாஷையி ஓசி பஸ் என் பேசிவிட்டதாக சொல்கின்றார், நாளை சபாநாயகர அப்பாவு ஜிபி முத்துவின் நெல்லை பாஷையில் பேசிவிட கூடாது என்பதுதான் தமிழக மக்களின் கவலை