திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்

கலைஞரே சொன்னது போல, “சில பத்திரிகைகள் எல்லா கட்சியினையும் சாதரண‌ கண்ணாடி போட்டு பார்க்கும், திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்”

நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றது, ஸ்பெக்ட்ரம் என இல்லாத இலக்கத்திற்கு பொங்கிய பத்திரிகைகள் ரபேல் ஊழலில் கனத்த அமைதி

தாமரைகனி போன்ற பிரபல அடிதடி பார்ட்டிகள் இருந்த கட்சி அதிமுக, ஏன் இப்பொழுதும் சொல்லிகொள்ளும் பலர் அங்கு உண்டு , ஆட்டோவில் ஆள் அனுப்புதல், கலெக்டர் மேல் ஆசீட் ஊற்றுதல் என அவர்களின் கிரைம் ரேட் மிக பெரியது

அவ்வளவு ஏன் சசிகலா புஷ்பாவே என் கட்சி வீட்டு வேலைகாரி என்னை அறைந்தார், எனக்கு பாதுகாப்பில்லை என பாராளுமன்றத்திலே ஒப்பாரி வைத்தார், அதெல்லாம் என்ன வகை?

அதெல்லாம் விட கட்சி தலைவி சாவே மர்மம் என ஒரு குழு விசாரிக்கின்றது என்றால் அதன் நிலை எப்படி இருக்கும்?

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் முகத்திலும் முதுகிலும் வாங்கினார்களோ தெரியாது, ஏன் பன்னீர் செல்வமே என்னை கையினை முறுக்கி கையெழுத்து வாங்கினார்கள் என பகிரங்கமாக சொன்னார்

ஆனால் பத்திரிகைகள் மூச் விடாது , அதிமுக மேல் ஒரு இமேஜ் வராதவாறு பார்த்து கொள்வார்கள்

பாஜக செய்யாத அட்டகாசமில்லை மசூதி இடிப்பு முதல் பிரியாணி அண்டா தூக்கி கொண்டு ஓடியது வரை ஏக பிரபலம், இப்பொழுது விநாயகர் சிலையோடு அவர்கள் செய்யும் அலப்பறை கொஞ்சமல்ல, விநாயகரை மூஞ்சூறு ஆக்கி இவர்கள்தான் பவனி வருகின்றார்கள்

அதை எல்லாம் யாரும் சொல்லமாட்டார்கள்

காடுவெட்டி குரு, திருமாவின் கையாட்களில் சிலர், ஜாண் பாண்டியன் எல்லோரும் எப்படிபட்டவர்கள் என்பது பல செய்திகளில் பார்த்தாலே புரியும்

ஆனால் அவர்களுக்கெல்லாம் அடாவடி கட்சி என்ற பட்டமில்லை

ஆனால் திமுகவின் சில்லுண்டிகள் எங்காவது சிக்கிவிட்டால் இதோ திமுகவின் யோக்கியதை என கிளம்பிவிடுவார்கள்

கலைஞர் சொன்னது மிகவும் சரி, “எல்லோருக்கும் கண்ணாடி, திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி”


 

கொஞ்ச நாளாக தலைவி குஷ்புவினை காங்கிரஸ் மேடைகளில் காண முடியவில்லை

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்திலும் அவர் காங்கிரஸில் அழைக்கபட்டதாக தெரியவில்லை

கனி இருக்க காய்கவர்ந்தற்று என்பார்கள், குஷ்பு இருக்க திருநாவுக்கரசை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வது சரி அல்ல‌

தமிழகத்தில் பாஜகவினை வளர்க்க டெல்லிக்கு எப்படி ஆசை இல்லையோ அப்படி காங்கிரசை வளர்க்கவும் டெல்லி காங்கிரசுக்கு சுத்தமாக ஆசை இல்லை

தமிழக காங்கிரஸுக்கு காலம் கொடுத்த கடைசி கருணை குஷ்பு,

அவரையும் விட்டுவிட்டால் தமிழக‌ காங்கிரஸை காப்பாற்ற கடவுளாலும் முடியாது

Image may contain: 1 person, selfie and closeup
———————————————————————————————————————————–

 

அப்பல்லோவில் சிசிடிவியினை ஏன் கழற்றினார்கள் என கேட்க மனமில்லாதவன் எல்லாம், போயஸ் கார்டனில் சிசிடிவி இல்லையா என கேட்க தெரியாதவன் அல்லது பயந்தவன் எல்லாம் சிசிடிவி திமுக என கலாய்த்துகொண்டிருக்கின்றான்

திமுகவிலும் பதில் சொல்ல யாருமில்லை

கலைஞர் பாணியில் “மருத்துவமனையில் சிசிடிவினை கழற்றி விட்டு மர்ம கொலை செய்ய திமுககாரனுக்கு தெரியாது” என ஒரே போடாக போட்டால் தீர்ந்தது விஷயம்.