திருச்சி சிவாவின் மகன்
திருச்சி சிவாவின் மகன் பாஜகவின் கொள்கைகள் பிடித்ததாகவோ, மோடியின் தலமைமேல் நம்பிக்கை கொண்டோ பாஜக பக்கம் வருவதாக தெரிவிக்கவில்லை மாறாக திமுகவில் தன் உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பிகொண்டேதான் வருகின்றார்
திமுகவில் பிரதான தலைவர்களின் வாரிசுகளெல்லாம் தந்தைமார் வழியில் தாத்தாமார் வழியில் அதிகாரத்தில் அமரும் பொழுது திருச்சி சிவாவின் மகனுக்கு ஒன்றுமில்லை என்பதெல்லாம் திராவிட மாடல்
திருச்சி சிவா திமுக தலமையினை நம்பி பெரும் பதவி கிடைக்காமல் போன துரதிருஷ்டசாலி கடைசிவரை ராஜ்பசபா எம்பியாக மட்டும் அலங்கரிக்கபட்டவர், அவர் மகனுக்கு அந்த ராஜ்யசபா எம்பி சீட்டும் கிடைக்கவில்லை என்றால் அது அக்கட்சியின் “சமூக நீதி” பிரச்சினை
அதை புலம்பிகொண்டு அவர் பாஜகவுக்கு வருவதை சிலர் கைதட்டி வரவேற்கலாம் ஆனால் திமுகவில் பதவி மறுக்கபட்டு வரும் நபர் பாஜகவில் மட்டும் தேச சேவை செய்வார் பதவிக்கு அப்பாற்பட்டு உழைப்பார் என நம்புவதெல்லாம் சரியல்ல
இம்மாதிரி ஆட்கள் பாஜகவுக்கு வந்தால் பெருவாரி கூட்டத்துடனாவது வரவேண்டும் அதுவும் நடக்கவில்லை
இன்னொரு விஷயம் திமுகவினை நம்பவும் முடியாது, இம்மாதிரி ஸ்லீப்பர் செல்களை அனுப்புவதெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை
திருச்சி சிவாவின் மகன் அல்ல ஏன் திருச்சி சிவாவே பாஜகவுக்கு வரட்டும், திமுக தங்களுக்கும் தமிழகத்துக்கும் செய்த துரோகங்களை பட்டியலிடட்டும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக உழைத்து கட்சிக்கு வெற்றிகளை கொடுத்து தங்களை நிரூபிக்கட்டும்
அதன் பின் அவர்களுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும்
பாஜகவுக்கு தேவை தேசாபிமானிகள் எனும் தகுதி அன்றி திராவிட சிங்கங்களின் குடும்பத்தார் எனும் அடையாளம் அல்ல, அப்படி தமிழக பாஜக கருதுமானால் அது ஆபத்தானது
பிரதான கட்சியில் இருந்து வருபவர்கள் தங்களை நிரூபித்து கட்சிக்கு ஏதும் செய்யட்டும், அதை முதலில் செய்யட்டும், அதைவிடுத்து திருச்சி சிவா மகன் ஏதோ பெரும் மக்கள் சக்தியின் தலைவன் என்பது போல் பில்டப் விடுவதெல்லாம் சரியல்ல
அண்ணாமலைக்கு மற்றுமொரு ஸகெட்ச் திமுகவிடமிருந்து? மதன் ரவிச்சந்திரன் போல!?தீண்டதகாதது திமுக மட்டும் அல்ல. அதில் இருக்கும் உறுப்பினர்களும் தான்.
சரியாக சொன்னீர்கள்.
சரியான அணுகுமுறை இது தான். மக்கள் சேவை என்ன செய்தார் சூர்யா. இந்த களேபரம் தேவையில்லை.