தென்னாட்டு சாவர்க்கர்
அந்த சுத்தமான இந்துஸ்தானி, பரிசுத்தமான பாரத புதல்வன் ஒரு வரம், மிக பெரிய வரம், தென்னாட்டு சாவர்க்கர் என வரலாற்றில் இடம் பிடித்த உன்னதமான தியாகி
தியாகி என ஒரு வார்த்தையில் சொல்லிவிடமுடியாதபடி அவரின் ஒவ்வொரு அசைவும் வலியுமே தியாக மூச்சாக வாழ்ந்த தியாக ஜோதி
அவர் எடுத்த முயற்சியும், அவர் செய்த சாதனையும் தாதாபாய் நவ்ரோஜி காட்டிய வழியின் சாயலாய் இருந்தது
இன்றும் உலகின் கப்பல் போக்குவரத்தின் பெரும் கட்டுப்பாடு அதாவது சரக்கு போக்கு கப்பல்வரத்து ஆதிக்கம் பிரிட்டன் கையில்தான் உண்டு என்றால் 1900கள் எப்படி இருந்திருக்கும்?
அக்காலகட்டத்தில் பிரிட்டனை எதிர்த்து கப்பல் விட்ட ஒரே மனிதன் அந்த வ.உ.சி அகில உலகிலே ஒரே ஒருவன் அந்த வ.உ.சி
அவன் செய்த புரட்சி உலகெல்லாம் பலத்த திருப்பங்களை ஏற்படுத்த அவனை உச்சகட்ட வெறியில் நசுக்க கிளம்பினான் வெள்ளையன், அதற்கு முழு சக்தியோடு ஆதரவளித்தான் அந்த ஆஷ்
அந்த வரலாறு கொடுமையானது, வ.உ.சி இந்தியா முழுக்க அடைந்த புகழும் அவருக்கு மக்களிடம் இருந்த ஆதரவையும் பல்வேறு வகையான நயவஞ்சக செயல்களால் சரித்த ஆஷ் அவர்மேல் கடுமையான வழக்குகளை தொடுத்தான்
திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இ.பி.கோ. பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுப் பின்னர் அது பிரிவு 107(4) ஆக மாற்றப்பட்டது.
அவ்வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே மூவரும் கைதுசெய்யப்பட்டனர். நன்னடத்தைக்காகச் செலுத்தச் சொன்ன பிணைத் தொகையை முதலில் கட்ட மறுத்து, பின்னர் ஒப்புக்கொண்டபோதும் அதை ஏற்க மறுத்துத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார் நீதிபதி விஞ்ச். சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த உத்தரவின் மீது மூவர் சார்பாகவும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அ
ங்கே விஞ்ச்சின் உத்தரவு மறுக்கப்பட்டு வழக்கும் ரத்துசெய்யப்பட்டது. அதற்கான உத்தரவு நெல்லை வந்தும்கூட பத்மநாப அய்யங்காரை மட்டும் விடுவித்துவிட்டு வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவர் மீதும் தலா இரண்டு வழக்குகள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டன.
சுப்ரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாகப் பிரிவு – 124 ஏ, அரசுக்கு எதிராக மக்களிடம் பேசியதாகப் பிரிவு – 153 ஏ ஆகிய இரண்டு வழக்குகள் வ.உ.சி. மீது பதிவுசெய்யப்படுகின்றன.
மூன்று மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இரண்டு வழக்குகளுக்கும் (20 20) நாற்பது ஆண்டு காலம் ஒன்றன் பின் ஒன்றாக அந்தமான் சிறையில் தீவாந்திரக் கடுங்காவல் தண்டனையாக வ.உ.சி. கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தத் தீர்ப்பின் மீதும் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அங்கு நாற்பது ஆண்டு காலத் தண்டனையானது (4 6) பத்து ஆண்டு காலம் அனுபவிக்குமாறு குறைக்கப்படுகிறது.
அதன் பின்னர் லண்டன் பிரிவியூ கவுன்சிலில் செய்யப்பட்ட முறையீட்டால் நாடு கடத்தல் ரத்துசெய்யப்பட்டு 10 ஆண்டுகளையும் ஒரே சமயத்தில், அதாவது 6 ஆண்டுகளுக்குள் 4 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 6 ஆண்டுகள் அனுபவிக்குமாறு குறைக்கப்படுகிறது.
6 ஆண்டுகளில் மூன்று விசேஷ கால விடுதலைக்கான குறைப்புக் காலமாக ஒன்றரை ஆண்டுகள் போக மீதம் நான்கரை ஆண்டுகளுடன் ஏற்கெனவே விசாரணைக் கைதியாக 3 மாதங்களையும் சேர்த்து, ஆக மொத்தம் நான்கே முக்கால் ஆண்டுகளை வ.உ.சி. சிறையில் இழந்திருக்கிறார்.
12.03.1908 மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டைச் சிறைக்குள் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவரும் நுழைகிறார்கள். அங்கேயே அவரை கடும் கொடுமை செய்ய சொல்லி ரகசிய உத்தரவிட்டான் ஆஷ்
ஆனால் பாளையங்கோட்டை சிறையில் அவரின் சொந்த பக்கத்து கைதிகள் இருந்ததால் அவரை தொட்டாலே சீறினார்கள், பெரும் கலவரம் நடப்பதை அறிந்த ஆஷ் அவரை வஞ்சகமாக கோவை சிறைக்கு மாற்றினான்
கோவையில்தான் உலகின் கொடிய ஜெயிலர்களில் ஒருவரான மிஞ்ஜேல் இருந்தான், முதல் 10 படுபாவிகளில் அவனும் ஒருவன்
அவனும் ஆஷூம் செய்த கூட்டு சதியில்தான் வ.உசி அந்த கொடுமை கண்டார்
அவருக்கு சணல் ஆடை உடுத்தி தலையினை மொட்டை அடித்து ஒரு வேளை கூழ் ஊற்றி காற்றும் புகாத அறையில் அடைத்து கொடுமை செய்தான் மிஞ்ஜேல்
அவர் உடல்நிலை சரியில்லாமல் போக அரிசி உணவு கொடுக்க மருத்துவர் சொன்னபொழுது புழு நெளிந்த கஞ்சியினை கொடுத்தான் அந்த கொடூரன்
அந்நிலையிலும் அவரை சணல் பிரிக்கும் எந்திரத்தைச் சுழற்ற வைத்தான் மிஞ்ஜேல், அது கைகளை பதம்பார்க்கும் எந்திரம், வ.உ.சியின் கைகள் கிழிந்து ரத்தம் வந்தது
அதனை கண்ட சக கைதிகள் பெரும் ஆவேசமாய் பொங்க, துப்பாக்கி சூடு நடத்தில் சிலரை கொன்று பலநாள் உணவில்லாமல் எல்லோரையும் போட்டு வைத்த மிஞ்ஜேல், அந்நிலையிலும் தன் குரூரத்தை விடவில்லை
கை பிய்ந்து ரத்தம் கொட்டிய வ.உ.சி.யினை செக்குகு இழுக்க வைக்க வைத்தான். இக்கொடுமையெல்லாம் பின் நீதிமன்றம் சென்றுதான் அவருக்கு ஆறுதல் கிடைத்தது
கோவைச் சிறையில் நடந்த கைதிகளின் போராட்டமும், அதற்கு நீதிமன்றத்தில் வ.உ.சி. சொன்ன துணிச்சலான சாட்சியமும், அவ்வாறு சொன்னதற்காக காங்கிரஸ் கட்சியால் அவர் கண்டிக்கப்பட்டதும் அவரது வரலாற்றில் மிகவும் முக்கியமானவை.
சிறைக் கைதி ஒருவர் தனது தலைக்கு மேலாக இருகரங்களையும் கூப்பி வ.உ.சி.யை வணங்கினார்
இதைப் பார்த்துப் பொறுக்க முடியாத ஜெயிலர் மிஞ்ஜேலால் தொடங்கப்பட்ட பிரச்சினையானது கைதிகளின் போராட்டமாக மாறி, அதை அடக்கச் செய்த முயற்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழக்க, இறுதியில் மிஞ்ஜேலை ஸ்டிரச்சரில் வைத்துத் தூக்கிச் செல்லும் நிலையில் முடிந்தது. துணை ஜெயிலராகப் பதவியிறக்கமும் பெற்றார்.
வ உ சியின் நாற்பது ஆண்டு தண்டனைக் காலமானது பத்து (4 6) ஆண்டுக் காலம் சேர்த்து அனுபவிக்கும் கடுங்காவலாக மாற்றப்பட்டது.
மீண்டு வந்த மிஞ்ஜேலும் காடன் என்பவனும் மீண்டும் அவரைச் செக்கிழுக்க வைத்தார்கள். சிறைக் கலவரம் குறித்து விசாரிக்க வந்த சிறைத் துறை ஐ.ஜி.யிடம் இருவரது அட்டூழியங்கள் குறித்தும் நேரடியாகப் புகார் சொன்னார் வ.உ.சி. அரசியல் கைதிகளை முறையாக நடத்துங்கள் என ஐ.ஜி. இருவரையும் கண்டித்தார அல்லது கண்டிப்பது போல் நடித்தார்
இதனால், கோபத்தின் உச்சிக்குச் சென்ற இருவரும் வ.உ.சி.க்கு மனரீதியான உளைச்சலைக் கொடுத்து ஒடுக்க முயல்கிறார்கள். சிறை வளாகத்தைக் கூட்டிப் பெருக்கவும் மூத்திரச்சட்டியை எடுத்துப்போகவும் சட்ட விரோதமாக நிர்ப்பந்திக்கிறார்கள்.
ஒருநாள் வ.உ.சி.க்குப் புத்திமதி சொல்ல முயன்றார் மிஞ்ஜேல். “உனக்கும் உன்னப்பனுக்கும் உன் சூப்பிரண்டிற்கும் உனையாளும் கவர்னருக்கும் புத்தி சொல்லும் தகுதி எனக்குண்டு” எனக் கூறுகிறார் வ.உ.சி அந்த துணிச்சல்தான் வ.உ.சி
அதனால், 15 வாரங்கள் அபராதம் என அறிவிக்கிறார்கள்.
ஆனால், ஒரே வாரத்தில் அவர் கண்ணனூருக்கு மாற்றப்படுகிறார். 01.12.1910 முதல் 24.12.1912 வரை கேரளத்தின் கண்ணனூரில் இருந்த 2 வருடங்கள் 22 நாட்களில் பெரிய அளவில் அவருக்குத் துன்பங்கள் தரப்படவில்லை.
கோயமுத்தூர்போலவே இங்கும் ஆய்வுக்கு வந்த ஐ.ஜி.யிடம் அவர்களின் நடத்தைகளைச் சொல்கிறார் வ.உ.சி. அதனால், ஐ.ஜி. அவருக்கு எழுத்துக் கோக்கும் வேலையைத் தர உத்தரவிட்டார். ‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’ இரு நூல்களையும் அப்போதுதான் எழுதினார்.
24.12.1912 அன்று வ.உ.சி. விடுதலையானார். சிறைக்குள் நுழையும்போது அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது சிறையிலிருந்து விடுதலையாகும் அவரை வரவேற்க நான்கு பேர் மட்டுமே காத்திருந்தனர்.
ஆங்கிலேயர்கள் எந்த நோக்கத்துக்காக வ.உ.சி.யைச் சிறைக்கு அனுப்பினார்களோ அந்த நோக்கத்தை அவர்கள் ஈடேற்றிக்கொண்டனர்.
அதன் பின்னும் வ.உ.சிக்கு வழக்கறிஞர் பட்டம் கிடைக்காமல் வெள்ளையன் நெருக்கடி கொடுத்தான், அவர் அரிசிகடைக்கு வேலைக்கு சென்றார், அந்த கடையினையே மூடவைத்தான் வெள்ளையன்
காரணம் வ.உ.சிக்கு தினமும் எப்படி அரிசி கிடைக்கலாம்?
இப்படியெல்லாம் வ.உ.சி பட்ட சித்திரவதைகளுக்கும் அவமானத்துக்கும் காரணம் அந்த ஆஷ், அந்த கொடியவனைத்தான் கோவை சிறை கொடுமைகளுக்காக சுட்டு கொன்றான் வாஞ்சிநாதன்
அப்படிபட்ட அயோக்கிய ஆஷூக்கு இங்கு மணிமண்டபம் என்பது ஜாலியன் வாலாபாக் கொடுமை செய்த டயருக்கு மண்டபம் கட்டுவது போன்றது, ஆனால் அப்படியும் ஒன்று தூத்துகுடியில் உண்டு
இதெல்லாம் வன்மையான கண்டனத்திற்குரியது, களையபட வேண்டியது
உண்மையில் ஒருமண்டபம் கொண்டாடபட வேண்டுமானால் நெல்லை தாமிரபரணி கரையிலுள்ள தைபூச மண்டபம், அங்குதான் விபின் சந்திரபால் 1908ல் அடைந்த விடுதலையினை யானைமேல் பாரததாய் படத்தை வைத்து கொண்டாடினார் வ.உ.சி
1908, மார்ச் 13ல் அந்த பெரும் ஊர்வலத்தை நடத்தினார்
அதை பொறுக்காமல்தான் ஆஷ் துப்பாக்கி சூடு நடத்தி பலர் செத்து அதனை சாக்காக வைத்துத்தான் பிள்ளையினை கைது செய்து சிறையில் போட்டான் அக்கொடியவன்
அந்த தைபூச மண்டபத்தை அழியவிட்டு ஆஷூக்கு மணிமண்டபம் என்பதெல்லாம் ஒவ்வொரு தேசாபிமானியும் தலைகுனிந்து வேதனையுடன் நிற்கும் அவமானம்
காந்திக்கு உல்லாச சிறை, நேருவுக்கு பகோபகார சிறை, சாவர்க்கருக்கும், வஉசிக்கும் கொடுஞ்சிறை என்பதும் அவர்களை அப்படி கொடுமைபடுத்திய அந்நிய பாவிகளுக்கு மணிமண்டபம் என்பதும் இத்தேசம் இன்னும் விடுதலை பெறவில்லை என்பதையன்றி எதனை காட்டுகின்றது
நெல்லை தாமிரபரணி கரையோரம் பாழடைந்து கிடக்கும் அந்த தைப்பூச மண்டபத்தை சீரமைத்து வ.உ.சி அடையாளத்துடன் அந்த வரலாற்றை மக்களுக்கு சொல்வதே அவருக்கான உண்மையான அஞ்சலியாகும்
இந்தியா இப்பொழுதுதான் சுதந்திரத்தை அடைந்திருக்கின்றது, உண்மையான இந்துஸ்தானி மோடியின் ஆட்சியில்தான் மறைக்கபட்ட உண்மைகளும் வரலாறுகளும் வெளிவருகின்றன
அப்படியான காலத்தில் இனியாவது நெல்லை, கோவை என வ .உ.சி சிந்திய ஒவ்வொரு ரத்ததுளிக்கும், சென்னையில் காங்கிரசால் கைவிடபட்டு அவர் வடித்த கண்ணீர்துளிக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கட்டும்
கண்ணீரால் அந்த தியாக திருமகனை நினைவு கூர்ந்து கதறுகின்றது தேசம்.
வ.உ.சி இந்த தேசத்தையே சுவாசித்த இந்துஸ்தான வாசி
😭💔😭
படிக்கும் போதே ரத்தம் கொதிக்கிறது!