தேவசகாயம் பிள்ளைவின் வரலாறு
தேவசகாயம் பிள்ளைவின் வரலாறு வேறோன்றுமல்ல அது வாடிகனின் வரலாற்றில் எளிதான ஒன்று
அது 17ம் நூற்றாண்டு காலம், அப்பொழுது இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சி இல்லை மிக சமத்தாக வியாபாரம் மட்டும் செய்து கொண்டிருந்தார்கள்
கேரளத்தில் காலூன்ற முயன்ற போர்ச்சுகீசியரை இந்து மன்னர்கள் விரட்டி அடித்தார்கள், வடக்கே கோவா பக்கம் அட்டகாசம் செய்த போர்ச்சுகீசியர்களை சிவாஜி அடக்கி வைத்திருந்தான்
அந்நேரம் திருவாங்கூர் சமஸ்தானத்தை மன்னர் மார்த்தாண்டவர்மா ஆண்டுகொண்டிருந்தார், அவர் ஆட்சியின் அதிகாரியாக இந்த திவான் நீலகண்ட பிள்ளை இருந்தார்
அப்பொழுது டச்சுகாரருக்கும் மார்த்தாண்டவர்மாவுக்கும் இடையே நடந்த போரில் டச்சு தளபதி டினலாயினை கைது செய்தது மார்த்தாண்ட வர்மா படை
அந்த டினலாயினை பீரங்கி மற்றும் சில காரியங்களுக்காக மன்னர் படை பயன்படுத்தி சிறையில் வைத்திருந்தபொழுது இந்த நீலகண்ட பிள்ளையும் அவனும் நண்பர்களானார்கள், நீலகண்ட பிள்ளையும் கிறிஸ்துவரனார்
அவருக்கு லாசர் எனும் ஹீப்ரு சொல்லின் தமிழ் வடிவமான தேவசகாயம் பெயர் சூட்டபட்டது, ஆங்காங்கு மதமாற்றம் தொடங்கிற்று
இது மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு கவலை உண்டாக்கிற்று, காரணம் கோவாவில் போர்ச்சுகீசியர் செய்த மதமாற்றமும் அதன் பின் நடந்தவையும் ரத்தம் உறைய வைக்கும் பயங்கரங்கள் என்பதால் இந்து மன்னனாக அஞ்சினான்
அவரை எச்சரித்தான்
ஆனால் அவரோ மதமாற்றத்திலும் இதர விஷயங்களிலும் கவனமாக இருந்தார், டினலாய் இறந்து இங்கே அடக்கம் செய்யபட்டபின்பும் பிள்ளையின் நடவடிக்கை குறையவில்லை
மன்னர் எவ்வளவோ மதமாற்ற ஆபத்தை எடுத்து சொல்லி,இது ஐரோப்பியருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் செயல் என எடுத்து சொன்னாலும் அவர் கேட்கவில்லை
முதலில் சிறை, தண்டனை என மிரட்டிய மன்னன் பின் சுட்டுகொல்ல உத்தரவிட்டான், மன்னனாக அவன் கடமை அது
அந்த பிள்ளை ஆரல்வாய்மொழி அருகே மலையடியில் சுட்டு கொல்லபட்டார்
பின் கத்தோலிக்கர்கள் அவரை பிரதானபடுத்தினர், எனினும் புனிதர் பட்டம் நீண்ட காலம் கொடுக்கபடாமலே இருந்தது, இப்பொழுது கொடுக்கபட்டிருக்கின்றது
புனிதர் பட்டம் எப்படியெல்லாம் கொடுப்பார்கள் என்றால் கத்தோலிக்க பீடத்தில் ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும் இப்படியும் சில உண்டு
16ம் நூற்றாண்டில் கோவாவில் கிறிஸ்தவர்கள் மேல் புனித விசாரணை என அந்நாளைய கத்தோலிக்க குருக்கள் செய்த கொடுமை ரத்தகண்ணீர் வடிக்க வைக்கும் ரகம், அப்படி ஒரு கொடுமை அதன் பின் ஹிட்லர் காலத்தில்தான் நடந்தது
கிறிஸ்தவர்கள் இந்து மரபை பின்பற்றுகிறார்கள் என குற்றம்சாட்டி செய்யபட்ட கொடூரம் அது, சிவாஜியின் இந்து ராஜ்யம் எழுந்தபின்பேதான் அக்கொடுமை அடங்கிற்று
அந்த கிறிஸ்தவ குருக்கள் கடும் சித்திரவதைகளை மக்கள் மேல் இயேசுபெயரால் கொடுத்தபொழுது சிலர் அக்குருக்களை அடித்தே கொன்றனர்
அப்படி கொல்லபட்ட 5 குருக்களுக்கும் உடனே புனிதர் பட்டம் வழங்கபட்டது, அப்படித்தான் அவர்கள்
ஒரு தேவசகாயம் பிள்ளைய செத்ததற்காக அந்த பிள்ளைக்கு புனிதர் பட்டம் என கொன்டாடும் வாடிகன், இந்தியாவில் போப்பினை தலைவராக கொண்ட போர்ச்சுகீஸ் கூட்டம் எண்ணற்ற கொலைகளை செய்தது, எவ்வளவோ ஆலயங்களை இடித்தது, எவ்வளவோ இந்துக்களை கொன்றது
அவர்களுக்கெல்லாம் என்ன பட்டம் கொடுத்தார்கள்? குறைந்தது “வில்லன்” “கொடியவன்” “சாத்தான்” என்றாவது பட்டம் கொடுத்தார்களா என்றால் இல்லை
அதுதான் வாடிகன் அரசியல் அது அப்படித்தான் இருக்கும்
இந்த விழாவில் திமுக அமைச்சர்கள் ஏன் சென்றார்கள்? அதுவும் வாடிகனின் தமிழ் ஏன் இசைக்கபட்டது என்றால் அதுதான் காமெடி
அந்த மன்னன் மலையாள மன்னன், அந்த தேவசகயாம் பிள்ளை பேசியதும் சுத்த தமிழ் அல்ல அது மலையாள தமிழ், அவர் கொல்லபட்டதும் அன்றைய மலையாள நாடு
அந்த நிகழ்வில் கேரள அமைச்சர் சென்றிருக்க வேண்டும், மலையாள கீதம் பாடபட்டிருக்க வேண்டும்
ஆனால் ஏன் தமிழும் திமுகவும் அங்கு சென்றது? அதுதான் இன்னொரு அரசியல் அதுவும் அப்படித்தான்
இந்தியாவில் ஒரு கிறிஸ்தவன் கொல்லபட்டு நிகழ்வுக்கு இப்படியெல்லாம் உருகுபவர்கள் கோவா வன்கொடுமை முதல் தமிழக கடற்கரைகளில் பல கிறிஸ்தவ ஐரோப்பிய கோஷ்டிகள் செய்த வன்முறைக்கு நியாயம் கேட்பார்களா? வாடிகன் மன்னிப்பு கேட்க குரல் எழுப்புவார்களா என்றால் இல்லை
ஏன் என்றால் அதுதான் அரசியல் ஒருமாதிரியான உலக அரசியல்
அருமை. உண்மையை எடுத்து கூறியதற்கு நன்றி.. இது தான் திருட்டு திராவிட கூட்டம்… இவர்கள் இப்படி தான் செய்வார்கள்
இதையும் வெட்கமே இல்லாமல் கொண்டாட கூட்டம் இருக்கும் வரை திராவிஷத்திற்கு என்ன குறை. வாடிகனில் எந்த விஞ்ஞான முறையில் பிச்சை எடுத்தார்களோ … யாருக்கு தெரியும்.
Please change 17 th century to 18th. He was born in 1712 . It is 18 th century. You were born in 1978 – It was 20th century. 2022 – it is 21st century