தோழர்.நல்லக்கண்ணு அய்யா அவர்களின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் மறைவு.

Image may contain: 1 person

தோழர்.நல்லக்கண்ணு அய்யா அவர்களின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் மறைவு.

ஒரு நல்ல சமூக போராளிக்கு, சம்பாதிக்க தெரியா அரசியல்வாதிக்கு மனைவியாய் வாழ்வது ஒரு பெரும் தியாகம்

அவ்வகையில் அந்த மகராசி இந்த சமூகத்திற்காய் பாடுபட்ட ஒருவரை இதுகாலம் வரை காத்து பெரும் சேவையினை தமிழக மக்களுக்கு செய்திருக்கின்றார்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின் அல்ல, அவனின் தியாக வாழ்விற்கு பின்னும் ஒரு பெண் நிச்சயம் உண்டு

கஸ்தூரிபாய், கமலா நேரு, நாகம்மை எல்லாம் அவ்வகை, நிச்சயம் ரஞ்சிதம் அம்மாளும் அந்த வரிசை.

வாழும் காமராஜராய், ஒரு களங்கமும் இன்றி தன் பொதுவாழ்வில் நிலைபெற்றிருக்கும் ஒருவருக்கு மனைவியாய் வாழ்வதுதான் தவ வாழ்வு

பிரபல கட்சிகளின் வட்ட செயலாளர் குடும்பமே செய்யும் அலப்பரையில் அந்த மாபெரும் மனிதனின் மனைவி எவ்வளவு அடக்கமாக வாழ்ந்திருக்கின்றார்

அந்த வேரில்தான் நல்லகண்ணு எனும் மனிதர் நின்றார், நீண்ட ஆயுளோடு நல்லகண்ணு வாழ்வதும் அவரால்தான்.

பல போராட்டங்கள் வென்றன .

அந்த ரஞ்சிதம் அம்மையார் வாழ்ந்ததுதான் தவ வாழ்வு

அரசியலில் பிழைக்க தெரியாதவனுக்கு, 5 பைசா சம்பாதிக்க தெரியாதவனுக்கு மனைவியாய் வாழ எப்படி ஒரு உயர்ந்த மனம், தியாக மனம் இருக்க வேண்டும்.

இப்படிபட்ட பெண்களின் கடைசி வரிசையாக ரஞ்சிதம்மாள் இருக்கலாம்,

மாத சம்பளம் தாமதமாக வந்தாலே கணவன் தலையில் கல்லைபோட சில பெண்கள் தயாராகும் உலகமிது

இம்மாதிரியான பெண்கள் இனி வரமாட்டார்கள்

அந்த மகராசிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.