நடிகையர் திலகம் : திரை விமர்சனம்

download

சாவித்திரி படம் பார்த்தவர்கள் ஜெமினி கணேசனை திட்டி தீர்க்கின்றார்கள்

ஜெமினியிடம் சாவித்திரி அடைக்கலமாகவே வந்தார், அவரை சுற்றி இருந்த சுயநல கூட்டம் அவரை வைத்து சம்பாதிக்க துடிக்க, உண்மையான அன்பை தேடி வந்தார்

ஜெமினி சாவித்திரியிடம் எதனையும் மறைக்கவில்லை , சாவித்திரியினை ஆரத்தி எடுத்து வரவேற்றவர் ஜெமினியின் முதல் மனைவி

ஆனால் சாவித்திரி புகழின் உச்சிக்கு செல்ல செல்ல அவரை படம் எடுக்கும் ஆசையினை ஒரு கும்பல் தூண்டிவிட்டது, ஜெமினி அதனை தடுத்தார்

ஜெமினியினை மீறி சாவித்திரி சொந்தபடம் எடுத்ததும் அப்பொழுது எழுந்த சிறிய பிரிவினை ஒரு கூட்டம் பெரிதாக்கி இருவரையும் பிரித்ததே வரலாறு

ஜெயாவினை சசிகலா சூழ்ந்தது போல சாவித்திரியினையும் மர்ம கும்பல் சூழ்ந்த சோகம் உண்டு

போதையினையும் சில குட்கா வகையாறாவினையும் அக்கும்பலே சாவித்திரிக்கு பழக்கிற்று

ஜெமினிக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்காதவை

ஜெமினிக்கு திரைப்பட உலகம் அத்துபடி, சினிமாவில் நடித்த நடிகர்களில் ஜெமினிக்கே சொத்து அதிகம் ஆனால் ஒரு சொந்தபடம் கூட எடுத்ததில்லை, அதன் சிக்கல் அப்படி

சொந்தபடம் எடுத்து ஜெயித்த நடிகர் இன்றுவரை இல்லை என்பதால் ஜெமினி அதனை முடிந்தவரை தடுத்துபார்த்தார், என் சம்பாத்யம் என சாவித்திரி சீற அவரால் அதற்கு மேல் பேசமுடியவில்லை

அதனை மீறி சாவித்திரி சென்று படுகுழியில் வீழ்ந்ததுதான் விதி

ஜெமினியினை முழுக்கவும் பழிக்க முடியாது, ஒரு கட்டத்தில் ஓடிவந்தார் அதற்குள் சாவித்திரி தீரா நோயில் விழுந்தார்

இருவருக்குமிடையில் காதல் இருந்தது, ஊடல் வரும்பொழுது ஒரு கும்பல் பெரிதாக்கிற்று

படத்தில் ஜெமினி வில்லன் ஆகிவிட்டாராம்

சீனபோரில் சாவித்திரி ஆளுநரிடம் கழற்றிகொடுத்த பல லட்ச ரூபாய் பெறுமான நகை பற்றி ஒரு காட்சியும் இல்லை என்கின்றார்கள்

சந்திரபாபு எனும் மாபெரும் பாத்திரம் வரவில்லையாம், கடைசி காலத்தில் அவரை மதித்து அவர் இல்லம் சென்ற ஒரே நடிகர் அவர்தான்

இம்மாதிரி பல குறைகள் இருக்கின்றது என்கின்றார்கள், படம் இங்கு வெளிவரவில்லை. இம்மாதிரி படம் வராது

தமிழ் ராக்கர்ஸ் போன்றோரை மலைபோல் நம்பி இருக்கின்றோம் அவர்களோ எஸ்வீ சேகர் போல் ஆகிவிட்டார்கள்