நெஞ்சில் ஓர் ஆலயம்
பழைய படங்களில் சில படங்கள் காவியம், அந்த தமிழும் அக்கால நடிகர்களும் கவிஞர்களும் அப்படத்தை அழியா கல்வெட்டாக ஆக்கிவிட்டார்கள்
அவற்றில் ஒன்று “நெஞ்சில் ஒரு ஆலயம்”
ஒரு மருத்துவமனை செட் மட்டுமே செலவு, முழு கதையும் அதற்குள்ளே நடகின்றது, ஸ்ரீதர் புது பாடத்தையே திரையுலகிற்கு சொல்லி இருகின்றார்
வலுவான கதையும் நடிகர்களும் இருந்தால் போதும் என அடித்து சொன்ன படம் அது
உச்சமாக கண்ணதாசன், தன் ஞானத்தில் உச்சியில் எழுதிய பாடல் , எங்கிருந்தாலும் வாழ்க என அண்ணாவினை நினைத்து எழுதிய பாடலை போல இறுதியில் காமராஜரை நினைத்து “ஒன்றே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து” என எழுதி படம் முடியும் பொழுது கதற வைக்கின்றார்
இந்த படத்தின் சாயல் பல படங்களில் சத்தமின்றி காப்பியடிக்கபட்டது
“லேசா லேசா” எனும் படத்தின் கதை கூட இதுதான், ஆனால் கொஞ்சம் மாறுதலை செய்து புதுகதை என சொல்லிவிட்டார்கள்.
ஆக இப்பொழுதுள்ள எல்லா பயலும் ஏதோ பழைய படத்து கருவினை திருடி டெஸ்ட் டியூப் பேபி செய்கின்றான் என்பது புரிகின்றது
படத்தின் கிளாசிக் தேவிகா, சந்தேகமே இன்றி சொல்லலாம் குஷ்புவிற்கு அவர்தான் முன்னோடி
தேவிகா அக்கால குஷ்பு
இந்த படத்தை ரீமேக் செய்யும்பொழுது நிச்சயம் குஷ்புதான் ஹீரோயின்
வாய்பிருந்தால் சங்கம் குஷ்பு நாயகியாகவும் விஜய்சேதுபதியினை டாக்டர் வேடத்திலும், அஜித்குமாரை முத்துராமன் பாத்திரத்தில் வைத்தும் இப்படத்தை ரீமேக் செய்யும்.