பாகியராஜின் “அம்மா வந்தாச்சு”
டிவியில் “அம்மா வந்தாச்சு” படம் ஓடிகொண்டிருக்கின்றது, பாக்யராஜ் எனும் மகா ரசனையான கலைஞன் தன் பொற்காலங்களில் எடுத்தபடம்
நல்ல கதை, அதனை தனக்கே உரித்தான பாணியில் சொல்லியிருந்தார்
அதாவது மறைந்துவிட்ட தன் தாயினை தேடும் குழந்தையின் கதை அது, முதலில் சொர்ர்கத்தில் அம்மா என்றுதான் படத்திற்கு பெயரிட்டதாக முன்பு பாக்யராஜே சொல்லியிருந்தார்
மனிதரை எதில் பாராட்டவேண்டி இருக்கின்றது என்றால், எப்படி அவரின் ரசனையினை கவனிக்கமுடிகின்றது என்றால் இப்படித்தான்
சொர்க்கத்தில் இருந்து வரும் அம்மா எவ்வளவு அழகாக இருக்கவேண்டும் என்று சிந்தித்திருக்கின்றார் பாக்யராஜ், விளைவு சொர்க்கத்திலிருந்து வந்த அழகு யாருக்கு உண்டு, குஷ்பூ ஒருவருக்குத்தான் உண்டு
எவ்வளவு ரசனையான மனிதர் பாக்யராஜ்?
குஷ்பூ சொர்க்கத்தில் இருந்து பேசுவதாக அந்த குழந்தையிடம் சொல்லும் காட்சியில் நடிப்பில் பின்னுகின்றார், அட்டகாசம்
குஷ்பூ இருக்குமிடம் சொர்க்கம் என்பது நம்மைபோல அந்த குழந்தைக்கு தெரிந்திருக்கின்றது என்பது படத்தினை பார்க்கும் பொழுது நினைவுக்கு வருகின்றது, குழந்தை பொய் சொல்லாது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என அதற்கு தெரிந்திருக்கின்றது
வழக்கமாக பாக்யராஜின் படங்கள் அவரின் சுவாரஸ்ய கதைகளுக்காக கொண்டாடபடும், குஷ்பு நடித்திருப்பதால் இப்படம் பன்மடங்கு சிறந்த படம்
ஆனாலும் பாக்யராஜுக்கு என்ன கோபமோ? குஷ்பூவின் அழகினை குறைக்க முக கண்ணாடிபோட்டு நிறுத்தியிருக்கின்றார்
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, முக கண்ணாடி குஷ்பூவின் அழகினை குறைப்பதுமில்லை
இது “அம்மா வந்தாச்சு” படம் அல்ல மாறாக
“குஷ்பூ வந்தாச்சு”