பாரதிதாசன்

பாரதி தாசனுக்கு நினைவுநாள் என சிலர் ஓலமிடலாம் ஆனால் பாரதிக்கு மிகபெரியதுரோகம் செய்தவர் அவர்தான்

ஒருவகையில் தமிழை வியாபாரமாக்கிய கொடுமையினை தொடங்கிவைத்தவரும் அவர்தான் தொடங்கிவைத்தார்

பாரதியார் ஒரு அப்பழுக்கற்ற இந்தியன், அவர் தமிழ்புலவர்தான் ஆனால் எல்லா இந்திய மொழிகளையும் நேசித்தார் கற்றார் பேசினார்

ஒரு மகோன்னதமான இந்தியனாக ஒளிவீசினார்

ஆனால் சுப்புரத்தினம் என்பவர் பாரதியின் சீடனாக தனக்கு பாரதிதாசன் என பெயர்சூட்டி கொண்டு செய்ததெல்லாம் திராவிடமாயை

ஒரு திராவிடவாதியாக தமிழனை மொழியின் பெயரால் பிரித்து வெறியெற்றும் கவிதைகளை எழுதியவராக மட்டும் வலம் வந்தார் பாரதிதாசன்

அவருக்கும் ஈழபுலிகவிஞர் காசி ஆனந்தம் என்பவருக்கும் ஒரு வித்தியாசம் கூட காணமுடியாது

அவரை பாரதிதாசன் என அழைக்காமல் வெறும் சுப்புரத்தினம் என அழைப்பதுதான் சரியானதாக இருக்கமுடியும், பாரதியின் சீடனாக இருக்கும் ஒரு தகுதி கூட அவருக்கு இல்லை