பாரதிராஜா எப்படிபட்ட கலைஞன்
இந்த டிவிகள் எல்லாம் ஒழியட்டும் , ஒரு டிவியும் குஷ்பு படம் ஒளிபரப்பவில்லை நந்தினி சீரியல் மட்டும் ஓடிகொண்டிருந்தது
அட அட அட
விவேகானந்தரின் சீடர் நிவேதிதா இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் அளவிற்கு தங்க தலைவி ஆன்மீக வேடத்தில் பின்னி எடுத்திருந்தார், அதுவும் அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது
காரைக்கால் அம்மையார் இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் நடிபபு அது. ஆனால் சதிகாரர்கள் அரைமணி நேரத்திலே நிறுத்திவிட்டார்கள்
ஏதும் படம் பார்க்கலாம் என்றால் குரங்கு பொம்மை எனும் படம் சிக்கியது
அய்யா, பாரதிராஜா எப்படிபட்ட கலைஞன் அய்யா நீர்?
நான் சினிமாவில் நடிக்கத்தான் வந்தேன், சென்னை வந்து கண்ணாடியில் முகத்தை பார்த்ததும் இது நடிப்புக்கு லாயக்கில்லா முகம் என உணர்ந்து இயக்குநர் ஆனேன் என நடிகர் திலகம் முன்னால் நீர் சொன்னது நினைவுக்கு வந்தது
ஏம்பா உங்க ஊர்ல கண்ணாடி இல்லியோ என சிவாஜி பதிலுக்கு கலாய்த்ததும் நினைவுக்கு வந்தது
நீர் மிகசிறந்த இயக்குநர் என்பதை எத்தனையோ முறை நிரூபித்துவிட்டீர், ஆனால் மிக சிறந்த நடிகர் என்பதை இந்தபடத்தில் அட்டகாசமாக நிரூபித்திருக்கின்றீர்
எதற்கு அய்யா அந்த கண்ணாடியினை பார்த்து தொலைத்தீர் எப்படிபட்ட நடிகனை தமிழகம் இழந்திருக்கின்றது தெரியுமா?
அய்யா, அந்த கள்ளிகாட்டு இதிகாசத்தை படமாக எடும், அதில் நீரே அந்த மாயத்தேவர் வேடத்தில் நடியும்
இன்னொரு முதல் மரியாதையாக அப்படம் காலத்தில் அழியாமல் நிலைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை
இந்த அரசியல் பேச்சுக்களை விட்டுவிட்டு அப்படி ஒரு படத்தை கொடுங்கள் பாரதிராஜா
நிச்சயம் நீர் மகா கலைஞன், கிராமத்து கலைஞன், அந்த மாயத்தேவர் வேடத்தில் உம்மை பார்ர்க்க இந்த தமிழகம் காத்து கிடக்கின்றது
உங்கள் இனிய தமிழ் மக்களுக்காக அதனை செய்யுங்கள்