பார்லிமெண்டில் பாலியல் தொல்லை

Image may contain: 4 people, people smiling, people sitting

இந்த பாலியல் சர்ச்சைகள் சினிமா, பத்திரிகை தாண்டி வேறு லெவலுக்கு சென்றாயிற்று

ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் மனிதனை கடித்த கதை என்பது போல பாலியல் சர்ச்சை பார்லிமென்டுக்கே சென்றாயிற்று

இந்த ரேணுகா சவுத்திரி எனும் சவுண்ட் பார்ட்டி இந்த சர்ச்சையினை தொடங்கிவிட்டார்

பாலியல் சர்ச்சை பார்லிமென்டிலும் உண்டு என அவர் சொல்லியிருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது, அலற தொடங்கிவிட்டார்கள் பெரும் தலைகள்

இதில் பாஜகவிற்கு சற்று நிம்மதி, காரணம் அம்மணி இப்பொழுது காங்கிரஸ்

பாஜக கற்பழிப்பு கட்சி என பெயர் கட்டிவிடபடும் நிலையில் காங்கிரஸ் பெண் பிரமுகர் பார்லிமென்டில் பாலியல் தொல்லை என சொன்னால் விஷயம் எப்படி ஆகும்?

நிச்சயம் பாஜகவினரால் அவர் தொல்லை அனுபவித்திருக்க முடியாது, அதற்கு வாய்ப்புமில்லை

விஷயம் காங்கிரசை நோக்கி திரும்பும், காங்கிரஸ் கட்சிக்குள் பாலியல் தொல்லை என அட்டகாசமாக பாஜக பதிலடியினை ஆரம்பிக்கலாம்

அம்மணி தெலுங்கச்சி, நடிகை போல அடாவடி பார்ட்டி முன்பு தெலுங்கு தேசம் கட்சியில்தான் இருந்தார்

அம்மணியின் சர்ச்சை பேச்சால் தெலுங்கு தேச கட்சியினரும், காங்கிரசாரும் கடும் அப்செட்டில் இருக்கின்றார்கள்

பாஜக தன் காயங்களை துடைத்துகொண்டு களமிறங்கலாம் வாய்பிருக்கின்றது


டெல்லியில் காரில் பள்ளி மாணவி சீரழிக்கபட்டிருக்கின்றாள், ஆள்வது யாரென்றால் உத்தமர் கெஜ்ரிவால்

ஆனால் யாரும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கற்பழிப்பு, கெஜ்ரிவால் ஆட்சியில் அராஜகம் என இறங்கவில்லை.