பா.ராகவனின் எழுத்துக்கள்…

கலைஞரின் எழுத்து வேறுரகம், கண்ணதாசன், சுஜாதாவிற்கு பின் ஒருவரின் எழுத்தினை கையெடுத்து வணங்கவேண்டுமென்றால் அது பா.ராகவனின் எழுத்துக்களையே

மனிதர் அப்படி ஒரு ஞானம் பெற்றிருக்கின்றார், ஒரு நல்ல கிறிஸ்தவ போதகன் அல்லது கிறிஸ்தவன் தமிழகத்தில் இருப்பானானால் நிலமெல்லாம் ரத்தம் என்ற புத்தகம் எழுதியதற்காக அவருக்கு விழா நடத்தி கொண்டாடியிருப்பான்

உறுதியாக சொல்லலாம், பைபிளின் மறுபிரதி அது, பைபிளின் தொடர்ச்சி அது

இன்னும் ஏராளமான உலகம், வரலாறு, பக்தி, அரசியல், சமையல் என எல்லா பக்கங்களும் மின்னும் வைடுரியம் அவரின் எழுத்துக்கள்

நான் அனுதினமும் ஆச்சரியமாக பார்க்கும் எழுத்தாளர் அவர், எனக்கெல்லாம் கொஞ்சம் வசதி இருந்தால் மாதம் லட்சம் லட்சமாக அனுப்பி அவரை தங்க ஆசனத்தில் அமர்த்தி எழுத சொல்லும் ஆசை உண்டு, என் வருமானம் பெரும்பாலும் மீன்கடையிலே தீர்ந்துவிடுகின்றது

கம்பனுக்கு சடையனை போல, கண்ணதாசனுக்கு சின்னப்ப தேவரை போல ஒருவர் அமைந்து காக்க வேண்டிய பொக்கிஷம் அவர்

இப்பொழுது கிண்டில்க்க்கு வந்திருக்கின்றாராம், அது என்ன சங்கதி என இன்றுவரை தெரியாது, கையில் கிடைப்பதை வாசிப்பேன், முகநூலில் பதிந்துவைப்பதோடு சரி

இனி அவருக்காக அப்பக்கம் செல்லவேண்டும், நீங்களும் வாருங்கள்

இருட்டு அறையில் இருந்து உலகத்தை தேடிகொண்டிருந்த எனக்கு, ஜன்னல்களை திறந்துவிட்டு பார் உலகத்தை என காட்டிய பரந்தாமன் அவர்

இன்றைய தமிழகத்தின் மகா உச்ச எழுத்தாளனை பின்பற்ற வேண்டியது வாசிப்பாளர்களின் மகா அத்தியாசியமான ஒன்று

அதனால் உங்கள் எல்லோருக்கும் ஷேர் செய்கின்றேன், இதுவரை குஷ்பூ படங்களுக்காக, செய்திகளுக்காக கூட‌ ஷேர் பட்டனை தொட்டிராத நான், இவரின அறிவிப்பினை ஷேர் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்

யாம் பெற்ற விஷயங்கள், பெறுக இவ்வையகம்..


 

143 – ஒரு புதிய முயற்சி

என்னுடைய புத்தகம் ஒன்றை முதல் முறையாக நானே நேரடியாக கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 143 – குறுவரிக் களம்.

லிங்க்:

See more

ட்விட்டரின் குறுங்களம் ஒரு சவால். பத்திருபது சொ …
AMAZON.IN