பா ராகவன் : எவ்வளவு அற்புதமான எழுத்தாளர்..
எழுத்தாளர்களில் பல பிரிவுகள் உண்டு, அவர்களில் சிலரின் எழுத்துக்களே அற்புதமாக ரசனையாக அமையும்
பழம் எழுத்தாளர்களில் கி.வா.ஜா மற்றும் கண்ணதாசனின் எழுத்துக்கள் ரசனையானவை
பிற்கால சுஜாதா எழுத்தில் ஒரு இமயம், எல்லா துறைகளியும் புகுந்து எழுதிய எழுத்து ஞானி.
கலைஞரின் எழுத்துக்கள் நைல் நதி போல பழமையும் நீங்கா அழகும் கொண்டது
ஈஸி சேரில் படுத்திருந்து கதை சொல்வது போன்றது கி.ராஜநாராயணனின் எழுத்துக்கள்,சுகா வின் எழுத்துக்கள் நம்மை கிராமத்திற்கே அழைத்து செல்லும்.
இந்த வரிசையில் அப்படியே வந்து அமர்ந்திருப்பவர் ஆசான் Pa Raghavan
நிச்சயமாக சொல்லலாம், இன்று தமிழகத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நம்பர் 1 அவரே, அவர் ஒருவரே
ஆழ்ந்த அறிவும், நண்பர்களுடன் பேசுவது போன்ற மொழிநடையும், தமிழறிவும், உலக அரசியல் அறிவும், தற்போது சமைல அறிவும் கொண்டு விளங்கும் சிகரம் அவர்.
இன்று அவருக்கு பிறந்தநாளாம், நாம் வணங்கும் தெய்வங்கள் அவருக்கு எல்லா நலனும் வளமும் அருளட்டும்.
எப்படிபட்டை எழுத்து சக்தி அது?, ஆனால் எழுதிமட்டும் வாழமுடியா தமிழகம் அவரை வர்த்தகபக்கம் தள்ளியிருக்கின்றது.
இல்லாவிட்டால் டாலர் தேசம், மாயவலை வரிசையில் இன்று ஐ.எஸ். வடகொரியா , பொக்கோ ஹாரம் போன்றபிரச்சினைகளை மிக அற்புதமாக தமிழுக்கு கொண்டு வந்திருப்பார்.
எவ்வளவு அற்புதமான எழுத்தாளர், ஆனால் தமிழன் நிலை என்ன?
உலக அரசியலோ, உலகளாவிய பிரச்சினைகளோ அவனுக்கு தெரியாது, ஏதோ இம்சைகளை இலக்கியம் என்பான், அதில் சர்ச்சை என அவனே சொல்வான், இதற்கு மேல் மகாபாரதம், ராமாயணம் தாண்டி அவன் விரும்புவதிலை
கள்ளத்தனமான அரசியலும், வர்த்தக சினிமாவுமே இங்கு பிராதனம் அவற்றை எல்லாம் தாண்டி போன்றவர்கள் தெரிவதில்லை
ஆனால் வானத்து சூரியனை மறைக்கமுடியாதது போல, பல இடங்களில் அவர் மின்னிகொண்டே இருக்கின்றார், சமீபத்திய பொன்னான வாக்கு பொல
நமக்கெல்ல்லாம் வாய்ப்பு இருந்தால், கடையேழு வள்ளல் போல் அல்ல, சடையப்ப வள்ளல்போலும் அல்ல, ஆனால் அவரை ஆதரித்து பெரும் உலக நூல்களை, பல விஷயங்களை தமிழுக்கு கொடுக்கலாம்
உலகளாவிய சிந்தனைகளை தமிழனுக்கு கொடுக்கலாம், அவன் படிக்கின்றானோ இல்லையொ, ஓர் ஆத்ம திருப்தி
நிச்சயம் கொண்டாடபடவேண்டிய எழுத்தாளன் அவர், அப்படி ஒரு எழுத்தாளனை நாம் கண்டுகொள்வதில், அவரின் எழுத்துகளை சுட சுட படிப்பதில், பாரதியினை தவறவிட்ட, கண்ணதாசனை தவறவிட்ட காலங்களை மறுபடி பெற்றுகொண்டோம்
வாழ்க நீ எம்மான்
பல்லாண்டு காலம் வாழிய வாழியவே, பேலியோ அல்லது எதுவோ எதனையாவது செய்து பல்லாண்டு காலம் வாழ்க
ஒன்று நிச்ச்யமாக சொல்லலாம்
ஏதோ ஒரு தெய்வத்தின் அருள் அவரை நடத்திகொண்டிருக்கின்றது, இல்லாவிட்டால் இப்படிபட்ட அழியா புத்தகங்கள் சாத்தியமில்லை.
தொன்மை வாய்ந்த யூத சமூகத்தின் வரலாற்றை எழுதினார் அல்லவா? அதற்கு பைபிளை கடந்த உழைப்பு தேவை. கடும் ஆர்வமும் படிப்பும் தேவை
ஒரு யூதனை தவிர அவ்வளவு பெரும் எழுத்துசுமை யாருக்கும் சாத்தியமில்லை, ஆனால் Pa Raghavan சாதித்தார்
உண்மையில் அது யூத அல்லது கிறிஸ்தவ பாதிரி செய்திருக்கவேணடிய வேலை, அல்லது ஒரு இஸ்லாமியன் பாலஸ்தீன நியாயத்திற்காக செய்திருக்கவேண்டிய கடமை அது
ஆனால் அப்பணியினை முடிக்கும் பொறுப்பினை யூதர்களின் கடவுளான ஜெஹோவா நமது பா.ராகவனிடமே கொடுத்திருந்திருக்கின்றார்
உலக வரலாற்றில் அப்படி ஒரு புத்தகம் இனி சாத்தியமே இல்லை, சூடமேற்றி சத்தியம் செய்யலாம்.
சென்னையில் நாம் சந்திக்கவேண்டிய பிரபலங்கள் , சந்திக்க ஆவலான பிரபலங்கள் உண்டென்றால் கலைஞரின் அடுத்த இடம் பா.ராகவனுக்கே, நமது குஷ்பூ கூட மூன்றாம் இடமே..
அவர் மேல் நாம் கொண்டிருக்கும் அபிமானத்தை இதனைவிட எப்படி விளக்க என்று தெரியவில்லை
எங்கள் அன்புக்கும், வணக்க்கத்திற்கும் உரிய அவர்கள் இன்னும் பல உயரங்களை தொட அவர் பிறந்தநாளில் மனமார வாழ்த்துகின்றோம்
வடிவாய், செழிப்பாய் வாழ்க நீர் எம்மான்