பிராமணருக்கு எதிரான முதல் குரலை எழுப்பியவர் நடேச முதலியார்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது

அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.

பிராமணருக்கு எதிரான முதல் குரலை இவர்தான் எழுப்பினார்

நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார்

மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான், அது 1920ல் சென்னை மாகாண ஆட்சியினையும் பிடித்து அசத்தியது, அதாவது அன்றைய கேரளா, ஆந்திரம் என பிரிக்கபடாத சென்னை மாகாணம்.

இவருக்கு வந்திருக்க வேண்டிய முதல்வர் பதவியினைத்தான் பனகல் அரசருக்கும், சுப்புராயலுவிற்கும் கொடுத்தார், இறுதிவரை முதல்வராக ஆசைபடாத பெருந்தன்மை அவருக்கு இருந்தது

பிரிட்டிசார் அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சி எனினும் இட ஒதுக்கீடு, தேவதாசி ஒழிப்பு என பல மசோதாக்களை அது கொண்டுவந்தது, அன்று அது தோற்றாலும் பின்னாளில் அவை சாத்தியமாயிற்று

இங்கு சமூக நீதி சீர்திருத்தங்களை முதலில் கொடுத்தது நீதிகட்சியே

இந்தியினை முதலில் எதிர்த்ததும் போராடியதும் நீதிகட்சியே

தென்னக சுயாட்சி முதல் பல முழக்கங்களை அதுதான் முதலில் முன் வைத்தது

அக்கட்சியின் பன்னீர்செல்வம் போன்றவர்கள் பெரும் வரலாற்றளர்கள், அக்காலத்திலே லண்டனில் பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்..

அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது

பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார்

எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர்

திராவிட கொள்கைக்கும், பெரும் மாற்றத்திற்கும் அடித்தளமிட்ட அவரின் நினைவு நாள் இன்று

இவரது நினைவால்தான் அன்று புதிதாக உருவாக்கபட்ட சென்னை புறநகர் ஒன்றிற்கு தியாகராய நகர் என அக்கட்சியின் ஆட்சியில் பெயர் சூட்டபட்டது, அவர் பெயரில் அரங்கம் ஒன்றும் கட்டபட்டது

அது இன்று தி.நகர் ஆயிற்று, சென்னையின் மிக முக்கிய பகுதி ஆயிற்று

அதாவது பெரியார் காலத்திற்கு முன்பே திராவிட குரல் எழும்பியது, பலர் எழுப்பினார்கள், பெரியார் அதனை ஆணிதரமாக பிடித்துகொண்டு போராடினார்

அப்படி பெரியாருக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர்தான் பிட்டி தியாகராஜர்.

நிச்சயம் தியாகராய செட்டி, பனகல் அரசர் எல்லாம் பிராமண எதிரிகள் சந்தேகமில்லை ஆனால் இந்து அபிமானிகள் திட்டமாட்டார்கள்

காரணம் அவர்கள் சீர்திருத்தம் பேசினார்களே தவிர கடவுள் பகிஷ்கரிப்போ, துவேஷமோ செய்யவில்லை அதனால் அவர்களை பிராமணர்கள் தங்களுக்கு எதிரான‌ விஷ வித்துக்களை விதைத்தோர் என்ற வகையில் கூட கண்டுகொள்ளவில்லை

நிச்சயம் பிட்டி தியாகராஜர், பனகல் அரசர், பிடி ராஜன் , டி.எம் நாயர் போன்றோர் எல்லாம் வழிகாட்டிகள்

தென்னகம் இன்று ஓரளவு தனிதன்மையுடன் இருக்க இவரின் துணிவான அணுகுமுறையும், தன்னலமற்ற பொதுநல சிந்தனையுமே முதல் காரணம்

அவர் பற்றிவைத்த தீ இன்றுவரை எரிந்துகொண்டிருக்கின்றது

அந்த தீயினை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காத்தனர், இன்றோ நிலை மாறிவிட்டது

தியாகராய செட்டி காலத்திலிருந்து தொடங்கிய இயக்கம் மூன்றாம் கலைஞர் என சொல்லிகொண்டிருக்கும் ஒரு குடும்பத்து கையில் மாட்டிவிட கூடாது, அப்படி சிக்கினால் அது தியாகராயர் போல பல முன்னோடிகளுக்கு செய்யபடும் மாபெரும் அவமானம்

தியாகராஜர் போராடிய காலங்களில் கலைஞர் பிறக்கவே இல்லை என்பதும் நினைவில் வைக்க வேண்டியது

இதனை சமூகநீதி காப்பதாக, நீதிகட்சி வழிவந்த திமுக என சொல்லிகொள்வோர் உணர்ந்தால் நல்லது

நிச்சயம் நீதிகட்சி தியாகமும் போராட்டமும் மகத்தானது

அவர்கள் வழிகாட்டினார்கள் நாம் நடந்தோம், அவர்கள் படிக்கட்டானார்கள் நாம் உயர்ந்தோம்

திராவிட வரலாற்றில் மறக்க முடியாத பிதாமகனான அவருக்கு அஞ்சலியினை தெரிவித்துகொள்ளலாம்.