பீல்டு மார்ஷல் மானெக்க்ஷா பிறந்த நாள்

Image may contain: 1 person, text

இந்தியாவில் அரசியவாதிகள் தவிர வாழும் காலத்தில் இந்தியாவின் பிரதமராக கூட வந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர் ஒரே ஒருவர்தான்

அவர் நாட்டிற்காய் உழைத்த உழைப்பும் அவரின் சாதனையும் அப்படி

பீல்டு மார்ஷல் மானெக்க்ஷா

வங்கபோரில் அவர் காட்டிய வியூகமும், அதிரடியும்தான் 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை பிடித்து போரில் வெற்றிபெற வைத்தது

அவர் பெயரை கேட்டாலே பாகிஸ்தான் அலறியது, அப்படி மிரட்டி வைத்திருந்தார்.

வல்லரசு நாட்டு தளபதிகள் கூட பார்த்து வியந்த வியூகம் அது

அந்த போருக்குபின் இந்தியா எங்கும் கொண்டாடபட்டார், கொண்டாட்டம் என்றால் மிக பெரும் கொண்டாட்டம்

அந்த புகழை சரிவர கையாண்டிருந்தால் அவர் பிரதமராக கூட வந்திருக்கலாம், ஆனால் அவர் அதனை மறுத்து தமிழத்து ஊட்டியில் காலமானார்

கிட்டதட்ட அப்துல்கலாமிற்கு இருந்த நன்மதிப்பினை விட பெரும்மடங்கு வரவேற்பு அவருக்கு இருந்தது

மத, இன,மொழி வேறுபாடு தாண்டி இந்தியர்களால் இந்தியனாக கொண்டாடபட்ட பெரும் ஆளுமை அவர்

பீல்டு மார்ஷல் எனும் உயரிய பட்டம் பெற்ற ஒரே ராணுவத்தார் இன்றுவரை அவர்தான்

இந்திய ராணுவத்தில் மறக்க முடியா பெருமகன் அவர், இத்தேசத்திற்காக உழைத்த மாமனிதரில், இத்தேசத்தின் கவுரவத்தை காத்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அவர்தான்

அவருக்கு இங்கு பாரத ரத்னா இல்லை ஆனால் ராமசந்திரனுக்கு வழங்கபட்டது, திரையில் பலபேரை சுட்டர் அல்லவா அதற்காக‌

உண்மையில் இந்தியாவின் சிங்கம் அந்த மானெக்ஷா

அவருக்கு இன்று பிறந்தநாள். இந்த தேசத்து மாவீரனுக்கு வீரவணக்கம்

வீரவணக்கம் எனும் முழக்கம் அந்த வீரமகனால் பெருமை அடைகின்றது

ஜெய்ஹிந்த்,வந்தே மாதரம்