பெரும் சிரிப்பு பெருகுது முகத்தினிலே..
இந்திய தமிழகத்தின் அரசியல்வாதிகளை நினைத்தால் இதுவரை உலகில் இருந்த அனைத்து காமெடி நடிகர்களும், காமெடி நாடக ஆசிரியர்களும் பிச்சைவாங்க வேண்டும் போலிருக்கின்றது
அவ்வளவு வகைவகையான காமெடிகளை செய்கின்றார்கள்
முதல்வர் ஸ்டாலினின் காமெடி தனி ரகம், அவரின் தலை அலங்காரம் முதல் சூட்டிங்க் குழறுபடி இன்னும் என்னென்ன காமெடி அவரால் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்கின்றார்
அதை சிரிக்காமல் செய்வதுதான் அவரின் பிரத்யோக ஸ்டைல், எல்லா காமெடியிலும் மக்களை சிரிக்க வைத்துவிட்டு மோடிமுன் மட்டும் அவர் சிரிப்பதுதான் காமெடியின் ஹைலைட்
ஆக எல்லா காமெடிகளும் மோடியின் மகிழ்ச்சிக்காக நடத்தபடுகின்றதோ என்னமோ
முதலமைச்சரின் காமெடி இப்படி நடக்க இதர அமைச்சர்களுக்கும் நாமும் மக்களை மகிழ்வித்தால் என்ன ஆளாளுக்கு கிளம்புகின்றார்கள்
இதனை முதலில் தொடங்கிவைத்தவர் நிதியமைச்சர் தியாகராஜன், ஆனால் காமெடி ஓவராகின்றது என அவஏ நிறுத்திகொண்டார், அதன் பின் மின்சாரம், பால் என ஒவ்வொருதுறை அமைச்சர்களும் அவ்வப்போது செய்கின்றார்கள்
இடையில் தர்ம்புரி எம்பி செந்திலும் கலந்து கொண்டு “சர்வமத” காமெடி ஒன்றை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்
சபாநாயகர் அப்பாவுவும் அந்த ஜோதியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்ச்சிபடுத்தினார்
தமிழக மக்கள் மட்டும் மகிழ்ந்தால் போதுமா? நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் இந்தியாவே மகிழவேண்டாமா என நினைத்த திமுகவும் அதன் கூட்டணியினரும் பாராளுமன்றத்தில் அதை தொடங்கினார்கள்
ஆனால் டெல்லியில் நிதியாமைச்சரும் சபாநாயகரும் “ப்ளீஸ் இது தேசிய பிரச்சினை” என சீரியசாக பேசதொடங்க, “ஆம்,சீரியசான பிரச்சினையிலும் சிரிக்க வைக்கத்தான் நாங்கள் வந்திருக்கின்றோம்” என காரணங்களை அடுக்கினார்கள்
நிர்மலாவின் பதிலிலும் அதில் திமுக திணறுவதையும் கண்ட சபையினர் திமுக கோஷ்டிகளை பார்த்து சிரிக்க , எல்லா மாநில எம்பிக்களும் சிரித்து மகிழ “அப்பாடா யாவரும் மகிழ்ச்சி”என திரும்ப்விட்டனர் திமுக கூட்டணி எம்பிக்கள்
இப்படி திமுக காமெடி செய்து மக்களைமகிழ்வித்து கொண்டிருப்பதை கண்ட அதன் கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கும் காமெடி ஆசை வந்தது, தன் தலைவர் அழகிரி களமிறங்கிவிட்டார்
உடனே “கருணாநிதி பேனாவுக்கு சிலை வைக்க தடுப்போர் டி.என்.ஏ ஆய்வு செய்யபடவேண்டும்” என பெரும் காமெடி செய்தார்
ஆம், அந்த பேனாதான் நேருவினை அவமானபடுத்திற்று, காமராஜரை சரித்தது, இந்திரா மேல் திமுகவினர் தாக்குதல் நடத்த தூண்டிற்று, இந்திரா ரத்தம்வழிய சரிந்தாலும் அவமானமாக எழுதியது அந்த பேனாதான்
ராஜிவ் கொலையில் குழப்பமான கருத்தை எழுதியதும் அப்பேனாதான், ராஜிவ் கொலையாளிகளை காக்க துடித்ததும் அந்த பேனாதான்
ஆக தேசிய கட்சியான காங்கிரஸின் தலைவர் ஒருவர், தங்கள் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்த பேனாவுக்கு, மிக கொச்சையாக விமர்சித்த பேனாவுக்கு, தங்களுக்கு குழிவெட்டிய பேனாவுக்கு சிலை வைக்க சொன்னதுதான் பெரும் காமெடி
அதுவும் சென்னை திருபெரும்புதூரில் ராஜிவ் எனும் கட்சி தலைவனுக்கு ஒரு செங்கல் கூட வைக்க சொல்லாத அவர், எதிர்கட்சி தலைவனுக்கு அதுவும் தன் கட்சியினை கொன்ற தலைவர் பேனாவுக்கு மல்லுகட்டுவதெல்லாம் உச்சகட்ட காமெடி
இப்படி எந்தகாமெடிக்கு தமிழன் சிரித்து தொலைப்பது என அவன் சிரித்துகொண்டிருக்கும்பொழுதே முக ஸ்டாலின் மலையாளத்தில் பேசும் வீடியோ வந்தது, அப்பொழுது முல்லைபெரியாறு கடும் மழையிலும் நிரம்பவில்லை என்ற செய்தி இன்னும் காமெடியானது
இப்படி கடுமையாக சிரித்து கண்ணெல்லாம் நீராக தமிழன் இனி போதுமய்யா என கை எடுத்து வணங்கிய நிலையில் ஸ்டாலின் மருமகனின் யாகம் செய்தி வெளிவந்தது
அது தமிழ் யாகமா, சமஸ்கிருத யாகமா என தமிழன் தலையினை பிய்த்து கொண்டிருந்தான், இதற்கு பெட் கட்டி பந்தயமெல்லாம் நடந்தன
இந்த பழமைவாதத்தை வீரமணி கண்டிப்பார் என ஒரு கோஷ்டியும் இல்லை “பசித்த தீக்கு உணவிடுவது தமிழர் வழமை” என அவர் வக்கலாத்து வாங்குவார் என ஒரு கோஷ்டியும் பெட் கட்டியது
தர்மபுரி எம்பி இனி அந்த சபரீஸனை வேளாக்கண்ணி ஆலயத்துக்கும் நாகூர் தர்காவுக்கும் தரதரவென இழுத்து செல்வார் என எதிர்பார்திருந்தது ஒரு கோஷ்டி
இப்படி காமெடி நடக்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசா 5ஜி ஏலம் ஏன் குறைந்தது , அங்கே ஊழல் நடந்திருக்கலாம் என அடுத்தகாமெடி செய்தார், அவருக்கு எலலா அமைச்சர்களும் தன்னை போலவே இருப்பார்கள் எனும் அபார நம்பிக்கை
ஆனால் தொழில்நுட்பம் வளர தொலைதொடர்பு கட்டணம் குறையும் என அவருக்கு எல்லோரும் எடுத்து சொன்னபொழுது அவர் ராம்சாமியின் புத்தகத்துக்குள் ஒளிந்துகொண்டார், அவரெல்லாம் தொலைதொடர்பு துறைக்கு அமைச்சராக இருந்ததற்கு கருணாநிதி கல்லறைமுன் சில போன்களை உடைத்து கண்டனம் தெரிவிக்கும் அளவு ராசாவின் காமெடி இருந்தது
இவ்வளவுதான் காமெடி என நினைத்தால் கடைசியில் பாளையங்கோட்டை சிறை வாசலில் கருணாநிதிக்கு சிலை என ஒரு கோஷ்டி அதிஅவைத்தது
இதென்ன குழப்பம்? அப்படியானால் திகார் வாசலிலும் கேட்பார்களோ என சீரியசான தமிழகம் சிந்தனையில் மூழ்கியது
அந்த பாளையங்கோட்டை சிறை கட்டம்பொம்மனின் தம்பி ஊமைத்துரை இருந்த சிறை, பாரதியும் வ.உசியும் இன்னும் பல பெருமக்களும் இருந்த சிறை அப்படிபட்ட சிறையில் சில நாட்கள் மட்டும் இருந்த கருணாநிதிக்கு சிலை என்பது பலரை ரத்தகொதிப்பு மாத்திரைகளை தேடவைத்தது
ஆனாலும் அம்மாத்திரைக்கு அவசியமில்லாமல் செய்தார் கணல் கண்ணன்
அன்னாரின் அதிரடி பேட்டியிலும்,நான் சொன்னதில் என்ன தவறு என அவர் சிலிர்த்ததிலும் தமிழக மக்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது
வழக்கமாக பயில்வான் ரங்கநாதனை கண்டு கடுப்பான மக்களுக்கு இப்பொழுதெல்லம் மாதவன், அஜீத், இளையராஜா போன்ற தேசாபிமான சினிமா பிரபலங்கள் ஆறுதல் தருகின்றனர்
அந்த வரிசையில் பல்டி அடித்து குதித்து வந்து முன்னால் நிற்கின்றார் கணல் கண்ணன்
ராம்சாமி சிலையினை அகற்றவேண்டும் என அவர் சொல்வது தவறென சொல்ல முடியாது, சர்ச்ச் முன் யூதாஸின் சிலையினை வைக்க முடியாது, வாடிகன் முன் திருசபையினை உடைத்த மார்ட்டின் லுத்தரின் சிலையினை நினைத்து பார்க்கவே முடியாது
அப்படி இந்து ஆலயம் முன் இந்து துவேஷியின் சிலை இருக்க முடியாது, இருக்க கூடாது என்பதுதான் நிஜம் அதனைத்தான் கணல் கண்ணன் சொன்னார்
இப்படி கொஞ்சம் சீரியசான விஷயம் வெளிவந்தால் தமிழக திராவிட கும்பல் விடுமா? அவை மக்களை சிரிக்க வைத்தே வழக்கபட்டவை அல்லவா?
அதனால் அடுத்தடுத்த காமெடிகளுக்கு தயாராகின்றன, தமிழக மக்களும் சிரிக்க தயாராகின்றார்கள்
சிந்திக்க வைக்கும் பகுத்தறிவு இயக்கம் என வந்தவர்கள் இப்படி சிரிக்க வைத்து கொண்டே இருப்பதுதான் அவர்கள் தமிழர்கள்மேல் கொண்டிருக்கும் அன்பின் பெரும் அடையாளம்
இப்போது திருசெந்தூர் யாகம் சுத்த தமிழில் நடந்ததா இல்லை சமஸ்கிருதத்தில் நடந்ததா என்பது பெரும் வாதமாகிவிட்டது
இந்த வாதத்தில்பங்குபெற தமிழ் உணர்வாளர்கள், ஆசிவக கோஷ்டிகள், தமிழனங்கு உருட்டல்கள், தமிழன் மதம் தமிழ் சைவம் எனும் சொல்லும் சில ஆதீனங்கள், தமிழ்வழிபாடு என கதறும் சில உருட்டு சுருட்டு தமிழ் கோஷ்டிகள்லெல்லாம் எங்கே என தேடினால் அவைகளும் சிரித்து கொண்டுதான் இருக்கின்றன
யாரை பார்த்து அவை சிரிக்கின்றன என தேடினால் அவைகள் கண்ணாடியில் தங்களை பார்த்துத்தான் சிரித்து கொண்டிருக்கின்றன….
கோமாளிகள் எல்லாம் கோஷ்டிகளாக தான் கோமாளி தனம் செய்வார்கள் என்று கோடிட்டு அல்ல கட்டுரையே எழுதி சும்மா கிழி கிழி என்று கிழித்து விட்டீர்…
What a wonderful write_ up ! Title itself is very attractive & inviting too !
How could you manage to write so many topics at a time with full concentration ? That too very vivid & clear while presenting !
கண்ணாடியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரே போடு போட்டு வீட்டீர்கள். சிரிப்புப் பதிவு அருமை. அவர்களை சிரிப்பாய் சிரிக்க வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.