பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா
தென் தமிழ்நாட்டுக்கு பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா, புதிது புதிதான சாலைகள், குளங்கள் என உருவாக்கி தென் தமிழகத்தை மாற்றியவர்
அந்த சாலைகளின் வழிதான் சாத்தூர், சிவகாசி, விருதுநகர் எல்லாம் வியாபார தொழில் மையங்களாக மாறின, ஆனால் அவளுக்கொர் நினைவு இல்லம் இல்லை
திருச்சியில் இருந்த அவள் மாளிகை அரசு அலுவலகமாயிற்று, மதுரையில் இருந்த அவள் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று
இப்படி தமிழ்நாட்டுக்கு உழைத்த எத்தனையோ அரசர்கள், அரசிகள் அடையாளம் அற்று போயினர்
ஆங்கிலேயர்களிலும் தமிழருக்கு உழைத்தவர் இருந்தனர், மருத நாயகம் போல பொல்லா ஆங்கிலேயரை எதிர்த்த வீரர்களும் இருந்தனர்
அவர்கள் யாருக்குமே ஒரு செங்கல் இருப்பதாகவும் தெரியவில்லை, அவர்கள் எல்லாம் இங்குதான் வாழ்ந்தார்கள்
ஆனால் குற்றவாளி என கோர்ட் சொல்லி, எந்த போயஸ் இல்லம் குற்றவாளிகளின் முகாமாக செயல்பட்டது என சொன்னதோ அது நினைவாலயம் ஆக போகின்றதாம்
இது கண்டிக்கதக்கது
அந்த போயஸ்கார்டன் வீடு ஒரு சிறைச்சாலை, “ஜெயா நினைவு சிறைச்சாலை” அல்லது “ஜெயா நினைவு பைத்தியக்கார மருத்துவமனை” என மாற்றினால் மிக்க பொருந்த கூடியது,
அதுவும் இல்லாவிட்டால் திருடர்களிடமிருந்தும், சந்தன வீரப்பன் , ஆட்டோ சங்கர் போன்றோரிடமிருந்து பறிக்கபட்ட ஆயுதங்கள், கொள்ளை பொருட்களின் மியூசியமாக மாற்றலாம்
அதற்கான தகுதி அதுதான்.