மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி , திருநெல்வேலி

Image may contain: outdoorகிறிஸ்தவர்கள் மட்டும்தான் தென்னிந்தியாவில் கல்வி வளர்த்தார்கள் என்பது சரியான வாதம் அல்ல. அவர்கள் கல்விக்கான முயற்சிகளை தொடங்கினார்கள் சந்தேகமில்லை

ஆனால் அவர்கள் கல்விநிலையங்களால் பல மாறுதல்கள் நிகழ்வதை கணித்த தென்னக இந்துக்களும் விழித்துகொண்டு கல்வி நிறுவணம் அமைத்தார்கள்

தமிழ் அழிவதையும், சில கலாச்சாரங்கள் அழிவதையும் தடுக்க எண்ணி அவர்கள் செய்த முயற்சி அது.

ஆங்கிலம் கற்கவேண்டும், அதே நேரம் தமிழ் அழியாமல் காக்கபடவேண்டும் என்ற உன்னத நோக்கம் அவர்களது, அப்படி பலர் பல கல்வி நிலையங்களை உருவாக்கியிருக்கின்றார்கள்

கிறிஸ்தவர்கள் தங்கள் மத அடையாளங்களோடு கல்லூரிகள் நடத்தியபொழுது சற்றும் பின்னடையாமல் இந்து கல்லூரிகளும் அக்காலத்திலே நடத்தபட்டிருக்கின்றன‌

இந்துக்களின் குரல் என்பது எப்பொழுதுமே ஓங்கி ஒலித்த தேசமாகவே இது இருந்திருக்கின்றது, இன்று மோடி காலத்தில் மட்டும் குதிக்கின்றார்கள் என்பதல்ல விஷயம்.

அன்றே தங்களை காத்து கொள்ள விழிப்பான சமூகமாகவே அது இருந்திருக்கின்றது.

எத்தனையோ பெரும் மனிதர்கள் கல்விக்காகவும் கலாச்சாரம் மதம் காக்கவும் உழைத்திருக்கின்றார்கள், செட்டி நாட்டு தனவான்களை போல பெரும் பணி செய்திருக்கின்றார்கள்

அவர்களில் ஒருவர் மதுரை திரவியம் தாயுமானவர்

வரலாறு சொல்வதன்படி தமிழ் வளர்த்த நெல்லை பெருமக்கள், சைவ கழகம் எல்லாம் கொண்டிருந்த நெல்லை மக்கள் 1859லே இந்து பள்ளி தொடங்கியதாகவும் பிற்காலத்தில் அது நெருக்கடியில் தள்ளபட மதுரை திரவியமும் அவரின் சகோதர தாயுமானவரும் அள்ளிகொடுத்த பணத்தில் அது மறுவாழ்வு பெற்றதாகவும் ஒரு செய்தி உண்டு

இன்னொரு செய்தி இருவரும் ஒருவரே என்கின்றது.

எப்படியோ அப்படி ஒரு மனிதர் இருந்திருக்கின்றார் என்பது மதிதா இந்து கல்லூரி என பெயர் பெற்றிருப்பதால் தெரிகின்றது.

இவர் யார்? என்ன செய்தார்? அவர் ஏதும் ஆதீன சாமியாரா? இல்லை தனிமனிதனா? என்பது பற்றி தெரிந்துகொள்ள ஆவல்

ஆனால் இன்னும் குறிப்புகள் கிடைக்கவில்லை

நெல்லையில் பல்கலைகழகம் அமைக்கபட்டபொழுது அவர் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், அவரின் தொண்டு அப்படி பாராட்டபடவேண்டியது.

இப்படி ஏராளமான இந்துக்களும் நெல்லை பகுதியில் கல்விபணி செய்தனர், அவர்கள் எல்லாம் எப்படி? ஏன் மறைக்கபட்டனர்?

எத்தனை கல்வி நிலையங்களையோ அக்காலத்தில் உருவாக்கிய மதுரை திரவியம் தாயுமானவர் எப்படி காணாமல் போனார்?

இன்றளவும் அவருக்கு பிறந்தநாளோ இறந்தநாளோ எதுவுமில்லை, யாரும் நினைவு கூர்ந்து பார்த்ததுமில்லை

இவர்களை எல்லாம் மறைத்து கிறிஸ்தவ மிஷினரிகளும் அதனை தொடர்ந்து பகுத்தறிவுவாதிகளுமே எழுத படிக்க சொல்லிகொடுத்தனர் எனும் கருத்துக்கள் வலுபடுத்தபட்டது ஏன்?

எப்படியோ இந்த மதுரை திரவியம் தாயுமானவரை பற்றி தெரிந்தவர்கள் சொன்னால் மிக்க மகிழ்ச்சி