மறக்க முடியா மகத்தான மனிதர் வி.பி சிங்கிற்கு நினைவஞ்சலிகள்

Image may contain: 3 people, people smiling, people sitting and close-up

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது

பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான்,

நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான்

இன்னும் ஏராளம் உண்டு

தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை

அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார்

இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை மறக்கின்றார்கள், ஆம் கலைஞர் வற்புறுத்தியதில் அமைதிபடையினை இலங்கையில் இருந்து திரும்ப பெற்றார் வி.பி சிங்

அப்பொழுது மணலாற்று பகுதியில் பிரபாகரனின் முகமான ஏ1 முகாமினை இந்தியபடை வளைத்திருந்தது, ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் சனியனை தூக்கி வந்து விடுவோம் என இந்திய ராணுவம் வைத்த கோரிக்கையினை ஏற்காமல் அதனை திரும்ப பெற்றார்

விபி சிங் மட்டும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால் அன்றே பிரபாகரன் கதை முடிந்திருக்கும், அவனை காப்பாற்றியதில் விபி சிங்கின் பங்கு முக்கியமானது

இதனை எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், காரணம் இதனை சொன்னால் கலைஞர் உதவினார் என சொல்லவேண்டி இருக்கும் அல்லவா? அந்த அரசியல் மோசடி

விபி சிங் அரசு நீடித்திருந்தால் கலைஞர் அரசு கவிழ்க்கபட்டிருக்காது, ஜெயா அரசியலில் உச்சம் பெற்றிருக்க மாட்டார், தினகரன் இம்சை எல்லாம் வந்திருக்காது

நிச்சயம் அந்த அரசு கலைந்திருக்க கூடாது, பின்னர் அதற்கான விலையினை கலைத்த ராஜிவ் கொடுத்தார்

கலைஞருக்கு மிக பிடிதமானவர் அந்த விபி சிங். காரணம் சில நியாயமான காரியங்களை செய்த ஒரே பிரதமர் அவர்

காவேரியில் கூட நடுவர் மன்றம் கலைஞர் வற்புறுத்தலில் அவர் ஆட்சியில்தான் அமைக்கபட்டது.

புறக்கணிக்கபட்ட பலரின் வலியினை உணரும் மனம் அவரிடம் இருந்தது, கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுகொண்ட மிக சில வடநாட்டு அரசியல்வாதிகளில் விபிசிங் முதன்மையானவர்

அம்பானிகளை அவர் அலறவிட்ட அளவு இன்னொருவர் செய்யவில்லை, தன் ஆட்சிகாலம் முழுக்க அம்பானிகளின் சிம்ம சொப்பணமாகவே இருந்தார்

அரசியலில் அவர் வீழ்த்தபட்டதில் அம்பானிகள் பங்கும் இருந்தது.

இந்திய பிரதமர்களில் மிக மிக நல்ல பிரதமர்கள் எனும் வரிசையில் லால்பகதூர் சாஸ்திரி முதலில் வருவார். நேருவிடம் கூட சில சமரசம் இருந்தது

சாஸ்திரி சமரசத்திற்கு அப்பாற்பட்டவர், அவரை அடுத்து மிக சிறந்த பிரதமர் விபி சிங்.

ஆனால் இருவரும் கொஞ்சகாலம் தான் இந்தியாவினை ஆண்டார்கள் என்பதுதான் மகா சோகம். இந்திய விதி அப்படி

பாபர் மசூதி பிரச்சினையில் அவர் காட்டிய உறுதி வாழ்த்ததக்கது.

இன்று அவரின் பிறந்த நாள், பிரபாகரனின் உயிரை காத்தவரின் பிறந்த நாள், ஆனால் யாருக்கும் நினைவில் இல்லை

அந்த நல்ல மனிதரான விபி சிங்கிற்கு அஞ்சலிகள்…

அதுவும் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்து அவர் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்த ஒரே பிரதமர் என்ற வகையில் விபி சிங் மிக உயர்ந்து நிற்கின்றார்.

அம்பேத்கரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது விபி சிங் என்ற ஒரு விஷயத்தில் அடங்கி இருக்கின்றது டெல்லியின் மகா சர்ச்சைகுரிய சாதி அரசியல்

மறக்க முடியா மகத்தான மனிதருக்கு நினைவஞ்சலிகள்