மாவீரன் ஜூலியஸ் சீசருக்கு வீரவணக்கம்

Image may contain: 1 person

இந்த உலககிற்கு பல விஷயங்களை கொடுத்தது ரோம், அவர்கள் ஏற்படுத்திய பல விஷயங்கள்தான் பின் ஐரோப்பாவில் வந்தன‌

பார்லிமென்ட், சாலை, செனட் சபை, விளையாட்டு அரங்கம், விவாத அரங்கம் , நவீன போர்முறை எல்லாம் அவர்கள் கொடுத்தது, காலண்டரும் அவர்கள் கொடையே

இந்த உலகில் ரோமரின் தாக்கம் பெரிது, உலகை புரட்டிய அந்த ரோம் அரசினை உச்சத்திற்கு கொண்டு சென்றவன் ஜூலியஸ் சீசர்

அசாதாரண வீரன், 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தான். போர்முறையினை மாற்றி காட்டி வெல்ல ஆரம்பித்தான். அக்காலம் வித்தியாசமாயிருந்தது

அலெக்ஸாண்டர் உருவாக்கி சென்ற மாபெரும் சாம்ராஜ்யம் ஐரோப்பா ஆசியாவினை ஆண்டுகொண்டிருந்தது. அவர்களை அசைப்பார் யாருமில்லை

மாபெரும் கப்பல்படையினை கட்டினான் ஜூலியஸ் சீசர். கிரேக்க நகரங்களையே கைபற்றி காட்டினான். யாராலும் வெல்லமுடியா கிரேக்கர்களை அவன் வென்று காட்டியதில் ரோம் அசந்தது

அத்தோடு தன் கப்பற்படையால் ஆங்கில கால்வாயினையும் கட்டுபடுத்தி வைத்திருந்தான்

ஜூலியஸ் சீசர் ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் வருடம் முன்பாகவே கப்பல்படை கட்டி கடலை ஆண்டவன் என்ற வகையில் கடல் ராஜா, கப்பல்ராஜா அவனே

நிலைத்து நின்ற கிரேக்க சாம்ராஜ்யத்தை அடித்து துவைத்து விரட்டியதும் அவனே

அந்த ரோம் அரசர்களால் ஆளபடவில்லை, அன்றே அங்கு குடியாட்சி இருந்தது ஆனால் குழப்பமான குடியாட்சி, அந்த குடியாட்சியின் செனட் சபையின் மகா முக்கிய உறுப்பினரானர் ஜூலியஸ் சீசர்

சீசர், கிராசஸ், பாம்பெ போன்றவர்கள் இன்னும் சில உறுப்பினர்கள்

ஆனால் களத்தில் சீசர் மட்டுமே இறங்கினான், இத்தாலியினை வென்றான் , புகழ்பெற்ற ரைன் நதி போரை நடத்தி ஐரோப்பாவினை ஆட்டுவித்தான்

இங்கிலாந்தில் ஊடுருவிய மிக சில‌ வெளிநாட்டு மன்னர்களில் அவனும் ஒருவன். அந்த அளவு அவனிடம் போர் திறன் இருந்தது

இந்த போர்களால் ரோம் சாம்ராஜ்யம் விரிந்தது, வருமானம் கொட்டிற்று. ஆனால் எதிர்ப்புகளும் வந்தன, ஆம் மொத்தை ஐரோப்பாவும் பொங்கி எதிர்த்தன, பழங்குடியினர் பொதுமக்கள் என திரண்டு வந்தனர்

7 ஆண்டுகள் யுத்தம் நடத்தி அவர்களை ஒடுக்கினான் சீசர், அவனின் மாபெரும் வெற்றி அது, அதற்கு பின் மாபெரும் பயம் அவன் மீது வந்தது, கவுல் போருக்கு பின் அவன் அரசன் ஸ்தானத்தை அடைந்தான்

விளைவு செனட் சபையில் தன் செல்வாக்கு ஏறுவதை உணர்ந்தான், அது பாம்பே கோஷ்டிக்கு பிடிக்கவில்லை மோதல்கள் வந்தன‌

அனைவரையும் அடக்கி சர்வாதிகாரியாய் நின்றான் சீசர், ஆனால் முடி சூடவில்லை

இந்நிலையில் எகிப்து மீது படையெடுக்க தோல்வியே பெறாத ஜூலியஸ் சீசர் தன் கப்பல் படையோடு புறப்பட்டான்

எகிப்தை அலெக்ஸாண்டருக்கு பின் கிரேக்க வம்சமான தாலமி மன்னராக இருந்தான், அவனின் சகோதரியும் மனைவியுமான அவள் ராணியாக இருந்தாள்

அவள்தான் கிளியோபாட்ரா

எகிப்தை சுருட்ட சீசருக்கு 1 நாள் போதும் என்பது எகிப்தியருக்கு தெரியும் என்பதால் சிறிய எதிர்ப்புடன் சரண்டைந்தார்கள்

அவன் அரியணையில் வீற்றிருந்தபொழுது அவன் முன் ஒரு சுருட்டபட்ட ரத்தின கம்பளத்தை இது மன்னருக்கு பரிசு என்றார்கள், அதனை விரித்தார்கள்

அது விரிந்து சீசரின் காலடியில் விழுந்தபொழுது கிளியோபாட்ராவும் விழுந்தாள், அவளை கண்டதும் சீசருக்கு காதல் பிறந்தது

மிகபெரும் சாகசகாரியான கிளியோபாட்ரா அவனை மயக்கி தன்னை எகிப்தின் ராணியாக்க சொன்னாள், மறுக்காமல் செய்தான் சீசர்

ஆம் அந்த தலாமி தலை வெட்டபட்டது, கிளியோபாட்ரா முன்னாலே வெட்டபட்டு ராணியாக அரியணை ஏறினாள் கிளியோபாட்ரா

அவளோடும் பெரும் வெற்றியோடும் ரோமுக்கு வந்தான் சீசர், அவன் போக்கு மாறிற்று, செருக்கு கூடிற்று

யாரிடமும் கேட்காமல் காலண்டர்களை மாற்றினான், பல சீர்திருதத்தை செய்தான், அவற்றில் பல பாலங்களும் கொலோசியம் போன்ற அரங்குகளும் இன்றும் உண்டு

ரோம் எல்லாம் அவன் சிலைகள் வந்தன, அவன் படத்தோடு நாணயம் வந்தது, எதிர்ப்புகளும் வந்தன அதற்கென்ன பாம்பே, கிரேசியஸ் சிலைகளுக்கும் அனுமதிகொடுத்தான்

சர்வாதிகாரியாக இருந்த சீசருக்கு விஷத்தை ஏற்றினாள் கிளியோபாட்ரா, நிச்சயம் சீசருக்கு மன்னனாகும் ஆசை இல்லை ஆனால் கிளியோபாட்ராவிற்கு பிறக்க இருக்கும் மகனை பிற்காலத்தில் மன்னனாக்கும் நிலைக்கு அவனை கொண்டு வந்தாள் கிளியோபாட்ரா

ஜூலியஸ் சீசருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்தான் அவன் பெயர் ஆக்டேவியன் சீசர், அவனுக்கு 18 வயது ஆகியிருந்தது

சீசர் எகிப்துகாரியின் அழகில் மயங்கிவிட்டார், அவரை எதிர்ப்பாரும் யாருமில்லை. நாம் சொல்லும் ஆலோசனையும் அவர் ஏற்பதில்லை. இனி ரோமின் குடியாட்சி எகிப்து வாரிசுன் முடியாட்சியாக போகின்றது

அதில் உண்மை இல்லாமல் இல்லை, ரோமை ஆட்டி வைத்த சீசரை தன் விழியால் ஆட்டி வைத்தாள் கிளியோபாட்ரா

நாடெல்லாம் கலவரம் வெடித்தது, ஒரே காரணம் கிளியோபாட்ரா

சீசர் முக்கியமா? ரோம் முக்கியமா? என குரல்கள் எழ தொடங்கின, ரோமே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தது சபை

ஆயுதமின்றி சபை விவாதத்திற்கு வந்தான் சீசர், முன்னமே முடிவு செய்தபடி நண்பர்களே அவனை குத்தி கொன்றனர், ஆம் இதே மார்ச் 15ல் கொல்லபட்டான் ஜூலியஸ் சீசர்

அவன் உடலில் 35 காயங்கள் இருந்தன, சாகும்பொழுது புருட்டசிடம் கேட்டான் “நீயுமா புருட்டஸ்” அந்த அளவு அவன் அவனை நம்பினான்

புருட்டஸ் சொன்னான், “நீ எனக்கு முக்கியம் சீசர், ஆனால் உன்னை விட ரோம் முக்கியம் மன்னித்துவிடு”

கலகம் தொடர்ந்தது, கிளியோபாட்ரா அசரவில்லை எகிப்துக்கு திரும்பினாள், ஆனால் சீசரின் தளபதியான மாவீரன் ஆண்டனி அவளை மகாராணி என்ற முறையில் மரியாதையாக நடத்தினான் சீசரின் கட்டளை அது

சீசர் இல்லா நிலையில் அவனை வளைத்தாள் கிளியோபாட்ரா, அதன் பின் ஆண்டனிக்கும் சீசரின் மகன் ஆக்டேவியனுக்கும் யுத்தம் நடந்து ஆண்டனி கொல்லபட்டு கிளியோபாட்ரா தற்கொலையால் செத்தது வேறு கதை

எப்படிபட்ட மாவீரன் ஜூலியஸ் சீசர்?

அவனின் யுத்தங்களும், அவன் நடத்திகாட்டிய வியூகமும் வரலாற்றில் நின்றுவிட்டவை ராணுவ பாடமாக வருபவை

பலமான கப்பல்படையினை அமைத்து உலகில் முதல் வெற்றி பெற்றவன் அவனே.

லத்தீன் மொழி 1950 வரை உலகில் ஆட்சி செலுத்த காரணம் அவனே, அவனாலே அம்மொழி வல்லரசின் மொழியாக உலகமொழி ஆனது

அவன் கட்டிய பாலமும், அவன் ஏற்படுத்திய நிர்வாகமும், அவன் கட்டிய விளையாட்டரங்கமும் இன்றும் உண்டு, இன்று உலகில் இருக்கும் எல்லா இந்த விஷயங்களும் அவன் ஏற்படுத்திய சாயலே

ஜூலியஸ் சீசருக்கும், நெப்போலியனுக்கும் ஏகபட்ட ஒற்றுமை உண்டு

இருவரும் குடியரசை முடியராசாக்கியவர்கள் , மாவீர்கள், யுத்த கள ஹீரோக்கள் ஆனால் பெண்ணால் கெட்டவர்கள்

ஜூலியஸ் சீசர் பெற்றுகொடுத்த வெற்றியிலே எகிப்து சிரியா எல்லாம் ரோமர் வசமாயிற்று

சீசருக்கு பின் அவர் மகன் ஆக்டேவியன் சீசர், அகஸ்டஸ் சீசர் என அரியணை ஏறினான். ரோமை பேரரசின் முதல் மன்னன் அவனே

தந்தையின் கனவான தன் மக்களை கணக்கெடுக்க உலகின் முதல் சென்சஸ் கணக்கினை அவனே எடுத்தான், அத்திட்டம் ஜூலியஸ் சீசருடையது

இத்திட்டத்தை அகஸ்டஸ் சீசர் செயல்படுத்தியபொழுதுதான் யூதேயா பெதலகேமிற்கு தன் சொந்த ஊர் என வந்த ஜோசப் மரியாள் தம்பதியருக்கு இயேசு பிறந்தார்

ஜூலியஸ் சீசரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டம், அகஸ்டஸ் சீசரால் நடந்திராவிட்டால் இயேசு பெத்லகேமில் பிறக்க வாய்ப்பே இல்லை

எங்கோ தன்னை ஒருமுறை அவமதித்த சிலரை சிலுவையில் அறைந்து கொன்றான் ஜூலியஸ் சீசர்.

பின்பு அதே ரோமர் ஆட்சியில் சிலுவையில் அறையபட்டார் இயேசு

பின் அந்த கிறிஸ்தவம் ரோமை கைபற்றி சிலுவை அடையாளத்தில் பணிந்திருந்தது

வரலாறு இப்படி ஏகபட்ட சுவாரஸ்யங்களை பதிந்து வைத்திருக்கின்றது

உலக வரலாற்றை புரட்டி போட்ட மாவீரனான ஜூலியஸ் சீசருக்கு இன்று நினைவு நாள்

காலண்டர் முதல், பிரமாண்ட‌ சாலை, விளையாட்டு அரங்கம், பெரும் பாலங்கள், பார்லிமென்ட் , செனட் சபை, உள்ளாட்சி தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என உலகிற்கு ஏராளமான விஷயங்களை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகபடுத்தி உலகிற்கு கொடுத்தவன் சீசர்

தோல்வியே அறியா வீரர்களில் அவனும் ஒருவன்

வீரம், ஆட்சி, போர் , அரசு, நிர்வாகம், காதல் , வஞ்சகம், துரோகம் என எல்லாம் கலந்த வாழ்வு அவனுடையது

அந்த மாவீரன் ஜூலியஸ் சீசருக்கு வீரவணக்கம்

உலகம் இருக்கும் காலம் வரை அவன் பெயர் இருக்கும், ரோமின் பழம் பெருமையிலும், அங்கு இருக்கும் புராதான கட்டங்களிலும் அவன் வாழ்ந்துகொண்டே இருக்க்கின்றான்