மி டூ தொடர்ச்சி …

வைரமுத்து சின்மயி ஒரு பக்கம் முட்டிகொண்டிருக்க இன்னொரு பக்கம் லீனா மணிமேகலை எனும் பெண்ணியவாதிக்கும் சுசி கணேசனுக்கும் முட்டி கொண்டிருக்கின்றது

கணேசன் என்னை கற்பழிக்கமுயன்றார் என லீனா அதிரடி காட்ட, கற்பு என்பது இருபாலருக்குமானது அவர்தான் என்னை கற்பழிக்க முயன்றார் என பதிலுக்கு வித்தியாசமாக கத்துகின்றார் கணேசன்

விஷயம் சுவாரஸ்யமாக செல்கின்றது, இப்பொழுது முதல் சுற்று முடிந்திதிருக்கின்றது, லீனா பக்கம் சேதம் அதிகம்

அடுத்த சுற்று எப்படி இருக்கின்றது என பொருத்திருந்து பார்க்கலாம், விரைவில் இரண்டாம் சுற்று தொடங்கும்

ஓலிம்பிக் போட்டியில் ஒரே நேரத்தில் பல அரங்கங்களில் பல ஆட்டம் நடப்பது போல இங்கு இந்த ஆட்டம் ஆரம்பித்திருக்கின்றது

இன்னும் சில ஆட்டங்கள் விரைவில் தொடங்கலாம்

இப்போதைக்கு வைரமுத்து சினமயி ஒரு பக்கமும், சுசிகணேசன் லீனா இன்னொரு பக்கமும் விளையாடி கொண்டிருக்கின்றார்கள்

வரலட்சுமி என்பவர் தனியாக கத்திகொண்டிருக்கின்றார் அம்மணியுடன் மோத யாரும் களத்தில் இல்லை

இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்தடுத்த சுற்று போட்டி முடிவுகளை பொறுத்து பதிவு செய்யபடும்

மொத்தத்தில் “என்ன கையபிடிச்சி இழுத்தியா?” போட்டி தமிழகத்தில் அமோகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது

செத்துபோன நடிகை நடிகர்கள் தவிர எல்லோரும் களத்தில் இறங்குவார்கள் போல் தெரிகின்றது [ October 16, 2018 ]

Image may contain: 2 people
===========================================================================

இது முழுக்க முழுக்க கிராபிக்ஸ் என்றும், தலைவியின் புகைபடத்தால் பிரபலமாகிவிடலாம் அந்த கேடுகெட்ட சிம்பு செய்த போட்டோஷாப் என்பதை சங்கம் தெரிவித்து கொள்கின்றது

எப்படி நயனால் பிரபலமாகலாம் என அந்த சிம்பு சில காரியங்களை செய்தாரோ, அப்படி இப்பொழுது தலைவியால் பிரபலமாகிவிடலாம் எனும் தன் இயல்பான‌ சிந்தனைக்கு வந்திருக்கின்றார்.

(ஆனால் குஷ்பு என் சகோதரி என்றும் இப்படத்தினை காட்டி சொல்லி திரிவதாக சில தகவல்கள் சொல்கின்றன, சங்கத்தின் கொலைமுயற்சியில் இருந்து தப்ப அவர் அபப்டி சொல்லி கொள்ளலாம்..)

சிம்பு வீடு நோக்கி ஏகே 47 துப்பாக்கியுடன் பாய்ந்த Periya Samy அவர்களையும் , மனித வெடிகுண்டாக கிளம்பிய அந்த Venkedesh Mothilal என்பவரையும் சங்கம் கட்டுபடுத்தி வைத்திருக்கின்றது,

இன்னும் பலர் கிளம்பினாலும் தலைவியின் முடிவுக்காக காத்திருப்பதால் இப்போதைக்கு சிக்கல் இல்லை

இந்திய சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில்தான் இருக்கின்றது

பார்க்க சகிக்காத‌ போட்டோஷாப் படத்தை சங்கம் வன்மையாக கண்டித்து சிம்புவிற்கு எதிராக ஏதும் வழக்கு தொடரலாமா என ஆழ்ந்த ஆலோசனையில் உள்ளது

தலைவியின் முடிவுபடி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்

சிம்பு ஒழிக, சிம்பு டவுண் டவுண்…

(சிம்பு ஒழிக என கோஷமிடுவதில் நயந்தாரா பக்தர்களும் கண்டிப்பாக இணைவார்கள், இணைய வேண்டும் என சங்கம் எதிர்பார்க்கின்றது

சிம்பு இப்பொழுது நமக்கு பொது எதிரியாகிவிட்டார், வாருங்கள்)

[ October 16, 2018 ]

Image may contain: 2 people, people smiling, beard, closeup and indoor
============================================================================

போகிற போக்கில் வைரமுத்து இன்னொரு ஆட்டோ சங்கராக ஆகிவிடுவார் போல..

[ October 16, 2018 ]
Image may contain: 1 person, smiling
=======================================================================

வைரமுத்துவின் நிலமையினை நினைத்தால் பொன்மணி வைரமுத்து எனும் வைரமுத்துவின் மனைவி நினைவுக்கு வருகின்றார்

அந்த அம்மணி வைரமுத்துவின் விசிறி, வைரமுத்துவின் தமிழுக்கு பெரும் விசிறியான அம்மணி அப்படியே மனைவி ஆனது

வரும் செய்திகளை கண்டால், ஏன்யா “அந்த காலத்திலிருந்து இன்னும் நீர் திருந்தவில்லையா அன்பரே” என உலக்கையினை எடுக்குமா? இல்லை ஹிலாரி கிளிண்டன் ஸ்டைலில் “அவர் யாரையும் ஏமாற்றவில்லை, பலவந்தபடுத்தவுமில்லை” என சொல்லுமா இல்லையா என தெரியவில்லை

[ October 16, 2018 ]

==========================================================================

மி டூ பெரியாரின் சீடன்
மி டூ அண்ணாவின் தம்பி
மி டூ திராவிட தன்மான போராளி
மி டூ தமிழுக்கும் தமிழருக்கும் தலை கொடுத்தவன்

எனக்கு தெரிந்த மி டூ இவ்வளவுதான் உடன்பிறப்பே

[ October 16, 2018 ]
Image may contain: one or more people, sunglasses and closeup
=========================================================================

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது ‍- நடிகை ஷில்பா ஷிண்டே

உண்மைக்கான காந்தி விருது, சத்தியத்திற்கான அரிச்சந்திரன் விருதை உடனே இவருக்கு வழங்க வேண்டும்

[ October 17, 2018 ]

============================================================================

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்து நிற்குமாம் கொக்கு என்பதற்கு இப்பொழுது நடிகை கஸ்தூரியே சாட்சி

இந்த சில ஓடுமீன்களின் மி டூவின் பொழுது அவர் அமைதி காப்பது அச்சமூட்டுகின்றது

உறுமீனாக அவர் கடைசியில் மீ டூ என கத்தும்பொழுது எத்தனை நாரைகள், கொக்குகள் எல்லாம் அலறுமோ தெரியாது

அம்மணிபற்றி தெரிந்ததால் உறுதியாக சொல்லலாம் எல்லோரும் மி டூ சொல்லிமுடித்தபின்பு அணல் பறக்க வைக்க அவர் காத்துகொண்டிருக்கலாம்

[ October17, 2018 ]
Image may contain: 1 person, smiling, sitting