முள்ளும் மலரும்

Image may contain: 2 people, people smiling

முள்ளும் மலரும் படம் ஓடிகொண்டிருக்கின்றது

மிக மிக அற்புதமான படம், படத்தில் ரஜினி அட்டகாசமாக நடித்திருந்தார, நல்ல வேளையாக அவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்பு வந்த படம் அது

இந்த படம் 1990க்கு பின்பு வந்திருந்தால் ரஜினி பட முடிவில் அந்த ஊருக்கே ஜமீன் வாரிசாக இருந்த உண்மை புரியும் அல்லது அந்த மலையினையே விலைக்கு வாங்கும் அளவு உழைத்து பணக்காரர் ஆகியிருப்பார், அந்த வின்சையும் ஊரையும் மொத்தமாக சரத்பாபுவிற்கு கொடுத்துவிட்டு இமயமலை நோக்கி நடந்திருப்பார்

நல்ல வேளையாக இந்த இம்சை எல்லாம் அப்பொழுது இல்லை என்பதால் மிக மிக உருக்கமான காவியம் கிடைத்தது

இந்த படத்தின் பல காட்சிகளை பல பிற்கால தமிழக சினிமாக்களில் காப்பியடித்திருக்கின்றார்கள்

இந்த படத்து கிளைமேக்ஸ் தான் கேரளாவுக்கு சென்று “அன்னியத்த பிறவு” என்றாகி தமிழில் “காதலுக்கு மரியாதை” என திரும்ப வந்தது

ரஜினி அந்த தவில் கோஷ்டியினை தடுத்து இசைக்க சொல்லி ஆடும் காட்சிதான் பருத்தி வீரனில் “ஊரோரம் புளியமரம்” பாடலானது

இன்னும் எத்தனைபேர் சுட்டிருக்கின்றார்களோ தெரியாது, ஆனால் நடந்திருக்கும்

எப்படிபட்ட நடிகன் ரஜினி? உண்மையில் பாலசந்தர் அற்புதமான நடிகனைத்தான் அடையாளம் கண்டிருக்கின்ற்றார், ஆனால் வியாபார தமிழ் சினிமா அவரை ஒரே கோணத்தில் நட்சத்திர அந்தஸ்திலே நிறுத்தி அந்த சிறந்த நடிகனின் ஒரே நடிப்பு மட்டும் தெரியுமாறு பெரும் கொடுமை செய்துவிட்டது

இனி அப்படி படங்களும் வராது, ரஜினியும் அப்படி இனி நடிக்க மாட்டார்

படத்தில் ரஜினியினை விட நடிப்பில் பின்னி எடுத்தவர் ஷோபா, அப்பாவியான பாசமிகு தங்கையாக அப்படி ஒரு வெகுளி நடிப்பு

எப்படிபட்ட மகா அற்புத நடிகை ஷோபா?

அப்படம் நடிக்கும்பொழுது அவருக்கு 16 வயது என்பதை நம்ப முடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆக வேண்டி இருக்கின்றது

மகேந்திரன் நிச்சயம் தமிழ் சினிமாவின் தனிபெரும் இயக்குநர், சந்தேகமில்லை

படம் சொல்வது இதுதான்

ஷோபாவின் மிக இளவயது மரணமும், ரஜினிக்கு கிடைத்த அந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் அதனால் திசை மாறி சென்ற ரஜினியின் சினிமா வாழ்வும் தமிழ் சினிமாவின் சாபங்கள்.