மெர்சல் எனும் இம்சையினை இன்னும் பார்க்கவில்லை
மெர்சல் படத்தில் பிரதமர் மோடியின் திட்டங்களையும், ஜிஎஸ்டியினையும் விஜய் விமர்சித்துள்ளார், தவறாக பாஜக அரசின் கொள்கை சித்தரிக்கபட்டிருக்கின்றது, அதனால் படத்தை தடை செய்யவேண்டும் : தமிழிசை
என்னடா விஜய்க்கு வந்த சோதனை?
அதிமுக அரசாவது படம் வெளிவரும் முன்னால்தான் பிரச்சினை செய்யும், வந்த பின் விட்டுவிடும்
ஆனால் பாஜக வந்தபின்னாலும் விடாது போலிருக்கின்றது
தமிழிசையின் குற்றசாட்டு ஓரளவு நியாயமானது என்பதாலும், அட்லியும் விஜயும் அநியாயத்திற்கு அள்ளி விட்டிருப்பதாலும் கொஞ்சம் சிக்கல்தான்
இனி என்னாகும்?
அவரசரமாக அந்த “ஆளபோறான் தமிழன்” என்பதை “ஆளபோறாள் தமிழச்சி” என திருத்தி ஏதாவது செய்யமுடியுமா என விஜய் கோஷ்டி நினைக்கலாம்
ஆனால் அதற்கெல்லாம் மசிபவரா தமிழிசை, இனி அந்த படம் ஓடும் தியேட்டர்காரர்களுக்கு எல்லாம் மெர்சல்தான், எப்பொழுது பக்தர்கள் காவிகொடியோடு போவார்களோ தெரியாது,
பாபர் மசூதியினையே இடித்தவர்களுக்கு இந்த தியேட்டர் எல்லாம் எம்மாத்திரம்?
ஆனாலும் அம்மா தமிழிசை
2 நாளில் முடங்கபோகும் ஒரு படத்திற்கு இப்படியொரு பப்ளிசிட்டி ஏன் கொடுத்தீர்கள்? ஏதோ விஜய் இயக்கத்தின் ஸ்லீப்பர் செல் உங்கள் அருகிலே இருக்கின்றது ஜாக்கிரதை
இந்த மெர்சலுக்கு முன் பைரவா என்றொரு விஜய் படம் வந்தது, படம் படுதோல்வி ஆனால் தோல்வியினை மறைத்த விஷயம் ஜல்லிகட்டு போராட்டம்
கடந்த தை பொங்கலில் அந்த படம் வரவும், ஜல்லிகட்டு போராட்டம் விஸ்வரூபமெடுக்க, அந்த பைரவா வந்த இடமும் தெரியவில்லை, போன இடமும் தெரியவில்லை
அந்த ஆர்ப்பாட்டத்தில் படம் காணாமலே போக, சத்தமில்லாமல் விஜயும் மெரீனா கூட்டத்தில் புகுந்து ஜல்லிகட்டு வாழ்க என சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டார்
எப்படியோ ஜல்லிகட்டு போராட்டத்தில் பைரவா படத்தின் மாபெரும் தோல்வி மறைக்கபட்டது
அதனால்தான் இந்த மெர்சல் படத்தில் விஜய் காளை மாடுகளுடன் போஸ் கொடுத்து நன்றிகடன் தீர்த்தார் என்பது சமீபத்திய தமிழ் சினிமா ஆராய்ச்சியாளர்கள் முடிவு
ஆனாலும் மெர்சலுக்கு பைரவா எவ்வளவோ பரவாயில்லை என்று ஆங்காங்கே சில குரல்கள் கேட்கத்தான் செய்கின்றன
இந்த மெர்சல் படத்தினை பற்றி வரும் தகவல்கள் சொல்வது இதுதான்
இந்த இயக்குநர் அட்லி என்பவர் சாதரணமானவர்கள் அல்ல, அவருக்காக பல இயக்குனர்கள் முன்பே தமிழ் படம் எடுத்துவிட்டு செத்துபோய்விட்டார்கள்
இன்னும் ஹாலிவுட்டில் கிட்டதட்ட 50 இயக்குநர்களும் , கொரிய மொழியில் சில இயக்குநர்களும் அசிஸ்டெண்டாக இருக்கின்றார்கள்
அவர்கள் படமெடுத்து இந்த அட்லிக்கு அனுப்பிவிடுகின்றார்கள், அவ்வளவு பெரும் சக்திவாய்ந்த நபர் இவர்
இவர் குரு அல்லவா? சிஷ்ய கோடிகளும் முன்பு வாழ்ந்த சில இயக்குநர் முனிவர்களும் சொன்ன தத்துபடி கஷாயம் செய்துவிடுகின்றார்
இன்னும் ஏராளம் வரும் பாருங்கள், உலகெல்லாம் அவருக்காக அத்தனை பேர் உழைத்திருக்கின்றார்கள் இன்னும் உழைப்பார்கள்.
எவ்வளவு கொடுத்து வைத்தவர் இந்த அட்லி??
இந்த மெர்சல் எனும் இம்சையினை இன்னும் பார்க்கவில்லை, பார்க்கும் ஆசையும் இல்லை
ஆனால் டிவியில் டிரைலர் ஓடியது அதில் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம், இங்க மட்டும் ஏன் என அந்த இளைய தலைவலி கத்திகொண்டிருந்தார்
அன்பரே இட்லி, ச்சே அட்லி நீர்தானே படத்து இயக்குநர்?
உலகில் சிங்கப்பூரில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் அரசு மருத்துவமனைகளில் இலவசம்தான், ஏன் இந்தியாவில் அரசு மருத்துவமனை இல்லையா? நீர் செல்லமாட்டீர் அதனால் தெரிந்திருக்கின்றது
ஆப்கன் முதல் சோமாலியா வரை எல்லா நாட்டிலும் அரசு மருத்துவனை உண்டு
சிங்கப்பூரில் அரசு மருத்துவமனை உண்டு, ஆனால் ரஜினி சிகிச்சை பெற்ற எலிசபெத் மருத்துவமனை என்ன அரசுடையதா?
ஜெயலிலதாவோடு அப்பல்லோவில் பந்து விளையாடி பிசியோ சிகிச்சை கொடுத்த நர்சுகள் என்ன சிங்கப்பூர் அரசால் அனுப்பபட்டவர்களா? அரசு அப்படி செய்யுமா?
அரசு மருத்துவமனை என்றால் இன்னொரு நாட்டு பிரஜையான ரஜினிக்கு சிகிச்சை அளிக்க்க சட்டம் வகை செய்யுமா?
மிஸ்டர் இட்லி, அந்த விஜய் என்ன எழுதிகொடுத்தாலும் பேசுவார், பழனிச்சாமி காமராஜரை விட நல்லாட்சி நடத்துகின்றார் என எழுதி கொடுத்தாலும் அப்படியே ஒப்பிப்பார்
ஆனால் இயக்குநர் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா?
எல்ல்லா நாட்டிலும் அரசு மருத்துவமனை உண்டு, அது அம்மக்களுக்கானது. அதே நேரம் தனியார் மருத்துவமனைகளும் உண்டு
பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டு நோயாளிகள் வருவார்கள், ரஜினி சிங்கப்பூர் சென்றது போல, அது அந்நிய செலாவணி கொட்டும் விஷயம் என்பதால் அரசுகளும் அனுமதிக்கின்றன
உலகில் எல்லா நாட்டு நிலவரமும் இதுதான், கியூபா மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு
ஆக சிங்கப்பூரில் மட்டும் மருத்துவம் இலவசம் என்பதும், இந்தியாவில் மட்டும் பணம் என்பதெல்லாம் சுத்த அபத்தம்.
மிஸ்டர் அட்லி, நிச்சயம் நீர் இப்பொழுது ரஜினி கமலின் பழைய படங்களை பார்த்துகொண்டிருப்பீர் என்பது தெரியும், இனியாவது கொஞ்சம் வசனங்களை பிதற்றாமல் எழுதும்
அரசு மருத்துவமனை உள்ள சிங்கப்பூரில் மிகபெரும் தனியார் மருத்துவமனைகள் பெரும் வியாபாரமே நடத்துகின்றன என்பதை ஏன் சொல்லவில்லை?
இங்குள்ள நிலைதான் அங்கும், அங்கு வேலை செய்யும் அந்நியநாட்டு மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சில சலுகைகள் கிடைக்குமே தவிர வேறு அல்ல.
அங்கிருக்கும் தனியார் மருத்துவமனைகளை அந்நிய நாட்டு தொழிலாளர்கள் நினைத்துபார்க்க முடியாது
இதோ இந்தியாவில் ஈழ, திபெத், ரொஹிங்க்யா அகதிகளுக்கெல்லாம் அரசு மருத்துவமனையில் இலவசம்தான்.
ஏதோ எழுதிவிட்டீர் அதனை அந்த விஜயும் சொல்லிவிட்டார், விஜய்க்கே சொந்தமாக யோசிக்கும் புத்தி கிடையாது எனும்பொழுது அவர் அடிப்பொடிகள் எப்படி சிந்திக்கும்? அவைகள் ஊரெல்லாம் ஒப்பாரி வைக்கின்றன
இனியாவது பார்த்து எழுதும் மிஸ்டர் அட்லி, இல்லையென்றால் இட்லிபோல பிசைந்துவிடுவார்கள்.
ஏம்பா விஜய்
கோவில் கட்ட இருக்கும் பணத்தில்தான் ஆஸ்பத்திரி கட்டவேண்டுமா?
இந்த மாதிரி நீர் உட்பட நடிகர் நடிகையர் மறைத்து வைக்கும் பணத்தில் கட்டினால் ஆஸ்பத்திரி வராதா?