மே 18
மே 18ம் தேதி இந்திய வரலாற்றில் தனித்துவமானது, இந்நாளில்தான் 1974ல் இந்தியா தன்னை அணுசக்தி நாடாக உலகுக்கு அறிவித்தது
அது இந்தியா சீனாவிடம் அடிவாங்கிய 1962க்கு பின் மெல்ல பலமான நேரம், நேரு இருந்தவரை குறிப்பிடதக்க வெற்றி ஏதும் பெறாத இந்தியா சாஸ்திரி காலத்தில் பலமாகி திருப்பி அடித்தது
சுதந்திர இந்தியாவின் மிக துணிச்சலான உண்மையான பிரதமர் சாஸ்திரிதான், சுதந்திர போராட்டத்தின் வேகமும் தாகமும் நாட்டுபற்றும் அவரிடம்தான் இருந்தன, அவர் சில வருடங்களுக்குள் மரணமடைந்தது நாட்டின் துரதிருஷ்டம் எனினும் அடுத்து வந்த இந்திரா தன் தந்தையின் அரசியலை பின்பற்றாமல் சாஸ்திரியின் அரசியலை முன்னெடுத்தார்
காரணம் நேருவின் அரசியலால் நாட்டுக்கு வீழ்ச்சித்தான் உண்டாகும் எனபது அவருக்கு தெரியாதது அல்ல அது ஊருக்கே தெரிந்த உண்மை
இந்தியாவின் வங்க வெற்றி அசாத்தியமானது, அதை தொடர்ந்து இந்திராவுக்கு சில எச்சரிப்புகள் வந்தன, இந்தியாவின் வெற்றியினை விரும்பாத வல்லரசுகள் இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கலாம் குறிப்பாக சீனா பல வழிகளில் தொல்லை கொடுக்கும் இந்தியா வளர்வதை பலமாவதை பலநாடுகள் விரும்பாது எனும் எச்சரிக்கை வந்தது
அணுகுண்டு செய்யாமல் இனி நாட்டினை பாதுகாக்கமுடியாது என உணர்ந்த இந்திரா, இந்திய அணுசக்தி கழகத்திடம் பொறுப்பை ஒப்படைத்தார்
அக்கழகம் 1944ல் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவால் தொடங்கபட்டு அணு ஆய்வில் ஈடுபட்டது, உலகுக்கு அமைதிக்கான அணு ஆராய்ச்சி என தன்னை அடையாளபடுத்தியது
1974ல் அதன் தலைவராக டாக்டர் ராமண்ணா இருந்தார், இந்தியாவின் முதல் அணுகுண்டு அவர் தலமையில்தான் தயாரிக்கபட்டது
இந்திய அணுசக்தி துறையில் மறக்கமுடியாதவரான ராஜா ராமண்ணா கன்னடமாநிலத்தவர்
அக்குழுவில் டாக்டர் பி. கே. ஐயங்கார், டாக்டர் ராஜகோபால சிதம்பரம், டாக்டர் நாகப்பட்டினம் சாம்பசிவ வேங்கடேசன், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் வாமன் தத்தாத்த்ரேய பட்ட்சாரியா ஆகியோர் தலமை குழுவாக இருந்தனர்
இவர்களில் பி.கே அய்யங்கார் திருநெல்வேலிக்காரர், ராஜகோபால் சிதம்பரமும், நாகபட்டினம் சாம்பசிவன் வெங்க்டேசனும் அப்துல் கலாமும் தமிழர்கள், பட்டாச்சாரியா மட்டும் மத்திய பிரதேசத்தவர்
இந்த குழுவில் இளையவர் அப்துல் கலாம்
ஆம் முதல் இந்திய அணுகுண்டை தயாரித்த 6 பேரில் 4 பேர் தமிழத்தவர்கள்
மிக சிரமபட்டு பல தோல்விகளுடன் தொடர்ந்த அந்த திட்டம் சில ஆண்டுகளாக அதாவது வங்கபோர் தொடங்கியதில் இருந்து உருவான அந்த திட்டம் 1974ம் ஆண்டு இதே மே 18ல் வெற்றியாக போக்ரானில் முடிந்தது
அந்த வெற்றி சாதாரணம் அல்ல, காரணம் அணுகுண்டுக்கான கருவிகளும் அணுபொருளும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு என்பதுதான் உலகை வியக்க வைத்தது, அணுகுண்டுக்கான மூலபொருளை இந்தியாவின் சைரஸ் நிறுவணம் கொடுத்தது
அணுகுண்டுக்கான கருவியினை 400 கிலோ எடையும், சுமார் 1.25 மீட்டர் விட்ட அளவும் கொண்ட இக்கருவியினை பாபா அணுசக்தி மையம் தயாரித்தது. பொக்ரானில் சுமார் 110 மீட்டர் ஆழத்தில் நடந்த இந்த சோதனை 2 கிலோ டன் ஆற்றல் வெளிப்பட்டதாக தகவல் வந்தாலும் உண்மையில் 2 முதல் 20 கிலோ டன்கள் வரை ஆற்றல் வெளியிட்டிருக்கலாம் என்பது உலக உளவு தகவல்
இந்த சோதனைக்கு பின் உலகின் பலமான நாடுகளில் ஒன்றானது இந்தியா, எனினும் இந்திரா இதனை ஒரு சோதனையாக முடித்துவிட்டு அமைதியனார் அணுசக்தி நாடாக பிரகடனபடுத்தவில்லை
அன்று புத்த பூர்ணிமா நாளாக இருந்ததால் இச்சோதனைக்கு “சிரிக்கும் புத்தா” என பெயரிட்டு சீனாவினை நோக்கி சிரித்தது இந்தியா
இந்தியாவிடம் அணுகுண்டு வந்ததால் அதன் பலம் அதிகரித்தது அதன் பின் சீனாவோ பாகிஸ்தானோ வம்பு சண்டைக்கு வரவில்லை
வழக்கம் போல் அமெரிக்கா கொந்தளித்தது, கனடா இந்தியாவோடு தூதரக உறவுகளை முறித்தது இன்னும் பல மிரட்டல்கள் வந்தன, இந்திரா அசைந்து கொடுக்கவில்லை
இதை தொடர்ந்து ஏற்பட்ட பல உலகளாவிய சிக்கல்கள் தனக்கு எதிராக வரகூடும் என்றும் அதே நேரம் உள்நாட்டில் சில சலசலப்புகள் எதிரி நாட்டு கைகூலிகளால் வர தொடங்கியதையும் உணர்ந்த இந்திரா மிசாவினை கொண்டுவந்தார்
மிசா சட்டம் இந்திராவின் கொடுமை என சொல்லபட்டாலும் அணுகுண்டு செய்த இந்தியாவினை தொலைத்துவிடுவது என சிலநாடுகள் செய்த முயற்சியினை முறியடித்த காட்சியும் உண்டு
அந்த சோதனைக்கு பின் 24 ஆண்டுகள் எந்த சோதனையும் நடக்கவில்லை
1998ல் வாஜ்பாய் பிரதமரானார், 1974ல் அணுகுண்டு செய்த அதே விஞ்ஞானிகளை அழைத்தார் அப்பொழுது ராஜண்ணா ஓய்வில் இருந்தாலும் ஆலோசனைகளை வழங்கினார்
அப்துல் கலாம் , ஆர்.சிதம்பரம் போன்றோரின் வழிகாட்டலில் இரண்டாம் அணுகுண்டு போக்ரானில் வெடிக்கபட்டது, வாஜ்பாய் இந்தியாவினை அணுசக்தி நாடாக பிரகடனபடுத்தினார்
இன்று இந்தியா அணுசக்தி நாடாக உலகில் பலமாக நிற்கின்றது, 1971க்கு பின் பெரும் போர்களை தொடுக்க இந்திய எதிரிகள் தயங்க இந்த அணுகுண்டுகள்தான் காரணம்
இப்படி நாட்டை பலமாக்கிய அணுகுண்டை செய்த விஞ்ஞானிகளில் 4 பேர் தமிழர்கள், ஆம் விஞ்ஞான தமிழர்கள்
இந்த பெரும் சாதனையாளர்கள் பெயரில் தமிழகத்தில் கல்லூரி, பள்ளி உண்டா, சிலைகள் உண்டா என்றால் இல்லை
ஒரு தெருவுக்கு அவர்கள் பெயர் உண்டா என்றால் இல்லை, ஒரு முட்டு சந்துக்கு கூட இல்லை
ஏன் என்றால் இவர்களில் 3 பேர் பிராமணர்கள் ஒருவர் சூத்திர சங்கியான கலாம், எல்லாவற்றுக்கும் மேல் இந்த நால்வரும் தேசியவாதிகள்
இவர்கள் ஈரோட்டு ராம்சாமியால் கல்விகற்றோம் என சொன்னவர்கள் அல்ல, அப்படி சொல்லியிருந்தால் இந்நேரம் அவர்கள் படம் அறிவாலய ஆல்பத்தின் மூலையில் எங்கோ இருந்திருக்கலாம் அவ்வளவுதான் நடந்திருக்கும்
அவர்கள் தேசியவாதிகள் நாட்டுபற்றாளர்கள் என்பதால் அவ்வளவு பெரிய சாதனையினை செய்து நாட்டை பலபடுத்தினார்கள்
இன்று இந்தியா முதல் அணுகுண்டு செய்த நாள், அந்நாளில் தமிழகத்தில் இருந்து நான்கு அணுசக்தி விஞ்ஞானிகள் அதில் பங்குபெற்றார்கள், அவர்கள் உழைப்பால்தான் அணுகுண்டு சாத்தியமாயிற்று அவர்களுக்கு உரிய அடையாளங்கள் தமிழக பள்ளிகள் கல்லூரிகளில் நிறுவபட வேண்டும், மாணவ சமூகம் இவர்களையெல்லாம் வழிகாட்டியாக கொண்டு நாட்டுக்கு பயனுள்ள விஞ்ஞானிகளாக வரவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்
தமிழகபாடபுத்தகங்களில் இந்த விஞ்ஞானிகள் பெயரெல்லாம் வரவேண்டும், அவர்கள் தேசிய விஞ்ஞானிகளை வழிகாட்டியாக கொண்டு வளரவேண்டும் ஆனால் தமிழக பாடநூல்களில் என்னென்ன வந்து கொண்டிருக்கின்றது என்பது எல்லோரும் அறிந்த சோகம்
இந்த நாள் இந்தியா எனும் நம் அருமையான தேசம் பலமான நாள், சாஸ்திரிக்கு அடுத்து இந்திரா வந்து அவர் வழியில் நாட்டை பலமாக்கிய நாள்
அவ்வழியில்தான் வாஜ்பாய் இரண்டாம் அணுகுண்டை செய்தார், மோடி காலத்தில் அணுகுண்டை சுமந்து செல்லும் பிரமாண்ட ஏவுகனைகளுடன் தேசம் வலுத்து நிற்கின்றது
பலமான பாரதம் என பெருமை கொள்ளும் நேரம், அந்த விஞ்ஞானிகளுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்து அந்த விஞ்ஞானிகளை மாணவசமூகத்திடம் கொண்டு சேக்கும் கடப்பாடு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்
இப்படி எல்லா subject லயும் all rounder… ஏறக்குறைய தெரியாத விஷயங்கள் இல்லை.. தகுதியே இல்லாத லியோனி பாட நூல் குழுவின் தலைவராக இருந்தால் இப்படி தான் இவர்கள் பெயர்கள் வரும் சன்னதிகள் மறந்து விடுவார்கள்…. ஏன் நீங்கள் ஏன் சென்ட்ரல் level இல் பாட நூல் குழுவில் தலைவராக இருக்க அணைத்து தகுதியும் உண்டு. உங்களை போன்றவர்களை அரசு சரியாக பயன் படுத்த வேண்டும்…கௌதம புத்தரின் பிறந்த நாள் அன்று, அதாவது மே 18, 1974 அன்று, இந்தச்சோதனை நிறைவேறியது…. எனவே தான் இந்தியா, சீனாவிற்கு laughing budha காண்பித்தது