ரஜினியின் அணுகுமுறை

பிள்ளைகளை கொன்று ஓடிய அந்த நாசக்காரி அபிராமியின் கணவன் விஜயினை ரஜினி சந்தித்திருக்கின்றார்

ரஜினியின் இந்த அணுகுமுறை பாராட்டதக்கது, மனிதருக்கு அந்த குழந்தைகளின் மரணம் அந்த அளவு உருக்கத்தை கொடுத்திருக்கின்றது

இம்மாதிரி விஷயங்களில் ரஜினியினை வாழ்த்தலாம்

ஆயினும் இந்த சந்திப்பில் ரஜினியின் “எங்கேயோ கேட்ட குரல்” படம் நினைவுக்கு வருகின்றது

இந்த அபிராமி அந்த படத்து அம்பிகா சாயலில் அப்படியே சிக்கி இருக்கின்றார்

இந்த அபிராமி கணவனை பார்க்கும்பொழுது ரஜினிக்கு அந்த படத்தில் தன் பாத்திரம் நினைவுக்கு வந்திருக்கலாம் அந்த கொடும் வலியினை ரஜினி உணர்ந்திருக்கலாம்

அந்த வலியில் உடனே அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கலாம், வாய்பிருக்கின்றது

ரஜினிக்குள்ளும் ஒரு நல்ல மனது இருக்கின்றது. அவர் அரசியலுக்கு வராமல் போனால் அது அப்படியே இருக்கும்