ரத்னவேல் பாண்டியனின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…
“சனி பிணம் தனி போகாது” என்பார்கள், மயிலு விஷயத்தில் சரியாக இருக்கின்றது
என்ன யழவோ தெரியவில்லை தொடர்ந்து மரண செய்திகளாக வருகின்றன , சாக வேண்டியவர் ஏராளமானோர் இருக்க, இருக்க வேண்டிய பலர் இருக்கின்றனர்
இப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியினை தொடர்ந்து, நீதிபதி ரத்னவேல் பாண்டியனும் இறந்துவிட்டாராம்
ஒரு பிற்படுத்தபட்ட வகுப்பில் பிறந்து கல்வி ஒன்றினால் மேல் வந்து வழக்கறிஞராகி பின் நீதிபதியாகி , உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை நீதிபதியாக உயர்ந்தவர் அவர்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த மிக சில தமிழர்களில் அவரும் ஒருவர்.
பிராமணர்களும் இன்னும் பல உயர் சாதியினரும் மட்டும் அமரும் பெரும் பதவியில் பிற்படுத்தபட்ட வம்சத்தில் இருந்து வந்து அவர் அமர்ந்தது அன்று பெரும் ஆச்சரியமாக பார்க்கபட்டது.
நெல்லை பகுதியில் என்றுமே அவருக்கு பெரும் மரியாதை உண்டு, அங்கு சட்டபடிப்பு படிப்பவர்கள் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல்
அவர் டிகிரி படித்த பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் அவர் மாணவர்களுக்கு மாபெரும் எடுத்துகாட்டு, அவரும் பேட்டிகளில் எல்லாம் அக்கல்லூரி பற்றி சொல்ல தவறியதில்லை.
இவரை ரோல்மாடலாக கருதி சட்டம் படித்தவர்தான் கோப்பால் சாமி. அதே போல் வழக்கறிஞருமானார் அதன் பின் அரசியல்வாதியாகி, போரளியாகி வைகோ என திசைமாறி சென்றுவிட்டார், இப்பொழுது எங்கிருக்கின்றார் என அவருக்கே தெரியாது.
ஆலடி அருணா போன்ற பலபேருக்கு வழிகாட்டியாக குருவாக இருந்தவர் ரத்னவேல் பாண்டியன்.
நெல்லை பகுதியின் மாபெரும் அடையாளமான ரத்னவேல் பாண்டியனின் மறைவு வேதனைக்குரியது
கல்வியால் உயர்ந்த அந்த மாமனிதருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்