வாஜ்பாய் இந்தியராக வாழ்ந்தார், உயர்ந்தார்

வாஜ்பாய் இந்தியராக வாழ்ந்தார், உயர்ந்தார்

மாநில எல்லைகளை தாண்டி இந்தியராய் வாழ்ந்த அவரை , இனம் மொழி என குறுகிய வட்டத்தில் சிக்கி கொண்ட சிலர் விமர்சிக்கின்றார்கள்

ஏதோ தமிழகத்தில் சாதி கலவரம் வந்ததே இல்லை என்பது போலவும் , சில மத கலவரங்கள் உருவாகவே இல்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடு

முதுகுளத்தூர் கலவரத்தை அடக்க பாடுபட்டவர் காமராஜர், முத்துராமலிங்கம் என்பவரை உள்ளே போடுங்கள் என சொன்னவர் பெரியார்

அப்பொழுதெல்லாம் வேறு திராவிட சிங்கங்கள் எதுவும் வாய்திறக்கவே இல்லை, அண்ணா கூட அமைதி

மண்டைக்காடு கலவரங்கள் போன்றவை இன்னும் பிரசித்தி

இப்பொழுதும் கூட எப்பொழுது இங்கு எரியுமோ தெரியாது, சாதி மத கலவரங்கள் இங்கு உறங்கும் எரிமலையே தவிர அணைந்துவிட்ட நெருப்பு அல்ல‌

அப்படிபட்ட தமிழகம் இது

இங்கு இருந்துகொண்டுதான் வாஜ்பாயினை குறை சொல்லிகொண்டிருக்கின்றார்கள் சிலர்

வாஜ்பாய் மதவாதி என பொங்கும் சிலர், தங்களின் தமிழக அபிமான சாதி கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை மட்டும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.

வாஜ்பாய் எந்த சர்ச்சையிலும் சிக்கியதுமில்லை , சிக்குவது போல் பேசவுமில்லை

நல்ல தலைவர்களுக்கு அழகு அடுத்தகட்ட தலைவர்களை வளர்த்துவிடுவது

வாஜ்பாய் அதனை செய்தார், அவ்விஷயத்தில் அத்வாணியினையும் குறை சொல்ல முடியாது

இதனால்தான் அக்கட்சி இன்று வலுவாக நிற்கின்றது, அடுத்தகட்ட தலைவர்கள் என்பது அவ்வளவு முக்கியம்

காங்கிரஸ் நாசமாய் போனது இந்த விஷயத்தில்தான், அதன் தடுமாற்றமும் அப்படி உருவானதே

தமிழகத்தில் அண்ணா அப்படி நல்ல தலைவராக இருந்தார், வாழும்பொழுதே மிகபெரும் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கி இருந்தார்

திமுக நிலைத்து நின்றது அதில்தான்

ஆனால் கலைஞர் அந்த தவறை செய்தார், அடுத்தகட்ட வலுவான தலைவர்கள் என யாரையும் உருவாக்கவில்லை.

(ஸ்டாலின் விஷயம் வேறு)

வாஜ்பாய் தன் காலத்திலே அடுத்த தலைமுறைக்கு காமராஜரை போல வழிவிட்டு ஒதுங்கிய தேசியவாதி

குறுகிய வட்டத்தில் சிக்காமலும், கட்சியில் கடைசிவரை தலைவர் பதவியில் இருப்பேன் என அடம்பிடிக்காமலும் , நல்ல‌ தேசியவாதியாகவும் இருந்த வாஜ்பாய் நிச்சயம் பெருந்தன்மையானவர்.