வாஜ்பாய் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்

Image may contain: 1 person, close-up

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாய் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்

அவருக்கும் கலைஞர் போலவே பெரும் சரித்திரம் உண்டு, காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டு தண்டனை பெற்றவர்

ஆனால் தேசபிரிவினை அவர் மனதை பெரிதும் பாதித்த நிகழ்வு, உன்மையான தேசாபிமானிகளுக்கு அது வலி அந்த வலி வாஜ்பாய்க்கும் இருந்தது

நேருவின் காலங்களில் வாஜ்பாய் தன் கடமையினை ஜனசங்கத்தில் இருந்து செய்துகொண்டே இருந்தார், நாட்டுக்கான குரல் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது

நேரு மதித்த ஜனசங்க தலைவர்களில் ஒருவராக இருந்தார் வாஜ்பாய், அவரின் இயல்பான அமைதி குணமும் நாட்டுபற்றும் அவருக்கு நற்பெயரை பெற்றுகொடுத்தன‌

மிசா காலத்தின் அடக்குமுறையில் வாஜ்பாயும் சிக்கினார், அப்பொழுதுதான் அதை தீவிரமாக எதிர்த்து போராடிய கலைஞர் மேல் அவருக்கு பெரும் மரியாதை பிறந்தது அந்த மரியாதை இறுதிவரை நீடித்தது

மிசா காலத்திற்கு பின் இந்திய அரசியலில் பல கட்சிகள் உருவாயின, ஜனதா ஆட்சிக்கும் வந்தது அந்த ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக அமர்ந்தார் வாஜ்பாய்

முதன் முதலில் நாட்டு பாதுகாப்பில் துணிச்சலான முடிவுகள் எடுத்தவர் அவரே, இஸ்ரேலுடன் உறவை தொடங்கிய முதல் இந்திய அரசியல்வாதி அவர்தான்

அவர்காலத்தில்தான் இஸ்ரேலின் சிங்கம் மோசே தயான் இந்தியா வந்ததும், பாகிஸ்தான் அணுவுலை மேல் இந்தியாவிலிருந்து தாக்குதல் நடத்த அனுமதி கோரிய விஷயங்களும் நடந்தன‌

வாஜ்பாய் அந்த சவாலை எடுத்தார், நிச்சயம் சிரிய , ஈராக்கிய அணுவுலை போல பாகிஸ்தானை முளையிலே கிள்ளி இருக்கலாம், ஆனால் மொரார்ஜி தேசாய் அனுமதிக்கவிலை

எனினும் வாஜ்பாயின் துணிச்சலான முயற்சி சிலாகிக்கபட்டது

1980களில் பாஜக மதவாத கட்சி என அறியபட்டாலும் வாஜ்பாயின் மென்மையான மேன்மையான குணமும், மதவெறிக்கு அப்பாற்பட்டு அவர் நின்றதும் எல்லோருக்கும் பிடித்திருந்தது

ஈழவிவகாரங்களில் கலைஞருடன் ஒற்றுமையாக நின்ற வாஜ்பாயினை மறக்க முடியாது, ராஜிவ் கொலைக்கு பின்பே வாஜ்பாய் ஒதுங்கினார்

பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய் ஒன்றும் செய்யமுடியா நிலைக்கு தள்ளபட்டிருந்தார்.

பின்னர் வந்த காலங்களில் பாஜகவிற்கு சிக்கலான காலங்களை வாஜ்பாய் எனும் பெரும் மனிதனின் முகமூடியுடன் கடந்து சென்றது

காங்கிரஸுக்கு சோனியா தலமை ஏற்கா காலங்களில் வலுவான அகில இந்திய கட்சி இல்லா சூழலில் பாஜக தனிபெரும் கட்சியானது, அப்பொழுது பிரதமரானார் வாஜ்பாய்

அவர்களுக்கு அதிமுக ஆதரவு கொடுத்தது, கலைஞர் இங்கு முதல்வராக இருந்தார்

ஜெயலலிதாவிற்கு தமிழக அரசியல் புரிந்த அளவு டெல்லி அரசியில் பிடிபடவில்லை, அங்கு அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை

1989ல் ராஜிவினை வற்புறுத்தி கலைஞர் அரசை அநியாயமாக கலைத்த ஜெயலலிதா, வாஜ்பாயிடமும் அதே கோரிக்கையினை வைத்தார்

வாஜ்பாய் மாமனிதனாக உயர்ந்து நின்றது அக்கணமே

ஆட்சியே இல்லை என்றாலும் கலைஞர் ஆட்சியினை கலைக்கமாட்டேன் என முடிவோடு நின்றார், ஜெயாவின் பிடிவாதத்தில் ஆட்சி கலைந்து தேர்தல் வந்தது

மிக மிக மோசமான காலகட்டங்கள் அவை

பின்னர் வந்த தேர்தலில் பாஜகவினை கலைஞர் அரசியல் தர்மபடி ஆதரித்தார், வாஜ்பாய் பிரதமரும் ஆனார், திமுக மத்திய அமைச்சரவையில் இடமும் பெற்றது

வாஜ்பாயின் காலங்களில் சவாலும் இருந்தன, அணுகுண்டு சோதனையினை நடத்தினார், அது கொஞ்சம் தவறான விளைவாக பாகிஸ்தானும் அணுகுண்டு வெடிக்க தயாராயிற்று

எனினும் 1974க்கு பின் மிக சக்திவாய்ந்த அணுஆயுதம் இந்தியாவிடமும் உண்டு என காட்டிய நிகழ்வு அது

பாகிஸ்தானுடன் அவர் உறவு பாராட்டினார், லாகூர் பஸ் திட்டமும், இன்னும் சில ஒப்பந்தங்களும் அவரை இன்னொரு நேருவாக காட்டின‌

ஆனால் பாகிஸ்தான் தன் கோரமுகத்தை கார்கில்லில் காட்ட அதையும் துணிச்சலாக சந்தித்து வெற்றிபெற்றார் வாஜ்பாய்

அவர்காலங்கள் அல்கய்தா எனும் பெரும் பலம்வாய்ந்த இயக்கம் உலகை ஆட்டுவித்த காலம், அமெரிக்காவே அலறிய காலம்

இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தது, பார்லிமென்ட் வரை தாக்கினார்கள், இத்தேசம் பெரும் சிக்கலான அந்த காலங்களிலும் வாஜ்பாயின் தலமையில் அமைதி காத்தது அசம்பாவிதங்களை தவிர்த்தது

அந்த காந்தகார் விமான கடத்தல் சம்பவங்கள் எல்லாம் வாஜ்பாய் காலத்தில் தேசத்திற்கு வந்த சோதனைகள், அதனையும் அமைதியாக சந்தித்தார் வாஜ்பாய்

வாஜ்பாயின் காலங்களில் 1998ல் உலக பொருளாதார பாதிப்பு வந்தது, ஆனால் இந்தியா அசையா வண்ணம் வாஜ்பாயின் நடவடிக்கை இருந்தது

குஜராத் கலவரங்கள் அவரின் ஆட்சியில் கரும்புள்ளி சந்தேகமில்லை, ஆனால் கலவரத்தை அடக்க நிகழ்ந்த நிகழ்வுகள் இங்கு தீரா கரையானது

வாஜ்பாய் ஆட்சியில் தீவிரவாதம், மதவாதம், அன்னிய சக்திகளின் அட்டகாசம் என ஏகபட்ட சவால்கள் இருந்தன எல்லாவற்றிலும் வென்ற வாஜ்பாய்க்கு இந்த குஜராத் சர்ச்சைகள் சறுக்கலை கொடுத்தன‌

நிச்சயம் இந்திராவிற்கு அடுத்து பல சவால்களை எதிர்கொண்ட பிரதமர் யாரென பார்த்தால் வாஜ்பாயினை சொல்லலாம்

கார்கில் முதல் பார்லிமென்ட் தாக்குதல், திட்டமிட்ட குஜராத் கலவர தொடக்கமான அந்த ரயில் எரிப்பு, பீகாரில் அந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் எரிப்பு எல்லாம் அவருக்கு எதிரான அஸ்திரங்கள்

அதாவது பாஜக ஆட்சியில் இந்தியா எரிகின்றது என்பது போன்ற நிலையினை கொண்டுவர செய்யபட்ட சதிகள், மத கலவரங்களை ஏற்படுத்த செய்யபட்ட திட்டங்கள்

ஆனாலும் சமாளித்து இத்தேசத்தில் பெரும் கொந்தளிப்பு வராவண்ணம் நடத்தி சென்றார் வாஜ்பாய், மறுக்க முடியாது

பல கருப்பு சக்திகளின் சவாலை, இந்த தேசம் எரியவேண்டும் என்ற அவர்களின் கொடூர ஆசையினை மிக இயல்பாக அதே நேரம் பொறுப்பாக கடந்து தேசத்தை நடத்திய அந்த வாஜ்பாய் இந்திய வரலாற்றின் சிறப்பான பிரதமர்களில் ஒருவர்

நேரு, இந்திரா, ராஜிவிற்கு பின் வாஜ்பாயினை அந்த வரிசையில் தாராளமாக சேர்க்கலாம்

நாட்டுபாதுகாப்பிற்காக இலங்கையில் ஆனையிறவில் புலிகள் பெற்ற பெரும் வெற்றியினை கூட செல்லாகாசு ஆக்கியவர் வாஜ்பாய், பிரபாகரனின் திட்டத்தினை உரிய நேரத்தில் முறியடித்து இந்தியா என்பது ராஜிவோடு முடியாது என பட்டவர்த்தனமாக புலிகள் முகத்தில் அறைந்து சொன்னவர்

ஒரு விஷயத்தில் எல்லா இந்தியரும் அவரை வணங்கியே தீரவேண்டும் அது இந்த தங்க நாற்கர சாலை திட்டம்

இந்தியாவின் நரம்புகளான அந்த சாலைகளை பிரமாண்ட சாலையாக மாற்றும் திட்டத்தை அவர்தான் கொடுத்தார்

இன்று இந்தியாவினை மாற்றிபோட்டிருக்கும் அந்த வசதியான சாலைகள் அவர் கொடுத்தது

தன்னைபோலவே திருமணம் செய்யாமல் நாட்டுக்காக உழைத்த உத்தமரான கலாமினை ஜனாதிபதியாக்கி கவுரவபடுத்தியதில் வாஜ்பாயின் பங்கு இருந்தது

கலாம் சீரியல் ஏவுகனைகள் என இந்திய ஏவுகனை திட்டத்திற்கு பெயர் சூட்டியதும் வாஜ்பாயே

மிக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் காங்கிரசுக்கு காமராஜர் எப்படியோ அப்படி பாஜகவிற்கு வாஜ்பாய்

பணக்கார காங்கிரஸ் காமராஜர் எனும் எளியமனிதனால் பெயர்பெற்றது போல மதவெறி கட்சி என அறிபட்ட பாஜகவில் வாஜ்பாய் மிதமானவராக அறியபட்டார்

காமராஜருக்கும், வாஜ்பாய்க்கும் வித்தியாசம் ஏதும் நீங்கள் காட்டிவிட முடியாது

இருவரும் கட்சிகள் கொள்கைகள் வேராயினும் இந்நாட்டிற்காக வாந்தவர்கள்

அவ்வகையில் பாஜகவின் பீஷ்மர் வாஜ்பாய்

என்ன சர்ச்சை இருந்தாலும் பாஜக தேசிய கட்சி, இத்தேசத்தின் பெரும்பான்மை மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்ட கட்சி

அக்கட்சிக்கு எப்படிபட்ட மனிதர் தலைவராக வரவேண்டும் என கேட்டால் எல்லா மக்களும் ஏன் எதிர்கட்சிகள் கூட வாஜ்பாய் போல் மிக பொறுப்பான மனிதரே வரவேண்டும் என ஒருசேர சொல்வார்கள்

அதுதான் வாஜ்பாயின் வெற்றி

அவ்வகையில் அக்கட்சியில் அவரின் இடம் வெற்றிடம் ஆகாது, அவரை கட்சியும் இத்தேசமும் நினைவு கூர்ந்துகொண்டே இருக்கும்

நீண்ட ஓட்டத்தை இத்தேசத்திற்காக ஓடி விடைபெற்ற அந்த பீஷ்மருக்கு அஞ்சலிகள்

அவர் வழியில் நல்ல தலைவர்கள் பாஜகவிற்கு வரட்டும், இத்தேசத்தை அவர் வழியில் ஆளட்டும்

தங்க நாற்கர திட்டம் முதல் பல வழிகளில் நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்ட அந்த பெருமகனை இத்தேசம் நன்றி கண்ணீரோடு வழி அனுப்புகின்றது