வாமணன் : நெப்போலியன் வரலாறு : 14
பிரான்ஸ் நாட்டின் மன்னனான நெப்போலியனை கிட்டதட்ட 12 நாடுகள் இணைந்துதான் வீழ்த்தின, அதுவும் அவன் படைபலம் குறைந்த நேரத்தில், அந்த அளவு பலமிக்கவனாக இருந்தான் நெப்போலியன், தோற்றானே தவிர திருப்பி அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது
லீப்ஸிக்கில் தோற்றபின் அல்லது விரட்டபட்ட பின் ஏப்ரல் 6, 1814ல் நெப்போலியன் பதவியிறக்கம் செய்யபட்டார். லூயி எனும் பழைய வாரிசை மன்னர் ஆக்கியது கூட்டுபடையும் பிரான்ஸும்
நெப்போலியனை எல்பா எனும் தீவிற்கு கடத்தும்படி ஒப்பந்தமும் எழுதபட்டது. எல்பா என்பது பிரான்ஸுக்கும் இத்தாலிக்கும் நடுவே இருந்த தீவு, பல இடங்கள் பரிசீலிக்கபட்டாலும் நெப்போலியனின் பாதுகாப்பு முக்கியம் என்பதும் முக்கியமானதாக இருந்தது
நாட்டுக்குள் வைக்க முடியாது மக்கள் தூக்கி வந்துவிடுவார்கள், அடுத்த நாட்டில் வைத்தாலும் ஆபத்து ஒரே வழி தீவுதான், அவனின் சொந்த தீவுமுதல் பல தீவுகள் இருந்தாலும் எல்பா சரியென அவர்களுக்கு பட்டது
தப்பினாலும் அவன் இத்தாலி அருகில் இருப்பதால் அங்குதான் செல்லமுடியும், ஏற்கனவே போப்பாண்டவரை அவன் படுத்தியபாட்டில் அங்கு அவனே செல்லமாட்டான் என்ற கோணமும் இருந்தது.
அதனால் அந்த தீவே பாதுகாப்பனது என அறிவிக்கபட்டது. காரணம் எளிதில் யாரும் செல்லமுடியாது, போதாகுறைக்க்கு பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி கப்பல்கள் என ரவுண்ட் வரும் ஏரியா
நெப்போலியனுக்கு மாதம் பெரும் தொகை, குடும்பத்தாரை அழைத்து செல்லும் சலுகை எல்லாம் கொடுத்து எல்பாவிற்கு அனுப்பினார்கள், ஆஸ்திரிய அரசி மூலம் அவனுக்கொரு மகனும் பிறந்திருந்தான், அவனையும் அழைத்து செல்ல சலுகை கிடைத்தது
அமைதியாய் அதனை ஏற்றுகொண்ட நெப்போலியன் தன் நம்பிக்கைகுரிய தளபதியாகிய மார்ஷல் நோய் என்பவன் மூலம் இன்னொரு கோரிக்கையும் வைத்தான்
அதாவது தன் மெய்க்காப்பாளர்கள் கொஞ்சம் பேர் தன்னுடன் இருக்கவேண்டும், அது பாதுகாப்பிற்காக என சொல்லி அவர்களுக்கு ஆயுதமும் பெற்றுகொண்டான்
எல்லாம் முடிந்து தன் பிரியத்திற்குரிய பிரான்ஸை விட்டு கப்பலேறினான் நெப்போலியன், அவன் மனம் கனத்திருந்தது. எவ்வளவு பெரும் ஆற்றல்வாய்ந்தவனாயினும் ஒருவன் பெற்றிபெற ஒரு காலமுண்டு என்றால் தோற்கவும், அமைதியாகவும் ஒரு காலம் கட்டாயம் உண்டு
இது அமைதியாகவேண்டிய காலம் என அறிந்த நெப்போலியன் அமைதியாகவே சென்றான்
எல்பா தீவு 200 கிமி நீளமும் 90 கிமீ அகலமும் கொண்டது, அங்கும் மக்கள் வசித்தார்கள், அங்கு போய் இறங்கினான் நெப்போலியன்
என்ன இருந்தாலும் ஆண்டவன், அதுவும் மிக சிறப்பாக ஆண்ட நெப்போலியனுக்கு எல்பாவில் சும்மா இருக்க முடியுமா? களத்தில் இறங்கிவிட்டான்
இது என்ன சாலை? இது என்ன கழிவு நீர் வழி? இது என்ன குப்பை , மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம் என பெரும் வசதிகளை செய்தான்
மக்கள் உழைப்பு, வருமானம் , வரி என பல விஷயங்களை செய்து அசத்தினான் நெப்போலியன்
அந்த தீவு மாறியது, மக்கள் அவனை கொண்டாடினர். தனக்கு பிரான்ஸ் அரசு மாதமாதம் கொடுத்த பணத்தை எல்லாம் அவன் அந்த தீவிற்கே செலவழித்தான். அது பெரும் வசதிபெற்ற தீவாயிற்று
நெப்போலியன் மிக எளிமையானவன் உணவு, கொஞ்சம் உடை, படிக்க புத்தகம், படுக்க கட்டில் இவைதான் அவனின் தேவைகள், அதனால் அள்ளி கொடுத்தான்
பிரிட்டனும் தன் உளவாளிகளை சில நேரம் பெரும் அதிகாரிகளையே அனுப்பி அவனை நோட்டமிட்டது. ஆம் தீவில் இருந்தாலும் சிங்கம் சிங்கமே எனும் அச்சம் இருந்துகொண்டே இருந்தது
இந்நிலையில்தான் திடீரென ஜோசப்பின் இறந்த செய்தி அவனை எட்டிற்று, அறையில் கதவினை பூட்டிகொண்டு அழுதான், “அரச உரிமைக்காக நான் உனக்கு துரோகம் செய்துவிட்டேன் ஜோசப்பின்..” என அவன் அழுத அழுகை அந்த தீவில் எதிரொலித்தது
அவள் மீது அவனுக்கு எவ்வளவு காதல் இருந்தது என அந்த தீவுமக்கள்தான் கண்டுகொண்டிருந்தார்கள், அந்த அளவு பாதிக்கபட்டிருந்தான்
அவன் தேறிவர சிலமாதங்கள் ஆனது, அப்பொழுது பிரான்ஸில் இருந்து செய்திவந்தது. இந்த லூயி சரியில்லை நாடு நாசமாகின்றது, காப்பாற்ற யாருமில்லை
அதுவரை தப்பும் திட்டமில்லாமல் சாதுவாக இருந்த நெப்போலியனுக்கு அதுமுதல் இருக்க பிடிக்கவில்லை. தனது பெரும் கனவும், கடமையுமான பிரான்ஸின் நலன் அவனுக்கு அவ்வளவு முக்கியம்
அவன் சாவின் விளிம்புவரை சென்று போர் நடத்தியதும், எத்தனையோ முறை சாக வேண்டிய அவன் தப்பியதும் பிரான்ஸின் நல்வாழ்வுக்கு என உறுதியாக நம்பியவன் அவன்
தன் உயிர் பிரான்சிற்காக போகவேண்டும் என்ற உறுதி அவனிடம் இருந்தது, தப்ப திட்டமிட்டான்
தன் ஆட்களை கொண்டு பெரும் கப்பல் போன்ற படகினை செய்ய சொன்னான், அது ஒரு பிரிட்டன் தளபதி குறிப்பிட நாட்களுக்கு ஒருமுறை வந்து சோதனையிடும் பகுதி, அங்குதான் கட்டினான் நெப்போலியன்
அவனுக்கு எல்லா கலையும் அத்துபடி என்பதால் கப்பல் கட்டபட்டது , உடனே அதனை பிரிட்டன் கப்பல் போல மாற்றி பிரிட்டன் கொடியினையும் பறக்கவிட்டான்
அதுமட்டுமன்றி உணவு ஆயுதம் எல்லாம் கப்பலில் பதுக்கிவிட்டு, எல்லோரையும் வெளியேற்றி வழக்கமான பணியில் இருக்க சொன்னான்
காரணம் இருந்தது, வழக்கமான சோதனை செய்யும் பிரிட்டன் கவர்ணர் வந்தார், இது பிரிட்டன் கப்பலா? ஒகே என நகர்ந்தார், கொஞ்சம் தள்ளி 50 பேர் புல் புடுங்குதல் மரம் வெட்டுதல் என செய்துகொண்டிருந்தனர், தோட்ட தொழிலாளிகள் என நினைத்து சென்றுவிட்டார்
அவர்கள்தான் கப்பலை கட்டி முடித்து, தப்பியோட இருப்பவர்கள் என அவருக்கு தெரியாது
அந்த தீவில் பிரான்ஸ் அதிகாரி இருந்தார், அவரிடம் தான் தினமும் நெப்போலியன் ஆஜராகிகொண்டிருந்தான், அன்றும் ஆஜராகிவிட்டு தூங்கபோவதாக சொல்லி வந்தவன் நைசாக கப்பல் ஏறினான்
அது பிப்ரவரி 26, 1815 நள்ளிரவு நைசாக ஓடம் கிளம்பியது, காற்று சரியில்லை என்றாலும் எப்படியோ நகர்த்தி வந்தான் நெப்போலியன்
அடிக்கடி சுற்றும் பிரிட்டன் காவல் படகுகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு பயணமானான், நடுகடலில் சுற்றி வளைத்திருந்தால் , அது பிரான்ஸ் படைகளோ இல்லை பிரிட்டன் படைகளோ அவனை விட்டுவைத்திருக்காது, ஆனால் சிக்கவில்லை, அவன் கப்பலை பிரிட்டன் பாணியில் பெயின்ட் அடித்து அந்த கொடியினை பறக்கவிட்டிருந்ததும் ஒரு காரணம்
4 நாட்களில் பிரான்சின் தெற்கு பகுதியினை அடைந்தான்
பிரான்ஸ் மக்கள் அவனை கண்டவுடன் மகா உற்சாகம் அடைந்தனர், நெப்போலியன் அவர்களுக்கு மிக பெரும் கனவு, மிக பெரும் கவுரவம்
ஐரோப்பாவில் பிரான்ஸ் வெற்றிமேல் வெற்றி குவிக்க அவனால் மட்டுமே முடியும் என நம்பினார்கள், பாஷா ரஜினியின் கையினை பிடித்து எல்லோரும் முத்தம் செய்வார்கள் அல்லவா? அப்படி கூடி வரவேற்றனர்
நெப்போலியன் தந்திரம் அதுதான், தனியாக பாரீசுக்கு சென்றால் சிக்கல், மக்களோடு மக்களாக சென்றால் அது புரட்சி
நெப்போலியன் வருகின்றான் என்ற தகவல் தெரிந்ததுமே ஆடிபோனான் லூயி, தளபதி மார்ஷல் லூயி என்பவனை அழைத்து நெப்போலியனை தடுக்க உத்தரவிட்டான்
மார்ஷல் லூயி கட்டப்பா போன்றவனா? துரோகியா, சந்தர்ப்பவாதியா என இன்றுவரை பதில் இல்லை, ஆனால் நெப்போலியன் வரவும் எதிர்கொண்டு சென்று அவனோடு சேர்ந்துவிட்டான்
படைகள் வந்ததும் நெப்போலியன் பழைய நெப்போலியனாக சென்று லூயி மன்னனை பார்த்த பார்வையில் அவன் சிம்மாசனத்தை துடைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டான்
மறுபடி மன்னராக அமர்ந்தான் நெப்போலியன்
அய்யகோ சிங்கம் தப்பிவிட்டதா? என மறுபடி 12 நாடுகளும் அலறின, போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுதார்
அவனுக்கு அவகாசம் கொடுத்தால் வென்றுவிடுவான், லீஸ்மெக்கில் ரஷ்ய தோல்வி, நாம் செய்த வஞ்சகம் எல்லாம் வென்றது, இம்முறை அவன் சுதாரிப்பதற்குள் அடிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள்
அவர்கள் முடிவெடுப்பதற்குள் அவர்கள் அப்படித்தான் வருவார்கள் என முடிவெடுத்து படை திரட்டினான் நெப்போலியன்
பெரும் போருக்கு தயாரானது கூட்டுபடை, நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி வெறியோடு நின்றான்
இம்முறை நெப்போலியனுக்கு எதிரான படைக்கு தலமை தாங்க யாரும் முன்வரவில்லை. பிரிட்டன் கட்ற்படையில் கில்லி என்றாலும் தரை யுத்தத்தில் பல்லி என்ற நிலை இருந்தது, யாரையாவது தூண்டிவிட்டு காரியம் சாதித்துகொண்டிருந்தது அது
அப்படியாரும் வராத நிலையில் பிரிட்டன் வேல்ஸ் இளவரசன் வெலிங்டன் முன்வந்தார்
நெப்போலியனை இவரா எதிர்க்க போகின்றான் என எல்லோரும் முகத்தை தொங்கவிட்டு முணங்கிகொண்டிருந்தார்கள்
கிட்டதட்ட 12 நாடுகளின் பெரும்படை தயாரானது, அப்பக்கம் நெப்போலியன் கொஞ்சம் அச்சமின்றி தயாராக இருந்தான்
எத்தனை யுத்தங்களை நடத்தியவன் அவன்?, அதுவும் இதே கூட்டணிபடைகளை எத்தனை முறை ஓட விரட்டியவன் அவன், கொஞ்சமும் அச்சமின்றி வெற்றி ஒன்றே குறியாக இருந்தான்
எங்கே மோதலாம் என கேட்டார்கள், பின் இன்றைய பெல்ஜியம் நாட்டின் வாட்டர்லூ என முடிவாயிற்று
நெப்போலியன் மிக தயாராக இருந்தான், வெற்றி அவனுக்குத்தான் என நம்பினான், அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது
அதாவது அவன் தன் படைகளை முழுக்க நம்பியது போல அவன் படைகளும் அவனை நம்பியிருந்தால் அது நடந்திருக்கும்
ஆனால் படைகளுக்குள் பல களைகள் பலரால் அனுப்பபட்டிருக்கின்றது என அவனுக்கு அப்பொழுது தெரியாது
போரில் முதுகில் குத்துவது வேறு, முதுகில் ரகசியமாக குத்திவிட்டு போருக்கு போ என சொல்வது வேறு
நெப்போலியனுக்கு நடந்தது இரண்டாம் வகை
வாமணன் வருவான்..