வாமணன் : நெப்போலியன் வரலாறு : 15
வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி.
தமிழக பாஜக போல தலைவர் ஆக எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது
நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை என்பதால் நம்பிக்கையோடு நின்றான்
கொடும் யுத்தம் தொடங்கியது, இருபக்கமும் அணல் பறந்தது, திடீரென யுத்த வியூகத்தை மாற்றினான் வெலிங்டன்
நெப்போலியனின் தளபதிகள் முடக்கபட்டனர், முன்னேறிகொண்டிருந்த நெப்போலியனின் தளபதி மைக்கேல் நொய் என்பவனும் முடக்கபட்டான்
எல்லா படைக்கும் பலவீனமான பக்கம் இருக்கும், அதை வெளிதெரியாமல் காத்துகொள்வது யுத்த தந்திரம், ஆனால் நெப்போலியன் படை பலவீனம் அவன் மனைவி வழியாக எதிரி கைகளுக்கு போயிருந்தது
அவசரத்தில் திரட்டிய படை என்பதால் அவனின் வீரர்களும் அவ்வளவு திறமையாக இல்லை
அதனால் அந்த பலவீனமான இடத்தில் குறிபார்த்து வெலிங்டன் அடிக்க , நெப்போலியன் பின்னடைந்தான். ஏற்கனவே லிஸ்பெக்கில் தோற்றிருந்தான் அல்லவா? இம்மாதிரி சூழலில் என்ன செய்யவேண்டுமென்று திட்டமிட்டிருந்தான்
தான் பின்னடையும் நேரத்தில் பெரும் படை வரவேண்டும் என ஒரு பிரிவினை ரிசர்வாக வைத்திருந்தான், அது வர உத்தரவும் கொடுத்தான்
ஆனால் படை வரவில்லை, ஏதோ உள்சதியால் அப்படைபிரிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை
படை வராமல் போனது, சில தளபதிகள் நடிப்பு, தன் பலவீனத்திலே அடிப்பது, அவனுக்கு அப்பொழுது தொடங்கியிருந்த வயிற்று வலி எல்லாம் சேர்ந்து அவனை தோற்கடித்தது
பல சக்திகள் தனக்கு எதிராய் இருப்பதை கண்டுகொண்ட நெப்போலியன் “எல்லாம் முயற்சித்துவிட்டேன் இனி செய்ய ஒன்றுமில்லை” என குதிரையினை விட்டு இறங்கினான்
கிட்டதட்ட பெண் மோகத்தில் தன் ரகசியத்தை சொல்லி மாட்டிகொண்ட பெரும் வீரன் சாம்சன் எனும் பைபிள் பாத்திரத்தில் நின்றான் நெப்போலியன்
பிரிட்டானியர் அவனை இங்கிலாந்து அருகில் இருந்த ஹெலனா தீவில் சிறை வைத்தார்கள். தனக்கு நிகழ்ந்த துரோகங்களை நினைத்தபடியே அங்கு சுற்றினான் அந்த சிங்கம்
பிரான்சில் நிலமை மாறியது, நெப்போலியனின் தளபதிகள் மைக்கேல் நொய் உட்பட எல்லோரும் கொல்லபட்டார்கள், ஆஸ்திரிய மனைவியும் அங்கு சென்றுவிட்டாள்
நெப்போலியன் வழக்கம் போல படிப்பதில் மனதை செலுத்தினான், ஜூலியஸ் சீசர் என்ற புத்தகத்தையும் எழுதினான்
அவன் அங்கிருந்து அமெரிக்கா தப்பியதாகவும், படை திரட்டியதாகவும் வதந்தி உண்டு ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை
வயிற்றுவலி அதிகரித்தது, உடல் வலுவிழந்தது, கிட்டதட்ட 25 வருடம் இடைவிடாத யுத்தம் நடத்தியவன் அவன், அந்த இளம் வயதில் அவன் சரியாக உண்ணவில்லை, உறங்கவில்லை அது 40 வயதிற்கு மேல் வயிற்று கோளாறு எனும் எமனாய் வந்ந்தது, மிக மோசமானது உடல்நிலை
ஜோசப்பின் பிரான்ஸ் ராணுவம் என அதனையே நேசித்த நெப்போலியன் அந்த மூன்று வார்த்தைகளையும் உச்சரித்துகொண்டே தன் 51ம் வயதில் இறந்தான்
அவன் அங்கு அடக்கம் செய்யபட்டாலும் 1840ல் அவன் எலும்புகள் பிரான்ஸ் கொண்டுவரபட்டு அவனுக்கு அங்கு நினைவாலயம் எழுப்பபட்டது
பெரும் படை நடத்தும் ராணுவ ஜெனரல் தனி தீவில் சாவார் என நாஸ்ட்ரோடாமஸ் எழுதியது அப்படி நிறைவேறிற்று
எல்பா தீவிலிருந்து தப்பி தான் நாஸ்டர்டோமஸை வென்றதாக சொன்னான் நெப்போலியன், ஆனால் நாஸ்டர்டோமஸ்தான் வென்றார்
நெப்போலியனின் வாழ்வும், போரும், வீரமும், ஆட்சியும் பெரும் ஆச்சரியங்கள்
டிவோலன், ஜிகா,டிவோலி, ஆட்ல்ட்ராலிஸ் என அவன் நடத்திய போர்கள் பெரும் நுட்பமானவை, இன்றும் ராணுவ பாடமாக வைக்கபடுபவை
அவன் முதலில் கடலில் தோற்றான், பின் ரஷ்யாவில் குளிரில் தோற்றான் அந்த குளிரினால் ஏற்பட்ட சேதத்தில் லீஸ்மெக்கில் தோற்றான்
கடைசியாக வஞ்சகமாக தோற்கடிக்கபட்டான்
தகுந்த ஒத்துழைப்பும், முறையான போரும் கிடைத்தபட்சத்தில் எல்லாம் அவனை வெல்ல யாருமே இல்லை. எத்தனையோ களங்களில் சாவின் விளிம்புவரை சென்று திரும்பியவன் அவன்
எதிரிகள் சுற்றி நின்று சுட்டபொழுது அருகிலிருந்த பிணக்களை கவசமாக கொண்டு தப்பி வந்த சாகசககரன்
திறமையான ராணுவ கமாண்டருக்கு அவனே பெரும் எடுத்துகாட்டு
நல்ல நிர்வாகிக்கும் அவனே உதாரணம், இன்றும் பிரான்ஸ் அவன் உருவாக்கிய சட்டதிட்டங்களிலே பயணிக்கின்றது, நெப்போலியன் கோட் என்பது இன்றும் உண்டு. அவன் ஏற்படுத்திய வரிவசூல் முறை இன்றும் பின்பற்றபடுகின்றது
ஷேக்ஸ்பியர் மட்டும் நெப்போலியன் காலத்திற்கு பின் பிறந்திருந்தால் ஆண்டனி கிளியோபாட்ரா, ரோமியோ ஜூலியட் வரிசையில் நெப்போலியன் ஜோசப்பின் காதலும் காவியமாகி இருக்கும், அப்படி காதல் ரசம் சொட்டும் வாழ்வு அவனது
அவனின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை சொல்வார்கள், ஜோசப்பின் ஜாதகம் ராஜயோகம் கொண்டவது, அவளை கொள்பவர்கள் பெரும் உச்சம் அடைவார்கள் என்பது அவளின் ஜாதக பலன், அதுதான் நெப்போலியனை வழிநடத்திற்று, அவளை பிரிந்தபின் அவன் வீழ்ந்தான் என்பார்கள் சிலர்
நெப்போலியனை பிரிந்தபின்பும் ஜோசப்பின் வாழ்ந்தாள், அவளின் வம்சமே இன்றிருக்கும் பல ஐரோப்பிய அரசகுடும்ப ராணிகள் (பிரிட்டன் தவிர), ஐரோப்பாவை அவர்கள் ஆள்கின்றார்கள்
ஆனால் நெப்போலியன் அவளை பிரிந்தபின் வீழ்ந்தான்
போப்பாண்டவரை பாடாய் படுத்திய சாபம் என்றோரு பக்கம் சொல்வார்கள். நெப்போலியனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தது, தன் ஜோசியன் கணிப்பை மீறி ரஷ்யா மீது படை எடுத்ததே காரணம் என்பார்கள்
ஆனால் உண்மை காரணம் மிக எளிதானது
நெப்போலியன் பிரான்சின் மன்னனாக இருந்து அதை காத்த்திருந்தால் ஒரு சிக்கலும் வந்திருக்காது, அவன் மக்களாட்சியின் தலைவனாக இருந்தால் கூட சிக்கல் இல்லை
ஆனால் ஐரோபாவில் பிரான்ஸ் தலமையில் வல்லரசு, ஒரே அரசு என்ற குறிக்கோளில் இறங்கினான், அதுதான் தவறு
பிரான்சில் மதவாதிகளையும், பணக்காரர்களையும் பகைத்து அவன் அரசியல் செய்தது இன்னொரு தவறு
பல தேசிய இனமக்களை தன் ராணுவ பலத்தால் ஒரே குடையில் கொண்டுவர விரும்பினான், அது ஒருகாலமும் நடக்காது என காலம் காட்டிற்று
நெப்போலியன் வாழ்வு சொல்வது அதுதான்
தேசிய இனங்களை ஒரே நாடாக இணைத்து செல்ல பெரும் நுட்பம் வேண்டும். பல இனம் ஒரே நாடு என்பது எளிதில் சாத்தியமில்லை, மதவாதிகளையும் பணக்காரர்களையும் எதிர்த்து நிலைப்பதும் சாத்தியமில்லை
ஐரோப்பாவில் நெப்போலியனுக்கு அதுதான் நடந்தது
பின் ஹிட்லர் காலமும் அப்படியே நடந்தது, உலகெல்லாம் மிரட்டி பெரும் சாம்ராஜ்யம் அமைத்த பிரிட்டனின் சாம்ராஜ்யமும் அப்படியே உடைந்தது
இன்று பல நாடுகளில் இந்த சிக்கலை நீங்கள் காணலாம், இந்தியினை டெல்லி திணித்தபொழுது தமிழகம் வெகுண்டு எழுந்த காலமும் அப்படித்தான். பெரியார் போன்றவர்கள் திராவிட நாடு கேட்டதும் இப்படித்தான்
பல தேசிய இனங்களை அடக்கி ஆள்வது என்பது முடியவே முடியா காரியம், உரிமைகள் கொடுக்காமல் ஒருமித்து வாழவே முடியாது
அதுவும் மதவாதிகளை எதிர்த்தால் எப்படி எல்லாமோ அடிப்பார்கள், மதம் இருக்கும் வரை மன்னன் தனி ஒருவனாக வரமுடியாது
இந்த விஷ பரிட்சையினை அன்றே பரிசீலித்து , முயற்சித்து பார்த்து பின் உண்மையினை ஒப்புகொண்டு தனி தீவில் இறந்தவன் நெப்போலியன்
அவன் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது
சாதாரண சிப்பாயாக இருந்து படிபடியாக முன்னேறி பெரும் வியத்தகு யுத்தங்களை புரிந்து, மன்னனாகி ஐரோப்பா மொத்தமும் அலற வைத்து, சர்வ சக்தி மிக போப்பாண்டவரையே நிற்க வைத்து கேள்வி கேட்டு , மிக எளிய மன்னனாய் வாழ்ந்து, வரலாற்றில் மிகபெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு சென்ற நெப்போலியனின் பாதிப்பு கொஞ்சம் அல்ல
இவ்வுலகில் ராணுவம் , அரச நிர்வாகம் , காதல் , நாட்டுபற்று, வீரம் என்ற விஷயங்கள் பேசபடும்பொழுதெல்லாம் நிச்சயம் நெப்போலியனும் பேசபடுவான், அதனால் கால காலத்திற்கும் நிலைத்திருப்பான்
எனினும் பல தேசிய இனங்களை அடக்கி பெரும் வல்லரசு, ஓரரசு என முயற்சித்தால் என்னாகும் என்பதற்கும், மதவாதிகளும் பணக்காரர்களும் சொந்த நாட்டு வீரனையே எப்படி கொல்வார்கள் என்பதற்கும் கல்லறையே சாட்சி,
அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்து பல தடங்களை பதித்துவிட்டு இன்று அதில்தான் அடங்கி கிடக்கின்றான்