வாமணன் : நெப்போலியன் வரலாறு : 6

Image may contain: one or more people and people standingஎதாவது வரி விதிப்பது, அந்நிய நாட்டில் படையெடுப்பது அல்லது விவசாயமோ ஆடுமாடோ வளர்த்து உற்பத்தியினை பெருக்குவது உலகில் ஆங்காங்கே கால்பதித்திருக்கும் காலணி நாடுகளிலிருந்து ஏதாவது தேற்றி வருவது என்ற ரீதியில் பிரென்ஞ் டைரக்கர்கள் கூட்டம் நடைபெற்றது

நெப்போலியன் தன் திட்டத்தை சொன்னான், திகைத்து நின்றார்கள், காரணம் அவன் சொன்னது அப்படி

பிரிட்டனின் பெரும் பலம் அதன் கடற்படை, அதனை தகர்க்கும் படை பிரான்ஸ் கப்பற்படையினை தயார் செய்வேன்.

முதலில் பிரிட்டன் கடற்படையினை தாக்குவேன், இங்கெல்லாம் பிரிட்டனின் ஆதிக்கம் இருக்கின்றது, அங்கெல்லாம் நமது கடற்படையினை நிறுவுவேன்

அதோடு பிரிட்டனின் பலம் ஒழிக்கபடும், உலகெல்லாம் நாம் வியாபாரம் செய்ய எளிதாகும். எங்கெல்லாம் பிரிட்டன் படைகளுக்கு எதிராக நாம் உதவுவோம், பிரிட்டனின் ஆட்சியினை முறித்துபோட்டுவிட்டு நம் வியாபாரத்தை செய்யலாம், நாம் மட்டுமே வியாபாரி எதிரிகளே இல்லாத வியாபாரி.

செல்வம் குவியும், கோடான கோடி குவியும்

டைரக்டர்கள் வியப்பாக கேட்டார்கள், இதன் செயல்திட்டம் என்ன?

“பெரும் படையினை திரட்ட வேண்டும் முதலில் எகிப்தை பிடிக்க வேண்டும்?

ஏன் எகிப்தை பிடிக்க வேண்டும்?

அதிலிருந்து ஆசியா நோக்கி முன்னேற வேண்டும், ஆசியாவில் நம் பலத்தை வலுவாக்க வேண்டும்

வலுவாக்கிவிட்டு?

அங்கிருந்து இந்தியாவினை வளைக்க வேண்டும்?

இந்தியாவினையா?

ஆம், அந்த வளமான இந்தியாவினை

அங்குதான் கிழகிந்திய கம்பெனி ஆட்சி நடக்கின்றதே?

ஆங்காங்கு சண்டையும் நடக்கின்றது

அதில் நாம் என்ன செய்ய முடியும்?

நாமும் சண்டையிட வேண்டும்

அது நமது மாவீரன் டூப்ளேயாலே முடியாமல் போனது, டூயுப்ளே யார் தெரியுமா? உன்னை விட பெரும் திறமைசாலி. பாண்டிச்சேரி இன்றும் நம் கைவசம் இருக்க அவர் காட்டி சென்ற வழிதான் காரணம், அவர் சிலை கூட அங்கே உண்டு

நான் ஒன்றும் அவரை போல சாந்தா சாஹிப் பின்னால் எல்லாம் அலைவதில்லை

பின்னே

பெரும் புலி ஒன்றை பார்த்திருக்கின்றேன், வீரத்தில் மிக சிறந்தவன் அவன். ஆனால் தக்க துணையின்றி தவிக்கின்றான், அவனுக்கு மட்டும் பலமான துணை கிடைத்துவிட்டால் பிரிட்டனை அவனே பார்த்துகொள்வான்

யாரது?

மைசூர் மன்னன் திப்பு சுல்தான்

கேள்விபட்டிருக்கின்றோம், இது சாத்தியமா? அவனை நம்பலாமா?

வீரம் வீரத்தை அறியும், சந்தேகமேயில்லை என்னை விட மிக சிறந்த வீரன் அவன். இந்தியா பிரிட்டன் கையில் விழ அவன் மட்டுமே தடையாயிருக்கின்றான். அவனும் வீழ்ந்தால் மொத்த இந்தியாவும் பிரிட்டானியருக்கே, அதை தடுக்க வேண்டும்”

நெப்போலியன் கோரிக்கைக்கு அந்த சபை அனுமதி கொடுத்தது, இந்தியாவின் திப்பு சுல்தான் நெப்போலியன் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்திருந்தான்

உத்தரவு கிடைத்தவுடன் நாட்டின் மாலுமிகள், கடலோடிகள், சாஸ்திரிகள் என எல்லோரையும் அழைத்து பலமிக்க கப்பல்கல்படையினை தயாரிக்க தொடங்கினான் நெப்போலியன்

அன்று சூயஸ் கால்வாய் இல்லை எனினும் அக்காலத்தில் தொடங்கி இடையில் விடபட்ட வரலாறு உண்டு

நெப்போலியனுக்கு இருந்த பெரும் கனவுகளில் அந்த சூயஸ் கால்வாயும் ஒன்று,

அதுவே ஐரோப்பாவுக்கும் இந்தியாவிற்கு எளிதான வழி.

அது அமையாதவரை மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு கேரளா சுற்றி பெங்களூர் சுற்றி வந்த கதைதான், நெப்போலியன் காலம் அப்படித்தான் இருந்தது.

இவை எல்லாம் உடனே நடக்காத விஷயங்கள் என்பதால் முதலில் எகிப்தை பிடித்து அங்கு பிரான்ஸ் அஸ்திவாரத்தை பலபடுத்தி இந்தியாவின் தொடர்பை ஏற்படுத்திவிட்டு பார்க்கலாம் என எண்ணியிருந்தான்.

எகிப்து செல்லும் வழியினையும், அதன் நில அமைப்பினையும் அதன் சாதக் பாதகங்களையும் அலசி ஆராய தொடங்கினான்.

வாமணன் வருவான்…