வாமணன் : நெப்போலியன் வரலாறு : 9
இந்த பதவி நாற்காலி இருக்கின்றதே, உலகில் மிக மிக ஆபத்தானது. எந்த நல்லவனையும் முழு கெட்டவனாக, சுயநலமிக்கவனாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது
யாரை நம்பி வைத்தாலும் அதில் அமர்ந்தவுடன் மாறிவிடுகின்றார்கள் (பன்னீர் செல்வமும் , பழனிச்சாமியும் அப்படித்தான் என்ற எண்ணம் வர கூடாது), அதன் தன்மை அப்படி
இனி யாரையும் நம்ப இந்த நெப்போலியன் தயாராக இல்லை, நானே அமரபோகின்றேன் என தன்னை முதன்மை கவுன்சில் என 1801ல் அறிவித்தான் நெப்போலியன், இன்றளவும் நீடித்து நிற்கும் சீர்திருத்தங்களை செய்தான்
சட்டங்களை தொகுத்தான் இன்றளவும் பிரான்ஸ் சட்டம் நெப்போலியன் கோட் என்றே அழைக்கபடுகின்றது, அவன் தகப்பனார் சட்டமேதையாக இருந்ததால் சட்ட அறிவு அவனுக்கு இயல்பாக இருந்தது
இன்றளவும் குற்றவாளிகளை தண்டிக்கும் பிரான்ஸின் அடிப்படை சட்டம் நெப்போலியன் கொடுத்தது.
பிரான்ஸ் மத்திய வங்கி , புதிய நாணயம் , பொருளாதார கொள்கை என பல மாற்றங்களை செய்தான். நாட்டிற்கு புதுவடிவம் கொடுத்தான்.
செவாலியே போன்ற சிறந்த விருதுகள் அவனால்தான் ஏற்படுத்தபட்டன, நமது ஊர் சிவாஜி கணேசன், கமலஹாசன் எல்லோரும் பெற்றார்கள் அல்லவா? அந்த விருது.
பாரீஸை மாற்றிகாட்டினான் நெப்போலியன் , சாக்கடை திட்டம் முதல் பல பிரமாண்ட திட்டங்களால் அசத்தினான்
பிரான்சுக்கு புதுவடிவத்தை எல்லா வகையிலும் கொடுத்தான் நெப்போலியன், இன்றைய நவீன பிரான்ஸ் அவன் அடித்தளமிட்டதுதான்
அவன் மாபெரும் வீரன் என்பதை விட, அவன் மாபெரும் நிர்வாகி என்பதுதான் உண்மை. ஆனால் அவன் அந்த நிர்வாகி என்று பெயரெடுத்துவிட கூடாது என்பதில் பிரிட்டனுக்கு எச்சரிக்கை அதிகம்
இத்தாலியினை பிடித்துவிட்டான், ஆஸ்திரியாவினை காலடியில் வைத்திருக்கின்றான், விட்டால் ஐரோப்பாவினை விழுங்கிவிடுவான் என அஞ்சியது
நெப்போலியன் நாட்டை சீர்படுத்திகொண்டிருக்கின்றான், அப்படி விட முடியாது. நாடு அமைதியாகிவிட்டால் நிச்சயம் பாய்வான், நாம் முந்தவேண்டும் என முந்தியது பிரிட்டன்
பிரான்ஸ் மீது போர் அறிவித்தது
நேரடியாக வந்து தாக்கவில்லை, ஆங்காங்கு தன் கடற்படை மூலம் கண்ணாமூச்சி காட்டியது, சில நாடுகளை துணைக்கு அழைத்தது, சில சென்றன சில செல்லவில்லை
கவுன்சில் தலைவனான நெப்போலியனுக்கு உள்ளம் கொதித்தது, பிரிட்டனை உருதெரியாமல் அழிக்க அவன் கருவினான், பெரும் படை திரட்ட உத்தரவிட்டான்
ஆனால் அந்த கவுன்சில் ஒத்துழைக்கவில்லை. நெப்போலியன் தலைவன் என்றாலும் சபை முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை
அதற்கு மேலும் நெப்போலியனால் பொறுக்க முடியவில்லை. இது சரிவராது. தன்னை எப்படியாவது முடக்கிவிடுகின்றார்கள். பிரான்சின் நலனுக்காக ஒரு படையினை விருப்பபடி திரட்டாவிட்டால் இந்த பதவி எதற்கு?
இது வேண்டாம், இதனை விட பெரும் பதவி வேண்டும், ஆம் நானே இனி பிரான்ஸ் மன்னன்.
ஐரோப்பா அதிர்ந்தது, காரணம் மக்களாட்சி அப்பொழுதுதான் வந்திருந்தது, ஒரு ராணுவ தளபதியாக அதற்கு நெப்போலியன் காவல் இருப்பான் என்றுதான் உலகம் நம்பியது
ஆனால் அவன் சந்தித்த பல சிக்கல் காரணமாக அவனே அமர்ந்துவிட்டான். பிரான்ஸ் மக்களிடையே ஒரு முணுமுணுப்பு தோன்றியது. சில சிந்தனையாளர்கள் எதிர்த்தனர் அவர்களில் இசைமேதை பீத்தோவன் முக்கியமானவர்
நெப்போலியனின் எழுச்சியினை சிம்பொனியாக வடித்திருந்த அவர், அவன் கலவரகாரர்களை அடக்கி பிரான்ஸின் காவலனாக நின்றதை கொண்டாடிய அவர், அவனை பற்றி எழுதிய அந்த சிம்பொனியினை கிழித்தெறிந்தார்
நெப்போலியன் எதற்கும் கலங்கவில்லை. அவனை எதிர்த்து கலகம் செய்ய யாருக்கும் சிந்தனையுமில்லை
தன் கைகளை கட்டியிருந்த விலங்கு அவிழ்ந்து போன்றும், பெரும் தடை விலகியது போலும் மகா உற்சாகம் ஆனான்.
1804ல் பிரான்சின் மன்னராக தன்னை அறிவித்தார் நெப்போலியன், மக்களாட்சியில் இருந்து பிரான்ஸ் மன்னராட்சிக்கு திரும்பிற்று
ஐரோப்பிய மரபுபடி மன்னனை போப்தான் முடிசூட்ட வேண்டும், ஆனால் இத்தாலி விவகாரத்தில் நெப்போலியனுக்கும் அவருக்கும் மோதிற்று
ஆனாலும் போப் வந்து முடிசூட்ட அழைத்தான் நெப்போலியன், அவர் வரமறுத்தார். இது சரியல்ல அரசனின் மகனே அரசன், ராணுவ அதிகாரி அரசன் என அங்கீகரித்தால் இயேசு என்னை மன்னிக்கமாட்டார் என சொல்லிபார்த்தார்
கடவுள் மன்னிக்காதது விஷயம் அல்ல, முடிசூட்டி வைக்காவிட்டால் நெப்போலியன் உங்களை மன்னிக்கமாட்டான் என பதில் அனுப்பினான் நெப்போலியன்
வேறுவழியின்றி வந்து நின்றார் போப்
ஏன் போப்பினை அப்படி பாடாய் படுத்தினான் என்றால், போர் பல நாடுகளுக்கு கவுரவ அரசர் நிலையில் இருந்தார். அவரே அரசர். அவர் சொல்லுக்கு அவ்வளவு மரியாதை இருந்தது
அவர் பிரான்ஸினை 10தோடு 11வதாகத்தான் கருதுவார், அது மாபெரும் சக்தியாக வளர அவர் அனுமதிக்கமாட்டார் என்பது நெப்போலியன் கணக்காக இருந்தது
எப்படியோ 1804 டிசம்பர் 2ல் நெப்போலியனுக்கு முடிசூட்டும் விழா நடந்தது. கிரீடத்தை போப் கையில் எடுத்தார், என்ன சந்தேகம் கொண்டானோ நெப்போலியன், எழுந்து சென்று தானே வாங்கி தலையில் சூடினான்
விட்டால் போப் வேறுயார் தலையிலும் வைத்துவிடுவார் என அஞ்சியிருக்கலாம்
அதோடு போப்பும் தமிழக வளர்ப்புமகன் திருமணத்தில் சிவாஜி சோகமாய் சென்றதை போல சென்றுவிட்டார்
மறுநிமிடம் தன் ஆருயிர்காதலி ஜோசபினை பிரான்சின் பேரரசியாக அறிவித்தான் நெப்போலியன்
என்றோ ஆப்ரிக்க ஜோசியர் ஒருவர், மிக சாதாரண பெண்ணான அந்த ஜோசப்பினிடம் உன் ஜாதகபடி நீ ஒருநாள் ராணி ஆவாய் என சொன்னது நிறைவேறிற்று.
ஆனாலும் பரிதாபத்திற்குரியன் நெப்போலியன், அவன் வாழ்ந்த காலத்தில் குஷ்பூ இல்லை. அதனால் ஜோசபினுக்கு வாய்ப்பு இருந்திருக்கின்றது
ஒருவேளை திப்புசுல்தானும் நெப்போலியனும் இணைந்து வெள்ளையரை விரட்டியிருந்தால் இந்தியா பிரான்ஸ் கையில் சென்றிருக்கும், அந்த தாஜ்மகாலை ஜோசப்பின் மகாலாக அறிவித்திருப்பான் நெப்போலியன்
இன்று அது ஜோசப்பின் மகால் என மாறியிருக்கும், என்னவோ அப்படி நடக்கவில்லை.
ஆனால் பெரும் உச்சிக்கு சென்றாள் ஜோசப்பின்.
ஜோசப்பினுக்கு கிட்டதட்ட சசிகலா ஜாதகம் போல, அவள் வாழ்வு அப்படித்தான் சொல்கின்றது
அரசன் ஆனாலும் நெப்போலியன் ஆடம்பரவாழ்க்கை வாழவில்லை, ஒரு அறைதான் அவனுக்கு இருந்தது
ஒரு கட்டில் ஒரு மேஜை சில உடைகள், நிறைய புத்தகங்கள் என்றுதான் இருந்தான். அதுதான் நெப்போலியன்.
அவன் செய்த போர்களும், அவன் வாழ்ந்த வாழ்வு எல்லாமே பிரான்சுக்காக, அந்த நெப்போலியனின் குணம் நிச்சயம் போற்றதக்கது.
இப்பொழுது அவன் அரசன், பிரான்ஸின் எல்லா அதிகாரமும் அவனிடமே குவிந்திருந்தது. நாட்டை நல்ல முறையில் நிர்வகித்து கஜானாவினை நிரப்பினான்
அவன் நடந்து சபைக்கு வந்தபொழுது அவன் வாள் தரை கம்பளத்தை கிழித்தது அதனால் அதனை அகற்றினார்கள்
அவன் இப்பொழுது வந்தபொழுது தரையில் வாள் உரசி தீப்பொறி கிளம்பியது
அதை பற்றியெல்லாம் அவன் கவலைபடவில்லை. நாட்டை மிக சிறப்பாக்கினான்.
ஆனால் பிரிட்டனின் அட்டகாசம் அதிகரித்தது, கொதித்தான் நெப்போலியன்
முன்பு நான் தளபதி, என் முடிவினை அங்கீகரிக்க மேலிடம் இருந்தது, இனி நானே சகலமும். நான் எடுத்ததே முடிவு என இருக்கும் நிலையில் இந்த பிரிட்டனை விடுவேனா?
விடவே மாட்டேன், முதலில் அதற்கு துதிபாடும் அல்லக்கை நாடுகளை தூக்குவேன் என படை திரட்டினான்
பெரும் படை தயாரானது
மொத்த ஐரோப்பாவினையும் வெல்லபோகின்றேன் என சொல்லி அந்த உயரமான குதிரையில் அசால்ட்டாக தாவி ஏறினான்
ஐரோப்பா முழுக்க அவன் கொடி பறக்க காலம் வந்தது
அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்தான், ஒவ்வொரு பிரிட்டனின் ஆதரவு நாடும் அவன் காலில் விழுந்து கொண்டிருந்தது.
அவனை வெல்வார் யாருமில்லை
பிரிட்டன் நடுங்க தொடங்கியது.
வாமணன் வருவான்..