வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்..
வலம்புரி ஜாணின் நூல் ஒன்றினை வாசித்தேன், அற்புதமாக எழுதுகின்றார், பெரும் அழகான வார்த்தைகள், வார்த்தை சித்தர் எனும் பட்டம் அவருக்கு பொருந்த கூடியது
ஆனால் அவரின் எழுத்து வார்த்தைகளை தாண்டி அனுமானம் இப்படித்தான் முடிகின்றது
மிக சிறுபான்மையான இனத்தின் அறிவாளியான அவரை கலைஞர் கைதூக்கி விட்டிருக்கின்றார், எம்பியாகவும் கலைஞர் உயர்த்த முயன்றார்..உயர்த்தினார்
ஆனால் சில சர்ச்சைகளில் கலைஞரை விட்டு, செய்நன்றி கொன்றுவிட்டு எம்ஜிஆருடன் ஐக்கியமாகின்றார், அவரும் இவருக்கு இதழ் எல்லாம் தொடங்கி கொடுக்கின்றார், அதிமுகவின் பிரதான நபராகின்றார் ஜாண்
என்றும் மூடர்கள் நிரம்பிய அந்த கூட்டத்தில் உலக அறிவும், உள்ளூர் அறிவும், இலக்கிய அறிவும் நிரம்ப பெற்ற ஒரே விளக்கு தூணாக நின்றிருக்கின்றார் ஜாண்..
ஆனால் விதி நடராஜன் வடிவில் வருகின்றது, எம்ஜிஆரும் ஜெயலலிதாவின் மீதான ஒரு வித பிடிப்பில் ஜாணை பின்னுக்கு தள்ளுகின்றார்,
நடராஜன் தூக்கியே எறிகின்றார்
அரசியலில் பெரும் நபராக வளர்ந்திருக்க கூடிய, பெரும் பிம்பமாக ஜொலித்திருக்க கூடிய வலம்புரி ஜாண் பின்னாளில் சாதரண எழுத்தாளராக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்
ஜப்பானியரை நம்பி நாசமாய் போன சுபாஷ் சந்திரபோசுக்கும், அதிமுகவினை நம்பி ஒழிந்து போன வலம்புரி ஜாணுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. சர்வாதிகாரிகளை நம்பினால் அப்படித்தான்
வைகோ, வலம்புரி ஜாண், என ஏராளமானவர்கள் கலைஞருக்கு துரோகம் செய்துவிட்டே எதிர்முகாம் தாவினார்கள், நன்றி கொன்ற பாவம் அது
அதில் வலம்புரி ஜாண் கடைசி காலத்தில் அனுபவித்து செய்த்திருக்கின்றார், வைகோ சிறையில் அனுபவித்து கொண்டிருக்கின்றார்
இருவருமே பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்தவர்கள், அக்கல்லூரிக்கு பெரும் அடையாளங்கள், அக்கல்லூரி விழாக்களில் இருவரின் பேச்சையும் கேட்டிருக்கின்றேன்
ஆனால் கூடா நட்பு இருவரின் வாழ்வினையும் சரித்திருக்கின்றது
இன்னும் எத்தனை பேர் கலைஞரின் செய்நன்றி கொன்றுவிட்டு மனதிற்குள் அழுது கொண்டிருக்கின்றார்களோ தெரியாது
ஆனால் நிச்சயம் அழுவார்கள்,
கலைஞர் எனும் தலைவர் உயர்த்திவிட்ட நபர்களும் ஏராளம், அவர்களால் வாங்கிகட்டி கொண்டதும் ஏராளம், சுருக்கமாக சொன்னால் சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கின்றார்
கலைஞர் ஏன் பல தலைவர்களை உருவாக்கவில்லை என்றால் இப்படித்தான், அவர் உருவாக்க நினைத்தவர்கள் எல்லாம் திசைமாறி சென்றால் அவர்தான் என்ன செய்வார்?
அவரின் வைரவிழா காலங்களில் இவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன..