விஸ்வரூபம் 2 : பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

இந்த கமலஹாசனில் விஸ்வரூபம் 2 எப்படி இருக்கின்றது என படம்பார்த்த நண்பர்களிடம் கேட்டால் சிலர் முறைத்துவிட்டு சென்றுவிடுகின்றார்கள், சிலர் படம் பார்த்த வருத்தத்தில் 2 பாட்டில் குடித்துவிட்டு கமலை திட்டிகொண்டிருக்கின்றார்கள்

சிலர் சந்திரமுடி வடிவேலு கடும் அதிர்ச்சியில் சிலைபோல நின்றுகொண்டிருகின்றார்கள், என்ன கதை என கேட்டால் தெரியாமலே படம் முடிந்துவிட்டதாக சொல்லிகொள்கின்றார்கள்

இன்னும் சிலர் கமல் இயக்கும் படத்திற்கு இனி செல்ல கூடாது என சத்தியமே செய்கின்றார்கள்

அப்படி பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

கொஞ்ச காலமாகவே அவர் கடும் மனகுழப்பத்திலும் உளறலிலும் இருப்பது தெரிகின்றது, அவரை இயக்கவிட்டால் என்னாகும்? மய்யம் போலத்தான் ஆகும்

உண்மையில் கமல் நல்ல நடிகர், நல்ல இயக்குநர் கையில் இருந்தால் இன்றும் கலக்கலான நடிப்பினை அவரால் கொடுக்க முடியும்

ஆனால் இயக்குகின்றேன் என வந்து அவரின் அதிமேதாவிதனத்தில் எல்லோரையும் குழப்புவது அவருக்கு புதிதல்ல‌

திரைக்கு பின்னால் இருக்க வேண்டிய டி.ராஜேந்ந்த்ரும், திரைக்கு பின்னால் செல்லவே கூடாத கமலஹாசனும் இங்கு இடம் மாறி இம்சை கொடுப்பது தமிழக சாபம்

அப்படி இம்முறையும் திரைபடம் பார்க்க வந்த ரசிகர்கள் தலையில் ஏறி உட்கார்ந்து தலையினை பிராண்டி, காதை திருகி கமல் என்னவெல்லாமோ செய்திருக்கின்றார்

ஒருவன் கூட தியேட்டர் விட்டு சந்தோஷமாக வரவில்லை, கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் திமுகவினர் போல ஒரு மாதிரி வருகின்றார்கள்

ஒரு நண்பர் சொன்னார்

“அண்ணே, விஸ்வரூபம் முதல் பாகம் பிரச்சினையிலே நாட்டை விட்டு போய்ருவேன்னு சொன்னாருண்ணே, அப்படி போயிருந்தால் ஒரு சிக்கலும் இருந்திருக்காது

இனியும் ஒண்ணும் பிரச்சினை இல்லண்ணே, இங்க இருந்தா இனி நம்மை எல்லாம் கொலைகாரான ஆக்கிருவாரு, பிடித்து வலுகட்டாயமாக அனுப்பலாம்

ஆனால் வயசில பெரியவரு அவரா கவுரவமா போயிட்டா நல்லது”