வீரமாமுனிவன்

இந்த வீரமாமுனிவன் என்பவன் யார், அவன் என்ன செய்தான் என பலர் கேட்பதால் சில விஷயங்களை சொல்லலாம்

அது வீரசிவாஜியின் இந்து ராஜ்ஜியத்தை அவுரங்கசீப் கடும் பிரயர்த்தனமாக முறியடித்து மொகலாயத்தை மீள கட்டமைக்கபட பெரும் போர் நடத்திய காலங்கள், அப்பொழுது மராட்டிய பகுதிகள் அணல் அடித்து கொண்டிருந்தது, தமிழகத்தின் செஞ்சி பக்கமெல்லாம் பெரும் குழப்பம் நிலவிற்று

அவுரங்கசீப்பின் கனவினை சிவாஜியின் மருமகள் தாராபாய் பெண் சிங்கமாய் நின்று நொறுக்கி போட்டு கொண்டிருந்தாள், அவளின் தாக்குதல் முன் மொகலாயம் நொறுங்கியது, சாம்பாஜி காலத்தில் சரிந்த இந்து ராஜ்ஜியத்தை அவள் தூக்கி நிறுத்தினாள்

அப்பொழுது இயேசு சபை போதகனாக இத்தாலிக்காரன் ஜோசப் கான்ஸ்டான்டைன் பெஸ்கி போர்ச்சுகீசிய கப்பலில் கோவா வந்து சேர்ந்தான், 1710ல் அவன் வரும்பொழுது வயது 30

கோவா பக்கம் மதமாற்றம் செய்யமுடியாதபடி சிவாஜியின் இந்துராஜ்யம் வலுத்திருந்தது, சிவாஜி தன் காலத்திலே சில வெள்ளை பாதிரிகளை இந்துக்களாக மதம்மாற்றி மதம்மாற்றும் வலி என்னபதை செவிட்டில் அடித்து சொல்லியிருந்தான்

இதனால் அங்கே ஏதும் செய்யமுடியாத கோஷ்டிகள் அதிக போர்சூழல் இல்லா அமைதியான தமிழக பக்கம் வந்தன‌

இங்கும் தஞ்சை பக்கம் மராட்டியரும் வைகை தாமிரபரணி என நாயக்கர்களும் வலுத்து இருந்ததால் வறண்ட இடங்கள் கடற்கரை பக்கத்து மக்கள் எளிய மக்கள் வாழும் இடம் என அந்த இடத்தை குறிவைத்து மதமாற்ற கும்பல் வேலை செய்தது

இப்படித்தான் தமிழகத்தின் வறண்ட பக்கமெல்லாம் சுற்றி திரிந்தான் அந்த பெஸ்கி

அவன் செய்தமுதல் வேலை இந்தியாவினை படித்த தந்திரம்

இங்கு காவி உடை அணிதல், மாமிசம் புசிக்காமல் இருத்தல், ருத்திராட்சம் அணிதலெல்லாம் துறவிகளின் அடையாளமாக இருந்ததால் தானும் ஒரு கிறிஸ்தவ துறவி என காவி உடைக்குமாறினான், மாமிசம் தவிர்த்ததாக சொல்லிகொண்டான்

இந்து பாரம்பரியத்தில் அன்பான இயேசுவினை போதிக்கும் முனிவன் என தனக்கு தானே சொல்லிகொண்டான்

தன் பெயரை தைரியநாத சுவாமி என மாற்றினான், பின் அது வடமொழி என்பதால் வீரமாமுனி என மாற்றிகொண்டான்

இவன் காலத்தில் ஆங்கில அரசு எழவில்லை, இங்கு நாயக்கர் ஆட்சியே நீடித்தது, இந்த மாதிரி பரதேசிகளை யாரும் அப்பொழுது கண்டுகொள்ளவுமில்லை, மிக மிக சிறிய கூட்டமாக கடற்கரை ஆங்காங்கே ஊருக்குள் என அவை சுற்றிகொண்டிருந்தன‌

ஒருவகையில் பாவம் கடல்கடந்து பிழைக்க வந்த பராரி கூட்டம் எனும் பரிதாபமும் இவர்கள்மேல் இந்துக்களுக்கு இருந்தது

ஆனால் தீட்டிய மரத்திலே கூர்பார்க்கும் கூட்டம் மெல்ல மெல்ல புத்தியினை காட்டியது

கோவா பக்கம் மராட்டியர் வலுவான இந்துவாக ஐரோப்பிய மிஷனரிகளை முழங்காலில் நிறுத்தியதால் தங்கள் பரிட்சய முயற்சிகளை தமிழகத்தில் தொடங்கினார்கள்

அக்காலத்தில் வடக்கன்குளம் போன்ற மிக சிலகிறிஸ்தவ ஆலயங்களே இருந்தன, அவையும் கத்தோலிக்கமே, இந்த அல்லேலூயா கோஷ்டிகளெல்லாம் இல்லவே இல்லை

இந்த பெஸ்கிக்கு தமிழ்படிக்காமல் இங்கு கிறிஸ்தவம் வளர்க்கமுடியாது என்பது தெரிந்தது இதனால் தமிழை படித்தான் கொஞ்சம் தெலுங்கும் படித்தான்

தமிழை அவன் அதன் அழகில் மயங்கி ஆசையில் படிக்கவில்லை, அவன் மதம் பரப்புவதற்காக படித்தான்

படித்தவன் லத்தீன் தமிழ் அகராதியினைஉருவாக்கினான், அன்று இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போல லத்தீன் கிறிஸ்தவர்க்கு பொதுமொழியாக இருந்தது

இந்த லத்தீன் தமிழ் அகராதி உருவாக்கத்தின்பொழுது தமிழக ஓலைசுவடி, தொல்காப்பிய வழி தமிழை தன் தேவைக்கு அல்லது லத்தீன் பாணியில் சில மாற்றங்களை செய்து எழுதினான்

அதாவது அவன் தேவைக்கு எழுதிகொண்டான்

வீரமாமுனிவன் காலத்திற்கு முன்பு வரை ”எ”கரம், ”ஒ”கரம் இரண்டும் நெடில் எழுத்தாகவும் ”எ”கரம், “ஒ”கரத்துக்கு மேல் ஒரு புள்ளி வைத்தால் அவை குறில் எழுத்தாகவும் கருதப்பட்டு வந்தன. . இந்த முறையை மாற்றி ”எ”, “ஒ” இரண்டும் குறில் என்றும் ”ஏ”, “ஓ” இரண்டும் நெடில் என மாற்றினான்

அது கிட்டதட்ட லத்தீன் சாயலே, லத்தீன் மயத்துக்கு தமிழை இழுத்தான் பெஸ்கி

இப்படி இவன் பல குழப்பங்களை செய்ததால்தான் கல்வெட்டு தமிழ் நமக்கு அன்னியமாயிற்று, இவன் தமிழ் வழமையாயிற்று

17ம் நூற்றாண்டில் ஐரோப்பியனால் எழுதபட்ட தமிழ் அவனுடையது அதை சில மாற்றங்களுடன் எழுதினான்

குறில் நெடில் விஷயங்களில் இந்த குழப்பத்தை அவன் தனக்கு தானே செய்துகொண்டான்

இப்படி அவன் தமிழை தனக்கு தானே எழுதி , நாம் தமிழர் தும்பிகள் போல சேர்த்து கொண்ட சிறிய கூட்டத்தின் நடுவே ஏதோ செய்துகொண்டிருந்தான்

இந்த காலகட்டத்தில் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை , அனாமதேயனாக அவன் போக்கில் அலைந்தான், தமிழறிந்தோரோ, தமிழக தமிழ் அறிந்த மடமோ ஆதீனமோ இவனை ஒரு பொருட்டாக கொள்ளவில்லை

முக்கியமான விஷயம் அவன் காலத்தில் காகிதம் இல்லை, ஓலை சுவடிதான் இருந்தது

இவனுக்கு அதிர்ஷ்டம் யார் வகையில் வந்ததென்றால் மொகலாயர் மறுபடி தமிழகத்துக்குள் ஊடுருவினார்கள், சிவாஜியின் இந்துராஜ்யம் சில சரிவினை கண்டபொழுது அவர்கள் ஆற்காடு நவாப் வடிவில் நுழைந்து வந்தார்கள்

அப்பொழுது பெரும் அரசியல் குழப்பம் வந்தது, இந்த குழப்பத்தில் தன்னை நிறுத்திகொண்டான் இந்த பெஸ்கி

அதாவது இக்காலகட்டத்தில் ஆங்காங்கே இருந்த சிற்றரசர்களுக்கு போர்ச்சுகீசிய உதவியும் சிலவும் தேவைபட்டன என்பதால் இவனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை

திருகுறள், தேவாரம் , திருவாசகம் போன்ற பல ஆன்மீக நூல்களை லத்தீனுக்கு மாற்றி படிக்கவைத்து , இவற்றை எப்படி திரித்தால் இந்துமதம் ஒழியும், மெல்ல மெல்ல ஒழிக்கமுடியும், இந்துக்களின் நம்பிக்கையினை எப்படி ஒழிப்பது என்றெல்லாம் திட்டமிட கற்றும் கொடுத்தான்

உள்ளிருந்தே அரிக்கும் நோய்போல இங்கிருந்தே தமிழை கொண்டே தமிழர் இந்துமதத்தை சரிக்க கோடரி வைத்தான்

அப்பொழுதுதான் கிறிஸ்தவ கதையான தேம்பவானியினை எழுதினான், இன்னும் இந்து மடங்களை மிக மட்டமாக கொச்சைபடுத்தி “பரமார்த்த குரு” கதை எனும் நூலை எழுதினான்

அதை ஏன் எழுதினான் என்றால் இந்து குருகுலங்களை மிக மோசமாக சித்தரித்து எழுதினான், அதையும் இந்துக்கள் சிரித்துகொண்டே படித்ததுதான் சோகம்

ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாப் காலத்தில் மருதநயாகம் எனும் யூசுப்கான் உருவான நேரம் இங்கு இஸ்லாமிய மாற்றம் வந்தது, வேகமான இஸ்லாமிய மயமாக்கல் வந்தது

அப்பொழுது நவாபுகள் படைக்கும் இவனுக்கும் மோதலெல்லாம் வந்தது, முகமதியர் இவனை ஓட ஓட விரட்டினார்கள்

தமிழகத்தில் நவாப் ஆட்சி அதிகரிக்க இவன் கேரளா தப்பியிருகின்றான், அங்கும் பல சேட்டைகளை செய்து கொல்லபட்டிருக்கின்றான்

கேரளாவில் அவன் கல்லறை இருந்திருக்கின்றது, பின்னர் திப்புசுல்தான் காலத்தில் முழுக்க இடிக்கபட்டு அடையாளம் இல்லாமல் செய்யபட்டிருக்கின்றது

( இவனை போல இன்னொரு அரைபயித்தியம் காவி உடை அணிந்து என்னென்ன அட்டகாசமோ செய்தது அவன் பெயர் ராபர்ட் தே நோபிலி

இவன் தோமா இந்தியாவுக்கு வந்தவன், திருகுறள் கிறிஸ்தவநூல் என இம்சைகளை எல்லாம் தொடங்கி வைத்தவன், உருவ ஒற்றுமையால் இருவரின் அடாவடிகளும் ஒருவருக்கொருவர் தவறாக புரிந்துகொள்ளபட்டது)

இவ்வளவுதான் அந்த பெஸ்கி எனும் வீரமாமுனி வாழ்க்கை

அது யுவான் சுவாங்கின் இந்திய பயணம், மார்க்கோ போலோ இந்திய பயணம் போல முடிந்திருக்க வேண்டியதுதான் ஆனால் அவன் காலத்துக்கு பின் பிரிட்டிசாரிடம் தமிழகம் வீழ்ந்தது

தமிழகத்தை ஆள அவர்களுக்கு தமிழ் வேண்டும், தமிழ் லத்தீன் அகராதியினை தொடங்கி வைத்து அரைகுறை தமிழை கிறுக்கிவைத்தவனுமான அவன் தமிழை பிரிட்டிசார் கையில் எடுத்தார்கள்

அதை கொண்டு ஆள ஆரம்பித்தார்கள், அந்த தமிழ் அலுவல் தமிழாயிற்று

இதைத்தான் பிடித்துகொண்டு தமிழ் சீர்திருத்தம் என கொக்கரிக்கின்றன இந்த திராவிட கோஷ்டிகள்

ஆம், அந்த பெஸ்கி எந்த சீர்திருத்தமும் செய்யவில்லை, சுருக்கெழுத்து போல அவன் அவனுக்கும் அவன் கோஷ்டிக்கும் புரிந்து கொள்ள ஒரு தமிழை எழுதினான், அந்த தமிழை பிரிட்டிசார் பின் தமிழகத்துக்கே ஆட்சிவடிவ மொழியாக்கினார்கள்

அதுதான் விஷயம் வேறொன்றுமில்லை

இந்த அரைகுறை தமிழ் அச்சுக்கு வந்தபொழுது அச்சுகோர்க்கும் பொழுது சில அசகவுரியங்கள் இருந்தன, ஈரோட்டு ராம்சாமி எனும் கஞ்சனுக்கு அந்த கூடுதல் செலவுகளை செய்ய மனமில்லாமல் தமிழை திருத்தி செலவினை குறைத்து கொண்டான்

அவனும் ஒரு பிரிட்டிஷ் கைகூலி என்பதில் சந்தேகமில்லை

அவன் பெஸ்கியின் தமிழை பின்பற்றி இன்னும் குழப்பும்படி தூண்டுதலும் இருந்தன, அதனால் தமிழை திருத்தினான் அந்த நாயக்கன், தன் பத்திரிகைகாகத்தான் திருத்தினான்

பெஸ்கி தமிழை ஆட்சிமொழி என்றாக்கி குழப்பிய மிஷனரி கோஷ்டி, ராம்சாமி தமிழையும் கொண்டாட வைத்து தமிழை இன்னும் நாசமாக்கிற்று

அவன் தமிழை திராவிட அரசு ஆட்சிதமிழ் ஆக்கிற்று

ஆம், ஒருவன் சிதைத்த தமிழை பிரிட்டிசார் ஆட்சிதமிழ் ஆக்கினார்கள், அடுத்தவன் சிதைத்த தமிழை திராவிட கும்பல் கொண்டாடிற்று

அதாவது திராவிடம் பின்னால் இருந்த மிஷனரிகள் இதுதான் தமிழ், இப்படி குழப்பினால்தான் கல்வெட்டு ஓலைசுவடி செப்பேடெல்லாம் வாசிக்க தெரியாத முட்டாள் தமிழினம் உருவாகும்

அந்த முட்டாள் தமிழன் தலையில் பெஸ்கி, கால்டுவெல் திரித்த திருகுறள், மெய்யியல் எல்லாம் போட்டு குழப்பி மதம்மாற்றலாம் என தொடர்ந்தார்கள்

அந்த தமிழைத்தான் நாம் கொண்டிருக்கின்றோம்

இந்த மொழி சிதைவை உலகுக்கு யார் கற்றுகொடுத்தது என்றால் ரோமர்கள், ஜூலியஸ் சீசர் இந்த தந்திரத்தை அரங்கேற்றினான், ஒரு இனத்தை முழுமையாக அடிமையாக வைக்க அவர்கள் கலாச்சாரம் மொழி இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பது அவன் சித்தாந்தம்

ரோமை சித்தாந்தம் இதுதான், இதனை கிரேக்கரிடம் இருந்து அவர்கள் கற்றார்கள்

இந்த ரோமை அரசை போப் கிறிஸ்தவ கூட்டம் கைபற்றியபொழுது தங்கள் மதத்தை பரப்ப அதனையே செய்தார்கள், யூதரின் மொழியான ஹீப்ருவினை இப்படி சிதைத்தார்கள்

ஒரு கட்டத்தில் ஹீப்ரு மொழியே அழியும் நிலைக்கு வந்தது, ஆனால் 1947க்கு பின் யூத இனம் இஸ்ரேல் நாட்டில் அதை மீட்டெடுத்தது

அப்படி தமிழும் ஒருநாள் இந்த பெஸ்கி ராம்சாமி சிதைவுகளை கடந்து தன்னை மீட்டெடுக்கும், முருகபெருமான் அதற்கு துணை நிற்பார் இது சத்தியம்

பெஸ்கி எப்படி இவ்வளவு பெரும் பிம்பமாக்கபட்டான் என்றால் அவர் சார்ந்த‌ இயேசு சபை நடத்தும் தமிழக கல்லூரிகளுக்கும் திராவிட கும்பலுக்கும் இடையேயான தொடர்புகளே சாட்சி

அவர்களால்தான் பெஸ்கி இப்படி பிம்பமானான்

இப்படியெல்லாம் தமிழை தன் விருப்பத்துக்கு தன் சுயலாபத்துக்கு தன் இனத்துக்கு தோதாக சிதைத்த பெஸ்கிக்கு சென்னையில் சிலை வைத்தது யார் தெரியுமா?

கருணாநிதி, ஏனென்றால் அவரின் திராவிடமும் மிஷனரியால் இயக்கபட்ட ஒன்றாகத்தான் இருந்தது.