வெல்ல பிறந்தவன் : 06
அலெக்ஸாண்டரின் முதல் அடி சிர்மஸ் மன்னனுக்கு விழுந்தது, டான்யூப் நதிக்கரையில் நடந்த யுத்தம் அது. அதுவரை அப்படிபட்ட வினோத யுத்தத்தை கிரேக்கம் அறியவில்லை, மோதினான், கொஞ்சம் அடிவாங்கியது போல் நடித்தான், பின் ஒரேபாய்ச்சல் மொத்த எதிரி சேனையும் அடங்கியது
ராணுவம் என்பதற்கும், கும்பல் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான். போர் என்பதற்கும் வன்முறை என்பதற்குமுள்ள வித்தியாசமும் அதுதான்
யுத்தம் என்று வந்தால் வியூகம் முக்கியம், படைகளின் பலத்தினை விட வியூகம் மகா முக்கியம். எதிரியின் வியூகத்தை நொடிபொழுதில் அறிந்து, தங்கள் வியூகத்தில் இறங்கி, யுத்த போக்கினை பொறுத்து வியூகங்களை மாற்றும் ராணுவமே வெற்றிபெரும்
வியூகம் என்பது பெரிய விஷயமல்ல, எதிரியின் பலமறிந்து திட்டமிடுவது, திட்டமிட்டது போல போரிடுவது. ஆனால் கவனமாக செய்யவேண்டும், கொஞ்சம் பிசகினாலும் கழுத்திற்கு கத்தி
மிக எளிதாக அந்நாட்டை வென்றான் அலெக்ஸாண்டர், தோற்ற நாடு அவன் முன் கைகட்டி நின்றது, இனி அவர்கள் அவன் அடிமை.
எந்த மன்னரிடம் இல்லாத விஷேஷ குணம் அலெக்ஸாண்டரிடம் இருந்தது, தோற்ற நாட்டை அவன் அடிமை போல் நடத்துவதில்லை. தன்னை ஏற்றுகொண்டால் அவர்களை மாசிடோனியா மக்களை போலவே சுதந்திரமாக நடத்தினான், அந்த வீர்களை தன் படையிலே இணைத்தான், மொத்தமாக கொல்வதில் எல்லாம் அவனுக்கு விருப்பமில்லை
ஆனால் அடிபணிய மறுத்தால் அலெக்ஸாண்டரின் கோரமுகம் தெரியும்.
சிர்மஸ் மன்னனை அலெக்ஸாண்டர் அடித்த அடியினை கண்ட பின்னாலும் , கிரேக்க வைக்கோ சத்தம் அடங்கவில்லை, “ஏ சிறுவனே, இது வீழா வீரம், மண்டியிடா மானம், கிரேக்கம் என்பது சிங்கத்தோடு மோதும் பூமி, சிறுவா உன்னிடமா அடிபணியும்” என ஏக முழக்கம்.
பாய்ந்து வந்தான் அலெக்ஸாண்டர், மிக மூர்க்கமான யுத்தம். அந்த நாடு அப்படி ஒரு அடியினை அலெக்ஸாண்டரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. மொத்தமாக பிடித்தான் , மண்டியிட்ட நாடு அவன் முன் குனிந்து நின்றது
அதே பாணி கேள்வி, அடிபணிகின்றீர்களா இல்லையா? ஆனால் அது கிரேக்க வைகோ நாடல்லவா? இனிதான் இருக்கின்றது யுத்தம் என அந்த டெமஸ்தனிஸ் முழங்க, ஆம் என உரிமைகுரல் எழுப்பினார்கள்
கண்ணசைத்தான் அலெக்ஸாண்டர், நொடிபொழுதில் சரிந்தன தலைகள். மரண பயத்தில் விழித்துகொண்டிருந்தார் டெமஸ்தனிஸ்
இந்த நாடு சரிவராது, கலைஞர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்களை தவிர எல்லோரையும் அழித்துவிடுங்கள், என்ன இருந்தாலும் பெரியமனிதர் என்பதால் இந்த டெமஸ்தனிஸ் உயிரோடு இருக்கட்டும்
அலெக்ஸாண்டர் என்பவன் யார் எனற செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள இவர் உயிரோடு இருக்கட்டும் என சொல்லிவிட்டு மாசிடோனியா கிளம்பிவிட்டான்
அதன் பின் கிரேக்க வை.கோ டெமஸ்தனிஸ் கீச்சுகுரல் கூட எழுப்பவில்லை, கேட்க மட்டும் செய்தார்
மொத்தமாக கிரேக்கத்தை அடக்கி ஒடுக்கி தனிபெரும் அரசனாக நிமிருந்து நின்றான் அலெக்ஸாண்டர். ஆனாலும் மற்ற கிரேக்க நாடுகளை அவன் நேசநாடாகத்தான் நடத்தினான்
20 வயது அலெக்ஸாண்டர் கிரேக்க மாமன்னாக அமர்ந்தபொழுதும் , அவன் சிந்தனை வேறுமாதியே இருந்தது. அரிஸ்டாட்டில் சொன்னதும், தந்தை சொன்னதும் காதில் ஒலித்துகொண்டே இருந்தது.
நாம் கிரேக்கர்கள், மிக உயர்ந்த வீரமும் தத்துவமும் அறிவும் பெருமையும் கொண்டவர்கள், இது இங்கே மட்டும் வாழகூடாது, உலகமே நம் கலாச்சாரபடி வாழவேண்டும், எல்லா இனமும் நாமே உயர்ந்தவர்கள் என கிரேக்கர்களை ஏற்றுகொள்ள வேண்டும்
என்ன செய்யலாம்? நமக்குள் சண்டையிட்டோம், இப்பொழுது வாள்முனையில் அடக்கி வைத்திருக்கின்றேன், நிச்சயம் இனி எவனும் வாலாட்டமாட்டான். ஆனால் சொல்லமுடியாது வந்தாலும் வரலாம்
கிரேக்கம் நிரந்தர அமைதியாக இருக்க, மகா ஒற்றுமையுடன் இருக்க என்ன வழி?
தமக்குள் அடித்துகொள்ளும் கிரேக்கர்கள், மொத்த கிரேக்கர்கள் மானபிரச்சினை என்றால் ஒன்றுபடுவார்கள், அதற்கு பிரச்சினை கிரேக்கத்திற்கு அப்பால் இருந்து வரவேண்டும்
(என்னதான் காங்கிரஸ், பிஜேபி, திமுக என நமக்குள் அடித்துகொண்டாலும் இந்தியா எனும் வரும்பொழுது கிரிக்கெட்டோ, எல்லை யுத்தமோ மொத்த இந்தியாவும் ஒன்றாக எழும்பும் அல்லவா? அப்படி
தங்களுக்குள் அடித்துகொண்டாலும் திமுக என்றவுடன் ஒன்றாகிவிடுகின்றார்கள் அல்லாவா அதிமுகவினர், அப்படி)
அந்த பாரசீகர்கள் பெரும் தொல்லை, 200 ஆண்டுகாலமாக அசைத்து பார்க்கமுடியாத வல்லரசு அவர்கள். பல அரசர்கள் உள்ள பாரசீகம் தான். சில சிற்றரசுகள் உட்பட அசைக்கமுடியாத பாபிலோன் மன்னர் டார்சியஸ் வரை பெரும் அசுரர்கள் வாழும் நாடு
எப்படி எல்லாம் தோற்றோம், ஒரு வெற்றியினை கொண்டாட ஒருவனை எப்படி எல்லாம் ஓடவிட்டு , அவனும் செத்து அவன் நினைவாக மாரத்தான் எல்லாம் ஓடுகின்றோம், அந்த ஓட்டபந்தயம் நடக்கும்பொழுதெல்லாம் , அந்த பாரசீகர்களிடம் நாம் பட்ட அடி நினைவுக்கு வந்து கொண்டே இருக்கின்றது.
இனி அதுதான் சரி, கிரேக்கத்தின் தலைசிறந்த நாடாக மாசிடோனியா ஆகிவிட்டது, இனி உலகின் மிக சிறந்த நாடாக கிரேக்கத்தை ஆக்கினால் என்ன?
திட்டம் ரெடி, ஆனால் மொத்த கிரேக்கமும் ஆதரிக்கவேண்டுமே, படை திரட்டவேண்டும் இன்னும் ஏராளமான வேலை இருக்கின்றது. மிரட்டி திரட்டலாம் அது நிச்சயம் ஒரு நாள் காலைவாரிவிடும் அப்படி நடந்தால் பாரசீகர் வாய்விட்டு சிரிப்பார்கள்
உடனே கிரேக்க சபையினை கூட்ட உத்தரவிட்டான், சிற்றரசரும், தத்துவ ஞானிகளும் வந்திருந்தார்கள், அங்கு தன் கோரிக்கையினை தந்திரமாக வைத்தான் அலெக்ஸாண்டர்.
“பெரியோர்களே, நான் இந்த உலகின் சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காகவோ, மாசிடோனியா பெரும் வல்லரசு ஆகவேண்டும் என்பதற்காகவோ இந்த யுத்தத்தை தொடங்கபோவதில்லை
மிக உயர்ந்த நம் கலாச்சாரம் உலகெல்லாம் பரப்பபட வேண்டும், கிரேக்க புகழ் உலகெல்லாம் கொண்டாடபடவேண்டும், இந்த கிரேக்க பெருமைக்காகவே இந்த யுத்தத்தை தொடங்குகின்றேன்
என்னிடம் பலமான ராணுவம் உண்டு, ஆயினும் பாரசீகர்கள் அதாவது நம் 200 ஆண்டுகால எதிரிகள் பலமானவர்கள், அவர்களை வீழ்த்த உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்” என கோரி நின்றான்
இந்த அணுகுமுறை கிரேக்கர்களை யோசிக்க வைத்தது, நிச்சயமாக இவன் வீரன், இதுவரை வெற்றிதான் பெற்றிருக்கின்றான், அந்த பாரசீகர்களுடன் மோதும் தைரியம் கிரேக்கத்தில் இவனிடம்தான் இருக்கின்றது, சரி அப்பல்லோ மீது பாரத்தை போட்டு அனுப்பிவைப்போம்
அந்த சபைக்கு ஒரு ஞானி வரவில்லை, அவர் பெயர் டாய்க்னிஸ், அவரிடம் ஆலோசனை பெற நேரில் சென்றால் அலெக்ஸாண்டர்
காலை வெயிலில் ஒய்யாரமாக படுத்திருந்தார் டயாக்னிஸ், வந்து அவர்முன் நிழலாக நின்றான் அலெக்ஸாண்டர், அவர் ஏன் வரவில்லை என கேட்டான், தன் நோக்கத்தை எடுத்து சொன்னான்
அவர் அமைதியாக கேட்டார், நீதான் அலெக்ஸாண்டரா, ஒரு உதவி செய்? , என்ன என ஆவலாக கேட்ட அலெக்ஸாண்டரிடம் சொன்னார்
“நீ வெயிலை மறைக்கின்றாய், தள்ளிபோ”
சுற்றி நின்றவர்கள் வாளை உருவினார்கள், சிரித்துகொண்டே தடுத்தான் அலெக்ஸாண்டர், இம்மனிதர் எவ்வளவு பெரும் அறிவாளி தெரியுமா? , அறிவாளிகள் சாக கூடாது விட்டுவிடுங்கள்
இதுதான் அலெக்ஸாண்டர், மிக நிதானமானவன், தொலைக்க வேண்டியவரகளை தொலைத்தான், தொழவேண்டியவர்களை தொழுதான்.
சரி, அந்த டயாக்னிஸ் ஏன் அப்படி சொன்னார்? என்ன இருந்தாலும் ஞானி அல்லவா?, இது ஏன் வேண்டாத வேலை, கிரேக்க பெருமையினை வாள்முனையிலா பரப்புவது என யோசித்திருக்கலாம்
கொஞ்சமும் அசரவில்லை அலெக்ஸாண்டர், பெரிய அறிவாளியிடம் ஆலோசனை கேட்டோம், அவர் சொல்லவில்லை அதனால் என்ன நம் பலத்தோடு இறங்கலாம் என தீர்மானித்தான்
பெரும் படை திரட்டபட்டது, அலெக்ஸாண்டர் குதிரைபடையினை பலமாக வைத்திருந்தார். அந்த குதிரைகளுகு அனுபவமும், பலமும் அதிகம்
குதிரை என்பது கூட்டத்தை கண்டு மிரள கூடாது, ஓசைக்கு அஞ்ச கூடாது, தாண்ட சொல்லும் இடத்தை தாண்டவேண்டும், நிற்கவேண்டிய இடத்தில் நிற்கவேண்டும், ஓடவேண்டிய இடத்தில் ஓடவேண்டும், அந்த துல்லிய பயிற்ற்சி கொடுக்கபட்டது
அடுத்து ஈட்டிபடை , அதில் இருவகை இருந்தது எடை குறைவான அதிக தூரம் வீசகூடிய ஈட்டிகள், இன்னொன்று கையில் வைத்திருக்கும் ஈட்டி அதோடு ஒரு கோடாரியினை சேர்த்து வித்தியாசமான ஆயுதமாக்கினான்
இன்னும் மருத்துவபடை , உளவுபடை எல்லாம் தயாராயின. உளவுபடைக்கு மிக தந்திர பயிற்சிவழங்கபட்டது. உளவு தகவல்தான் பாதிவெற்றி
மிக நுட்பமான இன்னொரு காரியத்தை செய்தான், அதுவரை வீரர்கள் என்பவர்கள் அடிமைகள், அரசன் கொடுத்ததுதான் ஊதியம். அவர்கள் தமிழக காவல்துறை போல முணுமுணுத்துகொண்டிருந்தார்கள் பாவம் மாமூல் கூட வாங்கமுடியாத நிலை
அலெக்ஸாண்டர் சொன்னான், வீரர்களே, நாம் வெற்றிபெறும் நாட்டில் கிடைக்கும் பொருள் எல்லாம் உங்களுக்கே, அதற்கு முன் உங்கள் வீட்டிற்கு என்ன குறை என சொல்லுங்கள், இன்றே தீர்த்துவிடுகின்றேன்
வீரர்கள் அலெக்ஸாண்டர் பின்னால் அணிவகுத்துவரவும், உற்சாகமாக போரிடவும் இந்த தந்திரம்தாம் காரணாம். அதுவரை யாரும் செய்யா தந்திரம்
யுத்தம் என வந்துவிட்டால் தகவல் தொடர்பு மிக முக்கியம், அதற்கு கையில் காட்டும் சமிக்ஞை, குழாய் ஊதி செய்யபடும் சமிக்ஞை என பல விஷயம் அறிமுகபடுத்தபட்டது ( பாகுபலி படத்தில் இது அழகாக யுத்தத்தில் காட்டபடும், எல்லாம் அலெக்ஸாண்டர் கொடுத்தது)
எல்லாம் சரி, இனி பாரசீகததில் நுழையலாம், ஆசியா மைனரை தாண்டினால் பாரசீகம் (ஆசியா மைனர் என்பது இன்றைய துருக்கி), செல்லலாம் அதற்கு முன் தெய்வத்திடம் அனுமதி கேட்பது முக்கியம், கடவுளே பிராதானம்
டெல்பியும், அப்பல்லோவும் அவர்கள் பிராதன கடவுள், அந்த ஆலய சந்நிதியில் பூசாரிகளிடம் குறிகேட்டான் அலெக்ஸாண்டர்
அவர்கள் முணகினார்கள், மன்னா மாதம் சரியில்லை, இந்த மாதத்தில் நாட்டைவிட்டு வெளியே சென்ற யாரும் உயிரோடு கிரேக்கம் திரும்பமுடியாது, கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்
அலெக்ஸாண்டர் கேட்டான், இதுவரை யாரும் முயற்சித்திருக்கின்றார்களா?
இல்லை என பதில்சொன்னார்கள் பூசாரிகள்
ம்ம் இந்த மாதத்தில் செல்வதுதானே பிரச்சினை, சரி காலண்டரை மாற்றுங்கள், இந்த மாதத்தை முன்னால் போட்டு நல்ல மாதத்தை இம்மாததிற்கு மாற்றினால் சரிதானே , உங்களுக்கு மாதம்தானே பிரச்சினை?
மன்னன் பேச்சிற்கு மறுபேச்சு ஏது, ஆனாலும் மூத்த பூசாரி மனதிற்குள் சொன்னார், அலெக்ஸாண்டரை கடைசியாக பார்ப்பது போல் இருக்கின்றது
(அது பலித்தது என்பது வேறு விஷயம்)
படை ரெடி, அதற்கான சப்ளைசெய்யும் ஆட்களும் ரெடி, மருத்துவகுழு ரெடி இனி கிளம்பவேண்டியதுதான், எங்கே பாரசீகம்?
அதற்கு முன் கிரேக்கத்தை கடைசியாக பார்த்து சொன்னான், அலெக்ஸாண்டர், ஏ கிரேக்கமே உன் புகழை உலகெல்லாம் பரவசெய்யும் பெரும் பணியினை செய்யபொகின்றேன், கிரேக்க கடவுள் எனக்கு துணையிருக்கட்டும்
அப்பொழுது அவனுக்கொரு நுட்பம் புலபட்டது, நாம் வெளியேறிவிட்ட பின் அந்த தைரியத்தில் யாராவது மாசிடோனியாவினை கைபற்றிவிட்டால்? ஆம், நம்பகமான ஒருவனை அமர்த்திவிட்டு செல்லலாம், ஆண்டிபேட்டர் மற்றும் பார்மீனியோதான் நம்பதகுந்தவர்கள்
ஆண்டிபேட்டர் இங்கிருக்கட்டும், பார்மீனிய்யோ என்னோடு வரட்டும்
புக்கிலேசில் அலெக்ஸாண்டர் செல்ல, கூடவே பிரியாமல் பார்மினியோவும் சென்றார், தந்தை பிலிப்பிடம் இருந்தவர் இப்பொழுது மகன் அலெக்ஸாண்டரிடமும் இருக்கின்றார்
சொல்லிவிட்டு தன் புக்கிலேசில் துள்ளி ஏறினான், அதுவும் உற்சாகமாக கிளம்பிது,
(பாகுபலி கட்டப்பா எனும் பார்த்திரத்தில் நீங்கள் எதனை கண்டீர்களோ தெரியாது, ஆனால் பார்மீனியோ எனும் அற்புத வீர விசுவாசியின் பாத்திரம் அது, அதுவேதான்.)
அலெக்ஸாண்டர் படை கிளப்பிய புழுதி மேகமாய் திரண்டிருந்தது, பாரசீகம் தன் நிம்மதியினை தொலைக்க தயாராகிகொண்டிருந்தது
தொடரும்…