ஸ்டெல்லா புரூஸின் மறைவு
தமிழில் பல வகை எழுத்தாளர்கள் உண்டு, ஆரவாரமான சிலர் வெளியில் தெரிவார்கள், அமைதியான சிலர் தெரியமாட்டார்கள்
ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை எழுதி சம்பாதித்திருக்கவே மாட்டார்கள், தமிழில் எழுதி ஒரு பைசா சம்பாதிக்கமுடியாது என்பது பெரும் எழுத்தாளார்கள் ஒப்புகொண்டது
விவசாயினை விட மோசமான நிலையில் இருப்பவன் தமிழ் எழுத்தாளன்
அப்படி அந்த எழுத்தாளரும் இருந்தார், அவர் பெயர் ராம் மோகன் ஆனால் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார்
கவிதை எழுதுவார், கதை எழுதுவார் ஆனந்த விகடனில் கூட தொடர் எல்லாம் எழுதினார்
வாசகியே மனைவியானார், எல்லாம் நன்றாய் சென்றுகொண்டிருந்த காலத்தில் சிறுநீரக கோளாறில் மனைவி இறந்துவிட கொஞ்சநாளில் ஸ்டெல்லா புரூசும் தற்கொலை செய்துகொண்டார்
நல்ல எழுத்தாளன் வறுமையில் வாடுவதும், அல்பாயிசில் போவதும் மன்னர் காலத்தில் இருந்து, பாரதி காலம் என தொடர்ந்து இன்றுவரை நடைபெறுகின்றது, தமிழக சாபம் அது
எந்த தமிழ் எழுத்தாளனும் அதற்கு தப்பமுடியாது
அந்த ஸ்டெல்லா புரூஸின் மறைவு அன்று எழுத்துலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியடு, இன்று அவர் இல்லை
இந்த வேலைக்காரன் படத்தில் தம்பி ராமையாவிற்கு அந்த பெயரை இயக்குநர் ஏன் சூட்டினார் என தெரியவில்லை. என்ன காரணம் எனவும் தெரியவில்லை
அப்படம் கொடுத்த தாக்கத்தில் ஸ்டெல்லா புரூசின் எழுத்தும் அவரின் தற்கொலையும் கண்முன் வந்து போகின்றது