ஆட்சி அதிகாரம் நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும், நம் ஆட்சி அமையவேண்டும் அதிகாரம் நம் கைக்கு வரவேண்டும் என சீறியிருக்கின்றார் துரை வையாபுரி

அதாவது வைகோவின் கட்சி கம்பெனிக்கு புது தலைவராகியிருக்கும் வைகோவின் மகன்

பொதுவாக திமுக கூட்டணி கட்சியினரின் கோஷமே “ஸ்டாலின் கரங்களை வலுபடுத்துவோம், அடுத்த பிரதமர் ஸ்டாலின், ஸ்டாலின் ஆயிரம் கருணாநிதிக்கு சமம், உதயநிதி காந்தியின் வடிவம்” என இருக்க வேண்டும் என்பது கூட்டணி தர்மம்

அந்த தர்மத்தை மீறி பொங்குகின்றார் துரையார்

சில திமுகவினர் “ஓ… வைகோ மகனா.. நோ வொண்டர்” என நகரும் நிலையில் சிலர் இதனை கடுமையாக கருதுகின்றார்கள்

வைகோவினை நம்பவும் முடியாது, தான் பேச நினைப்பதை தன் மகன் மூலம் பேசுகின்றார் என்கின்றது இன்னொரு தரப்பு

இனி என்னாகும்?

ஒன்றும் ஆகாது, ஆங்காங்கே கண்டனம் தெரிவிக்கபடும், சில தகறாறுகளும் வரலாம்

ஒரு படத்தில் முதலாளி அப்பா கவுண்டமணியிடம் அடிவாங்கும் அப்பா செந்தில் தன் மகன், முதலாளி மகன் கவுண்டமணியிடம் அடிவாங்கியபின் இருவரும் கட்டி அழுவார்கள் அல்லவா? அப்படி தகப்பனும் மகனும் அழலாம்