தொழிலாளர் நலத்தை பற்றி யோசித்ததிலும் அவர்களுக்கான உரிமைகளை கொடுத்ததிலும் இந்துமதம் உன்னதமான இடத்தில் இருந்ததுகண்ணனை அது ஆடுமேய்ப்பனவாக காட்டிற்று, பலராம அவதாரத்தை உழவனாக காட்டிற்று
தொழிலாளரின் சிரமம் புரியவும் தொழிலின் அருமை சொல்லவும் சிவனே விறகுவெட்டியாகவும், மீனவணாகவும் இன்னும் பல தொழில்கள் செய்பவனாகவும் அது திருவிளையாடலில் சொல்லிற்றுதொழிலாளரை வல்லான் அடித்தால் அவனை இறைவன் அடிப்பான் என்பதை சொல்ல ஒரு நாடகமும் நடத்திற்று
அன்று அந்த வைகை மதுரையில் கரைபுரண்டு ஓடிகொண்டிருந்தது, ஆடிமாதத்தில் அந்நதி பிரவாகமாய் பொங்குவது வழமைஅந்த ஆற்றின் குறுக்கே அணையெல்லாம் கட்டாமல் ஆற்றையே கண்மாய்களுக்குள் பாயசெய்யும் பிரமாண்ட திட்டத்தை பாண்டிய மன்னன் அரிவர்த்தன பாண்டியன் முன்னெடுத்திருந்தான்
அது மிக மகத்தான திட்டம், வைகை வற்றா நதி அல்ல. அதனால் மழைகாலத்தில் பெருக்கெடுக்கும் நதியினை பல நூறு கண்மாய்களில் தேக்கி வைத்து விவசாயத்தை பெருக்கும் பெரும் திட்டம் அது, தேனி தொடங்கி ராமநாதபுரம் வரை நீண்ட மிகபெரிய கனவு அது
அந்த திட்டத்துக்கு எல்லா குடிகளும் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என சட்டமும் இயற்றினான், வயது வித்தியாசமின்றி எல்லோரும் வந்து வேலை செய்தாக வேண்டும்மதுரையில் எல்லா குடிகளும் அந்த பணியினை செய்ய கட்டாயபடுத்தபட்டபொழுது “வந்தி” எனும் மூதாட்டியும் அதற்கு தப்பமுடியாமல் போனது,
அவளோ பிட்டு செய்து விற்பவள்அன்றாடம் பிட்டு செய்து முதல் பிட்டை சோமநாதபெருமானுக்கு படைத்துவிட்டு விற்க செல்பவள், அரசனின் கட்டாய சேவை அவளையும் விடவில்லை, மழைகாலம் வேறு நெருங்கிகொண்டிருந்ததுஇதனால் அவளும் நிர்பந்திக்கபட்டாள், அந்த வயதான காலத்தில் மண் சுமந்து செல்ல கட்டாயபடுத்தபட்டாள்,
முதுமையாலும் வெயிலாலும் அவளால் முடியவில்லை எனினும் சேவர்களின் மிரட்டலில் அவளுக்கும் வேறுவழி தெரியவில்லைஒரு நாள் வழக்கம் போல் பிட்டை அவித்து முதல் பிட்டை சிவனுக்கு படைத்துவிட்டு குறிப்பிட நேர பணிக்கு ஆற்றங்கரைக்கு வந்தாள், மண் சுமக்க அவளால் முடியாமல் சோமநாத பெருமானே என கதறியபடி விழுந்தாள்அந்நேரம் ஒரு சிறுவன் வந்தான்,
பொன்னிற மேனியும் கலைமிகுந்த முகமும் கொண்ட அவன் “ஏன் பாட்டி சிரமபடுகின்றாய், உனக்காக நான் மண் சுமக்கட்டுமா? எனக்கு என்ன தருவாய்” என்றான்
“ஏழையான என்னிடம் பிட்டு தவிர என்னய்யா உண்டு?” என்றாள் பாட்டி. “சரி நான் உனக்காக மண் சுமப்பேன் நீ எனக்கு பிட்டு தரவேண்டும்” என்றான் சிறுவன்ஓடிவந்த சேவகர்கள் அவனை விசாரித்தார்கள், தான் கடைகோடி கிராமத்தான் எனவும் இப்பாட்டிக்கு பதிலாக வேலையினை ஏற்றுகொள்வதாகவும் கூறினான்
, சேவகர்கள் விட்டுவிட்டார்கள்அரச கட்டளைபடி உழைப்பதும் பாட்டியிடம் அவன் புட்டு வாங்குவதுமாக சில நாள் கடந்ததுகாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை இடைவிடாமல் கொடுக்கபட்ட உழைப்பு அது, உண்பது தவிர மாடுகளை போல் மக்கள் உழைத்து கொண்டே இருக்கவேண்டும்அந்த தொழிலாளர் பட்ட கொடுமை கொஞ்சமல்ல, கொஞ்சம் சுணங்கினாலோ ஓய்வு தேடினாலோ பிரம்பும் சாட்டையும் முதுகில் பாயும்ஓய்வு ஒழிச்சலே இல்லா கொடும் தொழிலாளர் துயரம் அதுஅந்த கொடுமையில் அன்று அந்த சிறுவன் மதியத்துக்கு பின் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டான்
அந்நேரம் அங்குவந்த அரிமர்த்தன பாண்டியன், ஆத்திரமுற்றான். எவ்வளவு பெரிய அரசன் நான், இந்நாட்டை முன்னேற்ற எவ்வளவு பெரிய திட்டம் வைத்திருக்கின்றேன், இவன் அதை அறியாமல் தூங்குகின்றான் இவனை தொடர்ந்து எல்லோரும் ஓய்வுகேட்டால் என்னாகும் என ஆத்திரத்தில் பிரம்பை எடுத்து கொண்டு ஓடினான்ஓடியவன் அந்த சிறுவனை எழுப்பி “ஏன் உறங்கினாய்?” என மிரட்டினான்
“ஒரு தொழிலாளிக்கு ஓய்வு இல்லாவிட்டால் எப்படி?தேவர்களுக்கே ஓய்வு காலம் உண்டு, சூரியன் கூட இரவில் உறங்கும், வரமருளும் தெய்வம் கூட ஓய்வில் திரையிட்டு மறைக்கபடும், ஆனால் தொழிலாளர் நிலை என்ன? பாவம் அல்லவா?ஆனால் இதை எல்லாம் சிந்திக்கும் திறம் உம்மிடம் இல்லை,
அதுவும் உணவும் இங்கு சரியில்லை, மக்களை வேலை வாங்க வேண்டியதுதான் , சோம்பேறிகள் இருக்கும் தேசம் உருப்படாது, அதே நேரம் மக்களை கசக்கி பிழிபவன் நல்ல அரசனாகவும் இருக்கமுடியாதுஏன் இந்த திட்டத்தை முன்பே செய்யமுடியாதா? இல்லை அடுத்தவருடம் மழையே வராதா? அரசனின் தெய்வத்துக்கு சமமானவன், அவனே மக்களை வதைத்தால் எப்படி?நான் ஓய்வெடுத்துவிட்டுத்தான் வருவேன், நாங்கள் இல்லாவிட்டால் அரசனே இல்லை” என சொல்லி முதுகை காட்டி படுத்துகொண்டான்
ஆத்திரமுற்ற மன்னன் “எனக்கே அறிவுரை சொல்கின்றாயா?” என ஓங்கி அவன் முதுகில் பிரமால் அடித்தான்அந்த அடி உலகின் எல்லா உயிர்கள் மேலும் விழுந்தது, அரசன் மேலும் விழுந்தது. அந்த சிறுவன் புன்னகை பூக்க பெரும் சிரிப்பு சிரித்தபடி மறைந்து போனான்வந்தியிடம் விசாரித்தால் அவள் அனுதினமும் சிவனுக்கு பிட்டு வைத்ததும், அந்த பிட்டினைத்தான் கேட்டு இவனும் வந்தது தெரிந்ததுமன்னன் அங்கேயே தெண்டனிட்டு சிவனை வணங்கினான்
தொழிலாளர்கள் நிலை அவனுக்கு புரிந்தது, தான் செய்த தவறும் தெரிந்தது, சிவனே வந்து தன் கண்ணை திறந்ததை உணர்ந்தான்அந்த சிறுவன் மேல் விழுந்த அடி எல்லா உயிர்கள் மேலும் விழுந்ததை எண்ணினான், இந்த உலகமே தொழிலாளர்களால் நிறைந்தது, உலக இயக்கமே தொழிலாளர்களால் ஆனது என்பது புரிந்ததுஅதுவரை பாண்டிய நாட்டு தொழிலாளர் கண்ட துயரம் அன்றோடு தீர்ந்தது,
அன்று ஆவணிமாத மூல நட்சத்திரமாய் இருந்ததுஅந்த நாளை அன்றே தன் தேசத்து மக்களின் விடுமுறை தினமாக அறிவித்தான், அன்று எல்லா தொழிலாளருக்கும் மன்னன் பரிசும் உடையும் வழங்குவான்அன்று முழுக்க அவர்கள் கொண்டாட்ட நாளாயிற்றுஅன்று வைகை கரையில் தங்க மண்வெட்டியும் தங்க கூடையில் கொண்டு அவனே ஆற்றங்கரையில் மண் சுமப்பான், அந்த வழமை இன்றுவரை அங்கு கொண்டாடபடுகின்றது
ஆம், உலகில் முதன் முதலாக தொழிலாளர் தினத்தை கொண்டாடியவன் தமிழக இந்து, அதை ஏற்படுத்தி கொடுத்தது மதுரை சொக்கநாதர், தானே வந்து தன் திருவிளையாடல் மூலம் மீட்டு கொடுத்தார்
மேற்குலகம் இன்று மேதினம் தொழிலாளர் தினம் என சொல்லட்டும், உண்மையான இந்துவுக்கு அது ஆவணி மாத மூல நட்சத்திர தினமேசில நூறு வருடங்கள் கூட மேற்குலகம் கொண்டிராத மேதின வரலாற்றினை விட பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழக இந்து கொண்டாடிய உழைப்பாளர் தினம் அர்த்தமும் ஆழந்த தத்துவமும் கொண்டதுSee translation0People reached8Engagements–Distribution scoreBoost post
771 commentLikeCommentShare
பிட்டுக்கு மண் சுமந்த கதை உங்கள் எழுத்துக்களில் அருமை. ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு தொழில் செய்தனர்….பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் தொழில் படைத்தல், காத்தல், அழித்தல்…. எனவே தொழிலாளர் தினம் என்பது கடவுளர்களும் கொண்டாடுவார்கள். நம் இந்து மதம் அந்த காலத்திலே எத்தனையோ விஷயங்களை எடுத்து கூறியுள்ளது.
எப்படி பிட்டுக்கு மண் சுமந்த கதையை விலாவாரியாக விவரித்து அதன் சுவையில் திளைக்குமாறு அழுத்தி அரசன் அறிவு பெற்றதை விளக்கி திருவிடையாடல் புராணம் தொடங்கி நவீன காலத்துக்கு வந்து பழக்கம் போல் மேற்கத்தியவர்கள் பழக்க வழக்கங்களைச் சாடும் நவீன யுக்தி Stanley Rajan க்கு மட்டும் கைவந்த கலை! இதற்குப் பெரும் பட்டம் ஏதும் வேண்டாம்.
நடப்புகள் அனைத்தையும் உள்வாங்கித் திறம்பட வெளிப்படுத்தும் திறமையுள்ள ஆற்றல், வெளிப்பாடு எனில் அது மிகையன்று! அதற்கு நிறைய ஆழ்ந்து சிந்திக்கும் , அலசும் திறன் வேண்டும்! அது நிரம்ப உள்ளது!
நம் பாக்யம் அவரது வாசகர்களாக இருப்பது, அனுபவிக்கும் , அலசும் தொழில் மட்டுமே!
மேலோட்டமாகப் பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் !
அவரது ஆழ்ந்த அறிவு, சிந்திக்கும் திறன், அலசும் குணம் go deep into the subject is awesome!
வாழ்க வளர்க தங்கள் எழுத்தாற்றல்’!