இந்தியாவின் மூன்றாம் குடியரசு தலைவராக ஹாகீர் உசேன் அவர்கள் பொறுப்பேற்ற தினம் இன்று

இந்த இடத்தில் ஒரு சில விஷயங்களை நினைவு கூறலாம்

பாகிஸ்தானை ஜின்னா பிரித்தெடுக்கும் பொழுது இந்தியாவில் இஸ்லாமியரும் தாழ்த்தபட்டோரும் வாழமுடியாது என்றும், தான் உருவாக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு எனினும் எல்லா இனமும் சாதியும் சரிக்கு சமம் அன்பாக ஒற்றுமையாக வாழும் முன்மாதிரி தேசம் என சொல்லி பலரை அழைத்தார்

அங்கு குடியேற அம்பேத்கருக்கும் அழைப்புவிடுக்கபட்டது, தாழ்த்தபட்டோரை பாகிஸ்தான் வரவேற்கின்றது அங்கு எல்லா சலுகைகளும் கிடைக்கும் என சொல்லபட்டது ஆனால் அம்பேத்கர் செல்லவில்லை

ஆனால் இன்னொரு தலித் தலைவர் சென்றார் அவர் பெயர் ஜோகேந்திரநாத் மண்டல், அவர் ஒருவிதமான இந்திய எதிர்ப்பு அல்லது தலித் புரட்சி மனப்பான்மை கொண்டவர், இந்தியாவில் தலித் மக்கள் வாழமுடியாது எனும் போதனையினை நம்பியவர் ஆனால் நிரம்ப கற்றவர்

இவர் பாகிஸ்தானுக்கு சென்றார் ஜின்னாவும் அவருக்கு அந்நாட்டின் முதல் நிதியமைச்சர் எனும் பதவி கொடுத்து தன் சமூக நீதியினை நிலைநாட்டினார்

பாகிஸ்தானில் ஒரு தாழ்த்தபட்டவர் நிதியமைச்சராகிவிட்டார் இந்தியாவில் என்னாயிற்று என ஏராளமானோர் கேட்ட கேள்விக்கு நேருவிடம் பதிலே இல்லை, அந்நேரம் அம்பேத்கர் அவசரமாக சட்டமியற்றும் வேலைக்கு ஒதுக்கபட்டிருந்தார்

கடைசிவரை அம்பேத்கருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பது வேறுவிஷயம்

அப்படி பாகிஸ்தானில் முதல் நிதியமைச்சராக இருந்த மண்டல் ஜின்னாவுக்கு பின் அந்நாட்டின் உண்மை முகத்தை உணர்ந்தார், அங்கு தலித் இந்துக்கள் மதமாற வேண்டும் அல்லது மிக சிறுபான்மையாக சலுகை இன்றிவாழவேண்டும் என்ற மிரட்டல் விடபட்டபொழுது கடுமையாக எதிர்த்தார்

விளைவு அவருக்கே மிரட்டல் வந்தது இன்னும் என்னவெல்லாமோ வந்தது

அலறி அடித்த மண்டல் இந்தியாவுக்கு 1950ல் அடைகலமாக வந்தார், இத்தேசம் அவரை ஏற்றுகொண்டு அடைக்கலம் கொடுத்தது, இதுதான் இந்தியா, ஒவ்வொரு தலித் புரட்சியாளர்களும் உணரவேண்டிய இந்தியா

அப்படி பாகிஸ்தானில் இருந்து ஒருவர் மூன்று ஆண்டுகளில் விரட்டபட்ட போதிலும் இந்தியா தன் குடியரசு தலைவராக ஒரு இஸ்லாமியரை 3ம் முறையே நியமித்தது, தொடர்ந்து கலாம் வரை அப்பதவியினை அலங்கரித்தார்கள்

இந்தியா என்பது அப்படிபட்ட தேசம்

எமது வருத்தமெல்லாம் இன்று தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் பொங்கும் புரட்சியாளர்களெல்லாம் 1940களில் பிறக்காமல் இருந்தார்களே என்பது

ஒருவேளை அன்று பிறந்திருந்தால் பாகிஸ்தானுக்கு அனுப்பி இந்தியா எவ்வளவு அருமையான நாடு என்பதை மண்டலுக்கு உணரவைத்ததை போல உணரவைத்திருக்கலாம்