90 வயது பெண்மணியான தியாகி சரஸ்வதி ராஜாமணி

Image may contain: one or more people, people standing and outdoor

கென்னடி சம்பந்தமான பைல்கள் வெளியிடபடும்பொழுது, நேதாஜி தொடர்பான பைல்களும் வெளியிடபடவேண்டும் என டெல்லியில் பேரணி நடந்தது

அதில் கலந்துகொண்ட 90 வயது பெண்மணியான சரஸ்வதி ராஜாமணி என்பவரை பற்றி யாரும் பேசவில்லை.

இத்தேசத்தின் மிகபெரும் தியாகி அவர், எந்த போராளிக்கும் குறையாத தியாகம் அவர் செய்தது. வரலாற்றில் வாழும்பொழுது மறைக்கபட்ட பெரும் தியாகி, இத்தேசம் இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லை

Image may contain: 1 person, standing and textஅவர் பர்மாவின் மிக செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் அப்பொழுது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. பர்மாவில் நேதாஜி நிதி திரட்டியபொழுது நகை, வைரம் என தன் வீட்டில் இருந்த அனைத்து செல்வங்களையும் கொட்டி கொடுத்தவர் அவர்

அஞ்சிய நேதாஜி அவர் வீட்டுக்கே சென்று, உங்கள் மகள் சிறுமி விவரம் தெரியாமல் அள்ளிகொடுத்துவிட்டாள், இதனை ஏற்றுகொள்ளுங்கள் என சொன்னார், ஆனால் ராஜாமணி தீர்க்கமாக மறுத்தார், வீட்டில் உள்ளோரும் அதனை ஆதரித்தனர்

இவ்வளவிற்கும் பர்மாவிலே பிறந்து வளர்ந்தவர் ராஜாமணி இந்தியாவின் விடுதலை அவருக்கு அவசியமே இல்லாதது, ஆனாலும் இந்திய ரத்தம் அவரை போராட அழைத்தது

அவர் கொட்டி கொடுத்த வைரம் அன்றே பல லட்சம் பெறுமானம் உள்ளவை

அதன்பின் ராஜாமணி நேதாஜியினை விட்டு அகலவில்லை, நேதாஜிபடையில் இணைந்தார், உளவுபடையில் பணியாற்றினார், ஆண் வேடமிட்டு பிரிட்டிசாரை உளவுபார்த்து அவர் கொட்டிய தகவல்கள் ஆச்சரியமான ரகம்

அந்த அளவு மிக சிறந்த உளவாளியாக இருந்தார்

பின் ஒரு கட்டத்தில் அவர் சிக்கிகொள்ள வெள்ளையர் சுற்றினர், காலில் துப்பாக்கி குண்டுபாய அட்டகாசமாய் தப்பி வந்தவர்

நேதாஜியுடன் இறுதிவரை போராடிய மிக சிலரில் அவரும் ஒருவர், ஜான்சி ராணி படை எனும் பெண்கள் படையில் இருந்தார்

இரண்டாம் உலகபோரில் ஜப்பான் தோற்றதும், நேதாஜி மர்மமானபின் ராஜாமணியின் குடும்ப சொத்துக்கள் எல்லாம் பிடுங்கபட்டு அகதியாய் சென்னை வந்தார் ராஜாமணி

ஆம் சுதந்திர இந்தியாவில் அவர் அகதியாகத்தான் வந்தார், எந்த இந்தியா சுதந்திரத்திற்காக போராடினாரோ அந்த இந்தியா அவரை தொடக்கதில் ஆதரிக்கவில்லை

இங்கேயே ஏக குழப்பத்தில் இருந்தது தேசம், பின்பு அவருக்கான பென்சன் வந்தது

மிக ஏழ்மையில் வசித்த அவரைபற்றி பின்பு செய்திகள் வந்தபொழுது ஜெயலலிதா அவருக்கு நிதி உதவி செய்தார், அதுவும் எப்படி?

சுனாமி நிதிக்கு தன் சேமிப்பினை எல்லாம் இவர் கொடுத்தபொழுது பலரின் கண்கள் கலங்கின. இத்தேசத்த்ற்காக நீர் கொடுத்தது போதாதா? 80 வயதிலுமா கொடுக்க வேண்டும்? அப்படி இத்தேசம் உங்களுக்கு என்ன செய்தது? ஏன் இப்படி ஒரு அக்கறை? என கேட்டபொழுது அது நேதாஜி எமக்கு கற்றுகொடுத்த பாடம் என அவர் சொன்ன பொழுது, ஜெயாவின் இதயமே கலங்கிற்று

அதன்பின் ராஜாமணி பற்றிய செய்திகள் இல்லை

இப்பொழுது நேதாஜி மர்மம் பற்றிய போராட்டத்தில் 90 வயதில் முதல் ஆளாக நிற்கும்பொழுது கண்கள் கலங்கின‌

காந்திக்கு தில்லையாடி வள்ளியம்மை மன உறுதி கொடுத்தார் என்றால், நேதாஜிக்கு வலிமை கொடுத்தது இந்த சரஸ்வதி ராஜாமணி எனும் பர்மா தமிழச்சி

தன் சொந்த வைரத்தை நாட்டிற்க்காக அள்ளிகொடுத்துவிட்டு அவர் அகதியாய் வந்த சென்னையில்தான் இன்று வருமானவரிதுறையினர் தங்கம் பதுக்கல், வைரம் பதுக்கல் என தேடுகின்றார்களாம்

எவ்வளவு பெரும் கொடுமை இது? நமக்கே கோபம் வருகின்றது அந்த அம்மணி இதனை எல்லாம் எப்படி தாங்கிகொள்கின்றார்.

இந்த வயதிலும் சிரித்தமுகம், தனிமை வெறுப்பு முதுமை எதுவும் அவரை சோரவிடவில்லை. மிக உறுதியான மனம் அவருக்கு ஆனாலும் நேதாஜி என சொல்லிவிட்டால் அழுகின்றார் என்கின்றார்கள்

அந்த அழுகையினை கண்டவுடன் நமக்கும் அழுகை வந்தால் அதுதான் நேதாஜியின் வெற்றி, அவரின் தியாகத்தின் வெற்றி

இந்த நாட்டிற்காக தன் இளமையினை தொலைத்த, வாழ்வினை செல்வத்தை எல்லாம் தொலைத்த அந்த மூதாட்டி டெல்லி தெருவில் நடக்கும்பொழுது இத்தேசம் புது இந்திய அழகியினை காட்டி மகிழ்கின்றது

எப்படிபட்ட நன்றிமிக்க தேசம் இது? நன்றிமிக்க ஊடகங்கள் இவை

உலக அழகி எவளாகவும் இருக்கட்டும், எம்மை பொருத்தவரைக்கும் இந்த தேசத்து வீர அழகி இந்த சரஸ்வதி ராஜாமணிதான்

( இப்படி இன்னும் ஏராளமான தியாகிகள் உள்ள நாட்டில்தான் “தியாக தலைவி” சின்னம்மா என்றொரு கோஷ்டியும் கிளம்புகின்றது, இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்

தன் நகைகளை நாட்டிற்காக கொடுத்தது தியாகமா? இல்லை முதல்வர் வீட்டில் சாம்பார் வைத்த வேலைக்காக மொத்தமாக சுருட்டி நகைபோட்டு சுத்தியது தியாகமா என்பதை தமிழகம் முடிவு செய்யட்டும்..)